Skip to main content

கொடுத்த பதவியை மறுக்கும் அ.தி.மு.க. முக்கிய புள்ளிகள்!!

Published on 14/09/2018 | Edited on 14/09/2018

ஜெ. மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பிளவு ஏற்பட்டு தற்போது எடப்பாடி, ஓ.பி.எஸ் ஒருங்கிணைப்பில் புதிய அ.தி.மு.க.வில் முக்கிய தலைவர்களுக்கு புதிய பொறுப்புகள் அறிவிப்பு வெளியிடுவதிலேயே பெரிய முட்டல் மோதல்களிலே இருந்து வருகிறது. அதனால் ஏற்கனவே் அறிவிப்பு பாதி வெளியாகி பாதியிலே நின்று போனது.

பதவியை மாற்றி வாங்கிய பரஞ்சோதி

 

admk



ஏற்கனவே வெளியிட்ட பட்டியலில் திருச்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சரும் ஓ.பி.எஸ். அணியை சேர்ந்த பரஞ்சோதிக்கு இளைஞர், இளம் பெண்கள் பாசறை மாநில செயலாளர் பொறுப்பு கொடுக்கப்பட்டது. அறிவிப்பு கொடுக்கப்பட்ட சில மணி நேரத்திலே ஓ.பி.எஸ்.யை தொடர்பு கொண்ட பரஞ்சோதி எனக்கு வயசாயிடுச்சு எனக்கு போய் இளைஞர் இளம் பெண்கள் பாசறையினா கிண்டல் பண்ண மாட்டாங்களா? நானே ஸ்டாலினை பல மேடைகளில் கிண்டல் பண்ணியிருக்கேன். அதுவும் இல்லாமல் மருத்துவர் ராணியோட பிரச்சனை இப்ப தான் முடிஞ்சது. அதனால் இந்த பதவி எனக்கு வேண்டாம் என்று மறுத்து விட சரி நா வேற பதவி வாங்கி தரேன் என்று சொல்லி 3 மாதங்களுக்கு பிறகு தற்போது கட்சியின் அமைப்பு செயலாளர் பதவி அறிவிக்கப்பட்டவுடன் பரஞ்சோதி சென்னைக்கு சென்று துணை முதுல்வர் ஓ.பி.எஸ் நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றார். 


பொறுப்பை மறுக்கும் இளவரசன்.

 

admk



அ.தி.மு.க. கட்சியில் திருச்சி அரியலூர் பகுதியில் முக்கியமான நபர் இளவரன். கட்சியில் திருச்சி விமானநிலையத்தில் பா.சிதம்பரத்தை இரும்பு ராடால் தாக்கியே கட்சியில் பெரிய பதவிகளை வகித்தவர். அவர் சார்ந்த சமூகத்தில் சீனியர்களில் இவர் முக்கியமானவர். ஆனாலும் தற்போது கட்சியில் முக்கிய பொறுப்பு எதுவும் இல்லாமல் இருந்தவர் சமீபத்தில் அ.தி.மு.க. தலைமையில் பேச்சுவார்த்தையின் முடிவில் உங்களுக்கு ஒரு நல்ல பொறுப்பு கொடுக்கிறோம் என்று வாக்குறுதி கொடுத்து வழி அனுப்பி வைத்தார்கள். அவருக்கு தற்போது எம்.ஜி.ஆர். மன்றத்தில் மாநில தலைவர் பதவி கொடுக்கப்பட்டது. பொறுப்பு அறிவித்த உடனே ஓ.பி.எஸ்.க்கும், எடப்பாடிக்கு போன் செய்து எனக்கு இந்த பொறுப்பு வகிக்க விறுப்பம் இல்லை. என்று சொல்லிட்டாராம். கட்சியில் கிளை அணிக்கு தேவையில்லை. கட்சியில் எங்கள் சமூகத்தில் நான் தான் சீனியர் எனக்கு இந்த பதவி வேண்டாம். என்று மறுத்து விட்டாராம்.

சீனியர்களை ஒருங்கிணைத்து அவரவர்கள் விருப்பத்திற்கு பொறுப்புகளை கொடுப்பதற்குள் அ.தி.மு.க. தலைமை திண்டாடிக்கொண்டிருக்கிறது. 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.