Skip to main content

கரோனா பரவல்: திருச்சி விமான நிலைய இயக்குநருக்கு தொற்று உறுதி

Published on 20/01/2022 | Edited on 20/01/2022

 

Corona spread: Infection confirmed to Trichy airport director

 

தமிழகத்தில் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அனைத்து விமான நிலையங்களிலும் கடும் சோதனைக்குப் பின்னரே விமானத்தில் பயணிக்க பயணிகளை அனுமதித்து வருகின்றனர்.

 

அதே போல் திருச்சி சர்வதேச விமான நிலைய இயக்குநர் தர்மராஜ், வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அவ்வப்போது பயணிகளின் வசதிகள் குறித்து விமான நிலையத்திற்குள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டுள்ளார். இதனையடுத்து நேற்று அவருக்கு காய்ச்சல் மற்றும் சளி தொந்தரவு ஏற்பட்டுள்ளது. பின்னர் கரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வீட்டில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

போலி பாஸ்போர்ட்; விமான நிலையத்தில் வைத்து காப்பு போட்ட காவல்துறை

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
Returnee arrested on fake passport at Trichy airport

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இம்மிகிரேஷன் அதிகாரி சுஜிபன் தலைமையிலான அதிகாரிகள் பயணிகளை சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது மலேசியாவில் இருந்து திருச்சிக்கு வந்த பயணிகளை அவர்கள் சோதனைக்கு உட்படுத்தினர்.

அப்போது தஞ்சாவூர்  ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் (39) என்பவரின் பாஸ்போர்ட்டை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அதில் போலியான அரசு முத்திரை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து போலீசார் அவரைப் பிடித்து ஏர்போர்ட் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் ஆனந்தராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story

நூதன முறையில் கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல்

Published on 02/06/2023 | Edited on 02/06/2023

 

trichy international airport singapore cargo flight gold issue

 

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று இரவு சிங்கப்பூரிலிருந்து இண்டிகோ விமானம் வந்து சேர்ந்தது. இதில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

 

அதில் ஒரு ஆண் பயணியை சோதனை செய்தபோது அவர் கொண்டு வந்த உடைமையில் கார் ஆடியோ சிஸ்டமில் மறைத்துக் கொண்டு வரப்பட்ட 10 தகடு வடிவிலான 480 கிராம் தங்கத்தையும், அதேபோல் அவர் கைப்பையில் கொண்டு வந்த 180 கிராம் எடையுள்ள தங்க சங்கிலியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

 

மேலும் அந்தப் பயணியிடம் இருந்து மொத்தம் 638 கிராம் எடையுள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு 38 லட்சத்து 73 ஆயிரத்து 936 ரூபாய் என அதிகாரிகளால் மதிப்பிடப்பட்டது. இந்த சம்பவதால் திருச்சி விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.