Skip to main content

ஈரோட்டில் கரோனா இறப்பு... -மண்ணுக்குள் செல்லக்கூட போராட்டம்!!

Published on 09/07/2020 | Edited on 09/07/2020
corona in erode

 

ஈரோட்டில் இன்று கரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பலனின்றி இளம் வாலிபர் உயிரிழந்தார், அவருக்கு வயது 33. இதனால் ஈரோடு மாவட்டத்தில் கரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கரோனாவால் இறந்த இளைஞர் உடலை அடக்கம் செய்ய மக்கள் எதிர்ப்பு தெரிவித்தது அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஈரோடு மூலப்பாளையம் காந்தி நகர் என்ற பகுதியில் வசித்த அந்த இளைஞருக்கு திருமணமானமாகி விட்டது. இந்த நிலையில் சென்ற 5 ம் தேதி இவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டு, ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரியான பெருந்துறை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி 9 ந் தேதி அதிகாலை உயிரிழந்தார். ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்த இந்த நபர் ஈரோடு, பெருந்துறை சாலையில் உள்ள ஒரு தனியார் ஷாப்பிங் மாலில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு மனைவியும், ஐந்து வயது குழந்தையும் இருக்கிறார்கள். 

 

corona in erode


இவரது உடலை அடக்கம் செய்ய வெண்டிபாளையம் என்ற பகுதியில் உள்ள கல்லறை தோட்டத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் அவரின் உறவினர்களோடு எஸ்.டி.பி.ஐ. மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் 9 ந் தேதி மதியம் எடுத்து வந்தனர். முழு கவச உடையுடன், கரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்ய எடுத்து செல்வதை பார்த்த அந்தப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து, கல்லறை தோட்டத்திற்கு திரண்டு வந்தனர். வந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு தன்னார்வலர்கள் மீது கல்வீசி தாக்குவதற்கும் முயன்றனர். உடலை அடக்கம் செய்ய முடியாமல் ஆம்புலன்ஸில் வந்தவர்கள் தவித்து வந்தனர். 

தொடர்ந்து அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்திலும் அங்கு  ஈடுபட்டனர். இந்த தகவல் மொடக்குறிச்சி காவல் நிலையத்திற்கு சென்றதும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுப்புரத்தினம், மணிகண்டன், செல்வம் மற்றும் போலீசார் அங்கு வந்து மக்களிடம் நீண்ட நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், மக்களோ தொடர்ந்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்க, அந்த இடைப்பட்ட நேரத்தில் கரோனாவால் உயிரிழந்தவரின் அந்த உடலை அவரின் உறவினர்கள், தன்னார்வலர்களால் அதிரடியாக அடக்கம் செய்தனர். இறுதியில் போலீசார் மக்களை  சமாதனப்படுத்தி, கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த நபரின் உடல் உரிய பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்துதான் அடக்கம் செய்யப்படுகிறது. இதனால், உங்கள் பகுதிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று உறுதி கொடுத்தனர். வேறு வழியின்றி பொதுமக்களும்  அங்கிருந்து கலைந்து சென்றார்கள். கரோனாவால் அநியாயமாக இறந்தவர்கள் செத்த பின்பு மண்ணுக்குள் செல்லக்கூட போராட வேண்டியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி மரணம்; நீடிக்கும் மர்மம் - போலீஸ் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
College student mysterious passed away in Thiruvarangam

திருவரங்கம் ராஜகோபால நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் கோபி என்கிற கோவிந்தராஜன் (வயது 60). இவர் திருவரங்கம் கோவிலில் சுவாமிக்கு வரக்கூடிய துணிகளை ஏலம் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ஜெய்ஸ்ரீ(வயது 18). திருச்சியில் உள்ள கல்லூரியில் பி.ஏ ஆங்கில பட்டப்படிப்பு முதலாமாண்டு படித்து வந்தார். இதற்கிடையில், இவர் திருவரங்கத்தைச் சேர்ந்த கிரோஷ் என்ற வாலிபரைக் காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கீழ சித்திர வீதியில் உள்ள காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து குதித்து ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை கோவிந்தராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவரங்கம் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெண்ணிலா மற்றும் போலீசார்  காதலன்  மற்றும் காதலனின் நண்பர்கள் உள்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இரண்டு பேர் சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் தெரிய வந்துள்ளது.அதனால் இது திட்டமிட்ட கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்பது குறித்தும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காதலனின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து கல்லூரி மாணவி குதித்து தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் திருவரங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது