Skip to main content

3 லட்சம் அபராதம்; 7 ஆண்டுகள் சிறை! - இளம்பெண்ணை ஏமாற்றிய வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு!

Published on 04/03/2021 | Edited on 04/03/2021

 

The court sentenced the person who cheated on the young girl


விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகில் உள்ளது திருக்கனூர். இந்த ஊரைச் சேர்ந்த 35 வயது இளைஞர் ராஜீவ்காந்தி. இவர், ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்துள்ளார். இவர், கடந்த 2012ஆம் ஆண்டு அவரது ஊருக்கு அருகில் உள்ள புதுக்குப்பம் பகுதிக்கு ஆடுகளை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது, இவரைப் போலவே புது குப்பத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனக்குச் சொந்தமான ஆடுகளை மேய்ப்பதற்கு வந்துள்ளார். இருவரும் தினசரி ஆடுகள் மேய்ப்பதற்காகக் காட்டுப் பகுதிக்குச் சென்றுள்ளனர். இதன், காரணமாக இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர்.  

 

இந்நிலையில், அந்த இளம் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறிய ராஜீவ் காந்தி, தனிமையில் ஆடு மேய்க்கும் காட்டுப் பகுதியில் அவருடன் நெருங்கிப் பழகி தனிமையில் இருந்து வந்துள்ளார். இதனால், அந்தப் பெண் கருத்தரித்துள்ளார். அந்தப் பெண்ணுக்கு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது. இதையடுத்து அந்த இளம் பெண்ணின் பெற்றோர், உறவினர்கள் ராஜீவ் காந்தியை சந்தித்துத் திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளனர். ஆனால், ராஜீவ் காந்தி, அந்த இளம் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று மறுத்துள்ளார்.  

 

ஊர்மக்கள், அந்த இளம்பெண்ணின் உறவினர்கள் எல்லாம் சென்று ராஜீவ் காந்தியிடம் திருமணம் செய்து கொள்ளுமாறு பேசியுள்ளனர். அவர் அப்போதும் மறுத்துள்ளார். அதனால் அந்த இளம் பெண், கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், ராஜீவ் காந்தி மீது புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில், ராஜீவ்காந்தி மீது வழக்குப் பதிவு செய்த மகளிர் போலீஸார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது சம்பந்தமான வழக்கு விசாரணை, விழுப்புரம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

 

வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி சாந்தி, நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பில், ராஜீவ் காந்திக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும் மூன்று லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். அந்த மூன்று லட்சம் அபராதத் தொகையைப் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்க வேண்டும் என்றும் அந்தத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். அபராதத் தொகையைக் கட்ட தவறினால், மேலும் 6 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞர் ராதிகா செந்தில், திறமையாக வாதாடியுள்ளார். சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ராஜீவ்காந்தியை போலீசார் பலத்த பாதுகாப்புடன் கடலூர் மத்திய சிறையில் கொண்டு சென்று அடைத்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி காலமானார்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Vikravandi DMK MLA Pugalenthi passed away!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (71). இந்த நிலையில், விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை. ரவிக்குமார், கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோரை ஆதரித்து விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று (05-04-24) இரவு வந்திருந்தார். 

இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று முன் தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார். அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று (06-04-24) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர். புகழேந்தி மறைந்த செய்தியை அறிந்து மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் பெரும் திரளாக கூடியுள்ளனர். மேலும், அமைச்சர் பொன்முடி மருத்துவமனைக்கு வந்து, மறைந்த புகழேந்திக்கு அஞ்சலி செலுத்தினார். 

Next Story

இளம் பெண்ணிற்குத் தாலி கட்டிவிட்டு இளைஞர் தற்கொலை; சிக்கிய உருக்கமான கடிதம்!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
young man lost their life by tying a thali to a woman

விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூர் அருகே வசிப்பவர் ராதாகிருஷ்ணன். இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு வங்கியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இதனிடையே 26 வயது இளம்பெண் ஒருவரும் ராதாகிருஷ்ணனும் 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ராதாகிருஷ்ணனிடம் கூறி இருக்கிறார். அதற்கு ராதாகிருஷ்ணன் தனது தாயார் இறந்து சில மாதங்களே ஆகிறது. அதனால் ஒரு வருடம் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி இருக்கிறார்.

இந்த நிலையில்தான் அந்த பெண் நேற்று முன் தினம் விழுப்புரம் மகளிர் காவல்நிலையத்தில் ராதாகிருஷ்ணனை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு புகார் கொடுத்துள்ளார்.அதன் பெயரில் போலீசார் ராதாகிருஷ்ணன் மற்றும் இளம்பெண் இருவர் வீட்டாரிடம் பேசி  சமாதானம் செய்துள்ளனர். அதனை தொடர்ந்து மாலை போலீஸ் நிலையம் அருகே உள்ள கோவிலில் ராதாகிருஷ்ணனுக்கும் அந்த பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து, இருவரும் பெண் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இரவு சிறிது நேரம் தங்கியிருந்த ராதாகிருஷ்ணன் பெண்ணிடம்  தனது வீட்டிற்கு சென்று விட்டு காலையில் வந்து உன்னை கூட்டிச்செல்கிறேன் என்று தெரிவித்துவிட்டு சென்றிருக்கிறார். இந்த நிலையில்தான் ராதாகிருஷ்ணன் காலையில் தனது விட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராதாகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதன்  பிறகு விசாரணை செய்த போலீசாரிடம் ராதாகிருஷ்ணன் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில், “என்னை மன்னித்து விடுங்கள் என்னை வற்புறுத்தி எனக்கு விருப்பம் இல்லாமல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று இந்த திருமணத்தை செய்து வைத்துள்ளார்கள். இது எனக்கு பிடிக்கவில்லை. என்னையும் என் குடும்பத்தாரையும் கொன்று விடுவேன் என மிரட்டினார்கள். எனது மரணத்திற்கு அவர்கள் தான் காரணம் எனக்கு விருப்பம் இல்லாத வாழ்கையை  எப்படி வாழ முடியும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து தனது மகனின்  மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸில் புகார் அளிக்க, 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.