Skip to main content

கொரோனா செட்டில்மெண்டில் பூந்துவிளையாடும் அதிகாரிகள்! பாதிக்கப்பட்ட வியாபாரிகள் கவலை! 

Published on 25/07/2022 | Edited on 25/07/2022

 

Corona settlement thiruvannamalai district

 

கொரோனா இரண்டாம் அலையின்போது மருத்துவமனை மற்றும் பாதுகாப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு மூன்று வேளை சத்தான உணவு, சோப்பு, போர்வை, தின்பண்டங்கள், குடிநீர், நோயாளிகளை அழைத்துவர, அழைத்து சென்றுவிடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட வாகன வாடகை தொகைகள் போன்றவற்றை சம்மந்தப்பட்ட ஹோட்டல்கள், சூப்பர் மார்க்கெட்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகமும், பொதுசுகாதார துறையும் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. குறிப்பாக செய்யார் சுகாதார மாவட்டத்தில் வழங்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.

 

2021ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வந்தது. புதிய ஆட்சி அமைந்ததும் தங்களது பணம் வந்துவிடும் என இவர்கள் நம்பினார்கள். அதிகாரிகளோ, நீங்க செலவு செய்தது போன ஆட்சி. இது புதிய ஆட்சி. அதனால் அரசுக்கு அறிக்கை அனுப்பி நிதி ஒதுக்கீடு பெற்று பணத்தை வாங்கிதருகிறோம் எனச்சொல்லியுள்ளனர். சப்ளை செய்தவர்களும் சரியென ஏற்றுக்கொண்டுள்ளனர். நிர்வாக ரீதியாக மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறையில் இடமாறுதல்கள் நடைபெற்றதால் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதியதாக வந்த அதிகாரிகள், ‘நீங்க சப்ளை செய்திங்கன்னு நாங்க எப்படி நம்பறது, அதெல்லாம் முடியாது’ என இழுக்கடித்துள்ளனர். ஒருவழியாக பேசி பொதுசுகாதாரத்துறையில் உள்ள அதிகாரிகளை சரிக்கட்டி சம்மதிக்கவைத்துள்ளனர். அதற்கே மாதங்கள் கடந்த நிலையில், கடந்த மாதம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு கொரோனா நோயாளிகளுக்கு உணவு உட்பட பொருட்கள் சப்ளை செய்தவர்களை அழைத்த அதிகாரிகள், நீங்கள் தந்தள்ள பில் தொகையில் இருந்து 50 சதவிதம் தருகிறோம், வாங்கிக்கொள்ளுங்கள். மீதி தொகையை நிதி ஒதுக்கீடு வந்தபிறகு தருகிறோம். நீங்கள் அதனை ஒப்புக்கொண்டு எழுதி தந்தால் 50 சதவித தொகையை தருகிறோம் எனச் சொல்லியுள்ளனர். சப்ளை செய்தவர்களும் குழப்பமான மனநிலையில் எழுதி தந்துள்ளதாக கூறப்படுகிறது.

 

இதுகுறித்து பேசும் பாதிக்கப்பட்ட வியாபாரிகள், அதிகாரிகளை நம்பித்தான் கடனுக்கு பொருட்களை வாங்கி நோயாளிகளுக்கு தேவையானதை சப்ளை செய்தோம். தேர்தல் வந்துவிட்டது பணம் பிறகு தருகிறோம் என்றார்கள் மருத்துவ அதிகாரிகள். நாங்களும் சரியென ஏற்றுக்கொண்டோம். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் ஆட்சியாளர்களுக்கு கமிஷன் தரவேண்டும் எனச்சொல்லி எங்களை மிரட்டினார்கள். லட்சங்களில் பாக்கி தொகை வரவேண்டியுள்ளது. இரண்டாம் அலை முடிந்து, மூன்றாம் அலை முடிந்து, நான்காம் அலை தொடங்கியுள்ளது. இப்போதுவரை எங்களுக்கு தரவேண்டிய தொகையை தராமல் அதிகாரிகள் இழுத்தடித்துவந்தவர்கள். இப்போதுவந்து 50 சதவிதம் தருகிறோம் எனச்சொல்லி எழுதி வாங்கிக்கொண்டுள்ளார்கள் என்றார்கள்.

 

கொரோனாவின்போது உணவு சப்ளை செய்த ஹோட்டல்களுக்கு பல லட்சம் பாக்கி வைத்திருந்தது திருவண்ணாமலை மாவட்ட சுகாதாரத்துறை. நிதியில்லை, நிதியில்லை எனச் சொல்லி வியாபாரிகளை அலைக் கழித்துவந்துள்ளனர் அதிகாரிகள். பின்னர் டீலிங் பேசப்பட்டு முக்கிய அதிகாரி ஒருவருக்கு சில லட்சம் அவரது கமிஷனாக தரப்பட்டபின்பு, மாவட்ட உயர் அதிகாரி ஒருவர் சில ஹோட்டல்களுக்கு தரவேண்டிய தொகையை முழுவதும் செக் போட்டு தந்துள்ளார். இப்படி கொரோனா பில்லில் கமிஷன் அடிப்பதை அதிகாரிகள் இன்னும் நிறுத்தவில்லை என புலம்புகிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பெயரே சொல்லி அழைக்க தானே'- அமைச்சரின் பதிலால் தலைகுனிந்த அலுவலர்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'Just call me by name' - the minister the minister's reply

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

முன்னதாக திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சே.கூடலூர் கிராமத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். அப்போது அவரது பெயரை வாக்குச்சாவடியில் அமர்ந்திருந்த அலுவலர் ஜெயராணி, ஓட்டு போடுபவர் யார் என்பதை அங்குள்ள பூத் ஏஜன்ட்கள் தெரிந்துக்கொண்டு தங்களிடம் உள்ள பட்டியலில் குறித்துக் கொள்வதற்காக பெயரை குறிப்பிடுவார். அதன்படி வாக்களிக்க வந்த அமைச்சர் வேலுவின் பெயரை சத்தமாக கூறினார். உள்ளே அமர்ந்திருந்த வாக்குசாவடி முகவர்கள் அனைவரும் குறித்துக் கொண்டனர். அமைச்சர் வேலுவும் ஸ்லீப்பில் கையெழுத்து போட்டுவிட்டு, விரலில் மை வைத்துக் கொண்டு நேரடியாக சென்று வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனது வாக்கினை செலுத்தினார்.

அப்போது அங்கிருந்த மற்றொரு அலுவலர், அந்த பெண் அதிகாரியிடம் அமைச்சரை பெயர் சொல்லி அழைத்ததை அவர் தவறாக எடுத்துக்கொள்வார், அவரிடம் சாரி கேளுங்க என திரும்ப திரும்ப வலியுறுத்தினார். பயந்துபோன அந்த பெண் அலுவலரும் ஓட்டு போட்டுவிட்டு வந்த அமைச்சரிடம் சென்று,  சாரி சார் என்றார். அமைச்சர் எதுவும் புரியாமல், ஏன் என கேட்டபோது, உங்கள் பெயரைச் சொல்லி குறிப்பிட்டதும், நீங்கள் தேர்தல் அலுவலர் உங்களது பணியை நீங்கள் செய்கிறீர்கள், பெயர் என்பது அழைப்பதற்காக தானே இதில் என்ன இருக்கிறது? இதற்கு எதற்கு நீங்கள் சாரி கேட்கிறீர்கள் அதெல்லாம் தேவையில்லையம்மா என கூறிவிட்டு சென்றார்.

சாரி கேட்கச் சொன்ன அந்த வருவாய்த்துறை அலுவலர் தலை குனிந்தபடி அங்கிருந்து நகர்ந்துவிட்டார். அந்த பெண் அலுவலர் பெருமிதமாக அமர்ந்து பணியை செய்யத் தொடங்கினார். 

 

படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்.

Next Story

விறு விறு வாக்குப்பதிவு; இளையோர்கள் ஆர்வமாக வருகை!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Youth showing interest in voting in Tiruvannamalai

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 754533 பேரும் பெண் வாக்காளர்கள் 778445 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 121 பேர் என 1553099 நபர்கள் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தொகுதியில் மொத்தம் 1722 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தொகுதியில் இன்று காலை சரியாக 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்கியது. வேட்பாளர்கள் தங்களுக்காக வாக்குபதிவு மையத்துக்கு சென்று தங்களது வாக்குபதிவினை செலுத்தினர்.

திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் அண்ணாதுரை அவரது தேவனாம்பட்டு கிராமத்தில் தனது குடும்பத்தோடு சென்று முதல் வாக்கினை செலுத்தினார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் தென்மாத்தூர் கிராமத்திலும் வாக்கு செலுத்தினர். பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமனுக்கு அவர் போட்டியிடும் தொகுதியில் ஓட்டு இல்லாததால் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அவரது சொந்த ஊருக்கு சென்று வாக்களித்தாக கூறப்படுகிறது.

ஜனநாயக கடமையாற்ற காலையிலேயே இளையோர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துவருகின்றனர்.