Skip to main content

மக்களின் தேவைக்கேற்ப உணவு பொருட்கள் உள்ளதா? ஈரோடு எஸ்.பி.ஆய்வு!

Published on 08/04/2020 | Edited on 08/04/2020

கரோனா வைரஸ் உலக அளவில் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. நானே வல்லரசு என்று மார்தட்டிய அமெரிக்கா முதல், முன்பு இந்தியாவை தனது காலனி ஆதிக்கத்தில் அடிமைப்படுத்திய இங்கிலாந்து வரை தனது கோர முகத்தை காட்டி உயிர்களை பறித்து வருகிறது கரோனா.

 

 corona virus - food products issue - Erode sp  inspection  corona virus - food products issue - Erode sp  inspection



இதில் இந்தியா மிகப்பெரிய எச்சரிக்கையுடன் தனது அனைத்து நகர்வுகளையும் நடத்திவருகிறது. உலக அளவில் இந்த வைரஸ் தாக்கம் சமூக பரவலாக தொடங்கியிருந்தாலும் இந்தியாவில் அது நிகழவில்லை. அதற்கு காரணம் மத்திய அரசும், ஒவ்வொரு மாநில அரசுகளும் இதில் தீவிரமான கவனம் செலுத்தி வந்ததுதான். குறிப்பாக தமிழகத்தில் இதன் தாக்கம் தொடங்கியவுடன் மாநில அரசும், அரசுத்துறை அதிகாரிகளும் மிகுந்த கவனத்துடன் இதை எதிர் கொண்டார்கள். 

ஒட்டு மொத்த அரசு நிர்வாகமும் இந்த வைரஸ் தொற்றை எதிர்த்து ஒரு போராக நடத்திவருகிறது. ஆகவேதான் தமிழகத்தில் இந்த வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் எண்ணிக்கையில் கூடினாலும் பாதிப்பில் குறைந்து வருகிறது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்திற்கு இந்த வைரஸ் தொற்று வந்ததற்கான காரணம் வெளி மாநிலம் சென்று வந்தவர்களும், வெளிநாட்டிலிருந்து இங்கு வந்தவர்களும்தான்.  இதை மாவட்ட நிர்வாகம் ஆரம்பத்திலேயே கண்டுபிடித்ததால் அதற்குத் தேவையான எச்சரிக்கை நடவடிக்கையை மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் இணைந்து பணியாற்றியது.
 

nakkheeran app



இந்த வைரஸ் தொற்று மக்களிடம் பரவாமல் இருக்க அதற்குத் தேவையான நடவடிக்கைகளை இரு துறைகளும் செய்து வந்தன. இதன் காரணமாகவே தொடக்கத்தில் வந்த எண்ணிக்கையைப் போல் தற்போதும் அது கூடாமல் குறிப்பாக, ஈரோடு மாவட்டத்தில் இந்த வைரஸ் தாக்குதல் 32 பேர் என்ற அளவிலேயே தற்போதும் நீடித்து வருகிறது. இதில் பலபேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர் சிலர் குணமான நிலையிலும் மருத்துவமனையில் இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்தியாவில் தற்போது உள்ள ஊரடங்கு உத்தரவு மீண்டும் நீட்டிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என உயர் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு உள்ளது. இதற்கிடையில் ஈரோடு மாவட்ட மக்கள் உணவுப் பொருள்கள் தங்களுக்குத் தேவையானதை வாங்குவதற்கு இந்த மாவட்டத்திலுள்ள விற்பனை நிலையங்களில் இருப்பு உள்ளதா என சோதித்துப் பார்ப்பதற்காக ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன், இன்று ஈரோட்டில் உள்ள டிபார்ட்மெண்ட் ஸ்டோர் மற்றும் மொத்த வணிக நிறுவனங்களில் ஆய்வு செய்துள்ளார்.

இந்த ஆய்வு நடவடிக்கை மேலும் இரண்டு நாட்களுக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து நீடித்தால், மக்களின் தேவைகளுக்கு உணவுப் பொருட்கள் இங்கு இருப்பு உள்ளதா, இல்லை வேறு பகுதியிலிருந்து வரவழைக்க வேண்டுமா என்பதற்கான ஆய்வுதான் இது என்கிறார்கள் அதிகாரிகள். மக்களுக்கு தேவையான உணவு பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் கொடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. அதையே அதிகாரிகள் நிறைவேற்றுவார்கள் என்று அரசு பணியாளர்கள் கூறுகிறார்கள்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

அடர்ந்த வனப் பகுதியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
girl child was born in the 108 ambulance near Anthiyur in a thick forest area at night

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுக்கா, ஓசூர் அருகே சின்ன செங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரசு என்கிற சரசா (27). சரசு நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 9:45 மணியளவில் சரசுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் தேவர்மலையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் குழுவினருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று சரசை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது மணியாச்சி பள்ளம் என்ற அடர்ந்த வனப் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது சரசுக்கு பிரசவ வலி அதிகரித்தது. நிலைமையைப் புரிந்து கொண்ட மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு சரசுக்கு பிரசவம் பார்க்க தொடங்கினர். இதில் சரசுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  108 மருத்துவ குழுவினருக்கு சரசு மற்றும் அவரது உறவினர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்