Skip to main content

தொடர்ந்து ரெய்டுக்குள்ளாகும் தங்கமணி! 

Published on 21/12/2021 | Edited on 21/12/2021

 

 constant raid Thangamani

 

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை தனது ரெய்டை நடத்தியது. அதன்படி நேற்று (20.12.2021) சேலம், நாமக்கல், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களில் அவரது நண்பர்கள், உறவினர்கள், ஆடிட்டர், கட்டுமான நிறுவனங்கள், வீடுகள் என 14 இடங்களில் வருமான வரித்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரெய்டு நடத்தினர். 

 

ஈரோட்டில் மூன்று இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று காலைமுதல் திடீர் சோதனையிட்டனர். கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள், உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் என கடந்த 15ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மொத்தம் 69 இடங்களில் திடீர் சோதனை நடத்தினார்கள். அதில், ரூபாய் இரண்டு கோடியே பதினாறு லட்சம் ரொக்கம், 1.130 கிலோ தங்க நகைகள், 40 கிலோ வெள்ளி பொருட்கள், மற்றும் பல கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் போன்றவற்றைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினார்கள்.

 

இந்நிலையில், 69 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கிடைத்த ஆதாரங்களை அடிப்படையாக வைத்து நேற்று தங்கமணியின் நண்பர்கள், உறவினர்கள் வீடுகள் என ஈரோடு, நாமக்கல், சேலம் போன்ற மாவட்டங்களில் 14 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் காலைமுதல் அதிரடி சோதனையிட்டனர். 

 

ஈரோடு நகரில் ஈரோடு சத்தி ரோடு அருகே உள்ள சந்தான்காடு பகுதியில் பெயிண்ட் மற்றும் கண்ணாடி விற்பனை உரிமையாளரான குமார் என்ற கோபாலகிருஷ்ணன் வீடு, வில்லரம்சம்பட்டி அருகே ஒன்டிக்காரன்பாளையம் ஐஸ்வர்யா கார்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தங்கமணியின் மகன் தரணிதரனின் கல்லூரி நண்பரான செந்தில்நாதன் வீடு, செங்கோடம்பள்ளம் அருகே உள்ள சக்தி நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பாலசுந்தரம் என்பவரது வீடு என மூன்று  இடங்களில் போலீசார் சோதனை செய்தனர். 

 

கோபாலகிருஷ்ணன் வீட்டில் ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரும், செந்தில்நாதன் வீட்டில் திருப்பூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரும், பாலசுந்தரம் வீட்டில் கோவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரும் தொடர் சோதனையில் ஈடுபட்டனர். கடந்த 15ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட சொத்து மற்றும் வரவு செலவு கணக்குகளின் முக்கிய ஆதாரங்களைக் கொண்டு கோபாலகிருஷ்ணன், செந்தில்நாதன்,  பாலசுந்தரம் ஆகியோரது வீடுகளில் சோதனை நடத்தி, கணக்கில் வராத பல லட்சம் மதிப்பிலான முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

 

இதேபோல் நாமக்கல்லில் கட்டுமான நிறுவன உரிமையாளர் வீடு, அலுவலகம், உறவினர் வீடு என 9 இடங்களிலும், பள்ளிப்பாளையத்தில் தங்கமணியின் ஆடிட்டர் அலுவலகம், சேலத்தில் ஒரு உறவினர் வீடு என தொடர் சோதனையில் ஈடுபட்டனர்.

 

தங்கமணிக்கு பினாமிகள் மட்டும் 30 பேருக்கு மேல் இருப்பதாகவும், ஒவ்வொருவர் பெயரிலும் லட்டர் பேடு கம்பெனிகள், நூற்றுக்கணக்கான கோடிகள் வரவு செலவு நடத்தியதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். பத்து வருட அமைச்சர் பதவியில் அசையும் மற்றும் அசையா சொத்தாக தங்கமணி பல மடங்கைத் தாண்டிவிட்டார் என்கிறார்கள் ரெய்டில் ஈடுபட்ட அதிகாரிகள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
Enforcement Department raid in Chennai

டெல்லியில் மத்திய போதைப் பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி 50 கிலோ ரசாயன வகை போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருள்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும், இதன் மொத்த மதிப்பு ரூ. 2 ஆயிரம் கோடி எனவும் தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டது திரைப்படத் தயாரிப்பாளர் ஜாஃபர் சாதிக் தான் என்பது தெரியவந்தது. அதே சமயம் கடத்தல் கும்பலுக்கு தலைவனாக ஜாஃபர் சாதிக் செயல்பட்டதும் உறுதியானது. இந்த வழக்கு விசாரணை தொடர்பாக ஜாபர் சாதிக் தேடப்பட்டு வந்த நிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் ஜெய்ப்பூரில் கடந்த மார்ச் மாதம் 9 ஆம் தேதி (09.03.2024) கைது செய்யப்பட்டு மத்திய போதைப் பொருள் தடுப்பு போலீசாரின் காவலில் இருந்து வருகிறார். இதற்கிடையே சென்னை சாந்தோமில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டிற்கு மத்திய போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் சார்பில் சீல் வைக்கப்பட்டது.

Enforcement Department raid in Chennai

இதனையடுத்து ஜாபர் சாதிக்கின் சீல் வைத்த வீட்டை பயன்படுத்த அனுமதிக்க கோரி ஜாபர் சாதிக் வழக்கறிஞர் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு கடந்த 5 ஆம் தேதி (05.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, “ஜாபர் சாதிக்கின் வீட்டிற்கு சீல் வைத்தது ஏன்?” என மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியது. அதற்கு, “சீல் வைத்த வீட்டை பயன்படுத்துவதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை” என என்.சி.பி. தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிமன்றம் ஜாபர் சாதிக் வழக்கறிஞர் தொடர்ந்த மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து ஜாபர் சாதிக் வீட்டின் சீல் அகற்றப்பட்டது. இதற்கிடையே ஜாபர் சாதிக் மீது சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்தி சட்ட விரோதப் பணப்பரிவர்த்தனை செய்ததாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. 

Enforcement Department raid in Chennai

இந்நிலையில் சென்னை சந்தோம் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் சென்னை தியாகராய நகர் ராஜன் தெருவில் உள்ள அமீர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை நடக்கும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப். (C.R.P.F.) வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பான விசாரணைக்காக டெல்லியிலுள்ள தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் (N.C.B.) இயக்குநர் அமீர் தனது வழக்கறிஞருடன் நேரில் கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) ஆஜராகி விளக்கமளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Enforcement Department raid in Chennai

இதே போன்று சென்னையில் தியாகராயர் நகர், வண்ணாரப்பேட்டை, மயிலாப்பூர், அயனாவரம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். பிரபல உணவகத்திற்குச் சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. 

Next Story

சென்னையில் சிபிஐ சோதனை!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
CBI raid in Chennai

சென்னை பெரம்பூரில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை பெரம்பூர் நெடுஞ்சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி இளவரசன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில், இவரது வீட்டில் 6 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழுவினர் இன்று (08.04.2024) காலை 06.30 மணி முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர் கடந்த 2019ஆம் ஆண்டு ரயில்வே துறையில் இருந்து ஒய்வு பெற்றுள்ளார். அப்போது அவர் சத்தீஸ்கர் மாநிலத்தில் ரயில்வே பொது மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர் பணியில் இருந்த காலத்தில் நடைபெற்ற மோசடி தொடர்பாக இந்த சோதனை நடைபெறுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பெரம்பூரில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.