Skip to main content

கடலூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 1,000-ஐ தாண்டியது! பணியாளர்கள் இரண்டு பேர் கரோனா தொற்றால் உயிரிழந்ததால் ஜவுளிக்கடைக்கு 'சீல்'! 

Published on 30/06/2020 | Edited on 30/06/2020

 

cuddalore district coronavirus employees incident textile shop

 

கடலூர் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை நேற்று (29/06/2020) வரை 1,040 ஆக உள்ளது. இவர்களில் 640 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் விருத்தாசலத்தில் உள்ள பிரபலமான துணிக்கடையில் பணிபுரிந்த இருவர் கரோனா நோய்த் தொற்றால் பலியானதால் அந்தக் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

 

விருத்தாசலம் பேருந்து நிலையம் அருகே உள்ள வசந்தா டெக்ஸ்டைல்ஸ் என்ற அந்தத் துணிக்கடையில் 50- க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இக்கடையில் பணியாற்றி வந்த திருவள்ளூவர் நகரைச் சேர்ந்த இளங்கோவன் (வயது 53) என்பவர், கடந்த 27- ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். 

 

இறப்புக்குப் பின் அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் கரோனா இருப்பது உறுதியானது. அதேபோல் அக்கடையில் பணியாற்றிய மற்றொரு ஊழியரான தில்லை நகரைச் சேர்ந்த நாகராஜ் (வயது 63) என்பவரும் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கரோனா நோய்த் தாக்கத்தால் இறந்துள்ளார்.  இருவரின் பரிசோதனை முடிவுகள் நேற்று (29/06/2020) மாலை மாவட்ட நிர்வாகத்திடம் கிடைத்துள்ளது. 

 

cuddalore district coronavirus employees incident textile shop

 

அதையடுத்து நேற்றிரவு (29/06/2020) அந்தத் துணிக்கடைக்கு வட்டாட்சியர் கவியரசு, காவல்துறை ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் கடைக்கு சீல் வைக்கப்பட்டது. பிரபலமான துணிக்கடையில் பணியாற்றிய இருவர் கரோனாவால் உயிரிழந்த தகவல் வெளியானதால் பொதுமக்களிடையே பீதி உருவாகியுள்ளது. மேலும் கடந்த பத்து தினங்களாக அந்தத் துணிக்கடைக்கு வந்து சென்றவர்கள் விவரம் கண்டறிய சி.சி.டி.வி கேமரா பதிவை விருத்தாசலம் காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் கைப்பற்றி நோய்த்தொற்று ஏற்பட்டு இறந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறியும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.  

 

இதேபோல் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்த பெண் மருத்துவருக்கு நேற்று (29/06/2020) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு, கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டன. அதேசமயம் கடலூர் பொதுப்பணித்துறையில் கட்டிட பிரிவில் பணியாற்றிய அதிகாரி தலைமையில் 6 பேர் கடந்த வாரம் வேலூருக்கு ஒப்பந்தப் பணிகள் தொடர்பாகச் சென்று திரும்பியுள்ளனர்.  

 

http://onelink.to/nknapp

 

அவர்களில் கரோனா அறிகுறி தென்பட்ட மூன்று பேருக்கு பி.சி.ஆர். சோதனையில் நேற்று (29/06/2020) தொற்று உறுதி செய்யப்பட்டது. மூன்று பேருக்குத் தூக்கு உறுதி செய்யப்பட்டதால் அவர்களுடன் சென்ற மற்றவர்களுக்கும் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என அச்சப்படும் அலுவலக ஊழியர்கள் பொதுப்பணித்துறை அலுவலகத்தை மூடி சுகாதாரப் பணிகள் மேற்கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கின்றனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; உயரும் பலி எண்ணிக்கை!

Published on 01/01/2024 | Edited on 01/01/2024
Increasing Corona Virus; Rising toll

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு தற்போது கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகையான கொரோனாவான ஜேஎன் 1 வகை கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. 

இந்த நிலையில், நேற்று (31-12-23) வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.