Skip to main content

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி காங்கிரஸ் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம்

Published on 09/11/2018 | Edited on 09/11/2018

 

congress protest




மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி குமாி மாவட்டத்தில் காங்கிரஸ் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடந்தது.
 

              2016 நவமபா் 8 நள்ளிரவு முதல்  புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ருபாய் நோட்டுகளின் மதிப்பை இழக்க செய்து நாடு முமுவதும் அதிா்வலையை ஏற்படுத்தினாா் மோடி. இதனால் நாடு முமுவதும் பல்வேறு இன்னல்களுக்கு மக்கள் ஆளானாா்கள். இதில் பழைய ருபாய் நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்யவும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட 2000 ருபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்ளவும் பெறப்பட்ட அந்த 2000 ருபாய் நோட்டுகளை சில்லரையாக மாற்றவும் மக்கள் படாதபாடு பட்டனா். 
 

                 ஏடிஎம் சென்டா்கள் எல்லாம் பணம் இல்லாமல் வெறிச்சோடி இருந்தது. திருமணம் உட்பட பல சடங்கு நிகழ்சிகள் பணம் இல்லாமல் தடை பட்டதால் பலா் உயிாிழப்பு சம்பவங்களும  நடந்தன. இதற்கு நாடு முமுவதும் எதிா்ப்பு கிளம்பியது. 
 

           இந்த சம்பவத்தை இன்று நாடு முமுவதும் காங்கிரசாா் கறுப்பு தினமாக கடைபிடித்து கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினாா்கள். இதில் குமாி மாவட்டத்தில் காங்கிரஸ் கிழக்கு மாவட்டம் சாா்பில் மாவட்ட தலைவா் வழக்கறிஞா் ராதாகிருஷ்ணன் தலைமையில் நாகா்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு ஆா்ப்பாட்டம் நடந்தது. இதில் பிாின்ஸ் எம்.எல்.ஏ உட்பட பலா் கலந்து கொண்டனா். 
 

          இதே போல் மேற்கு மாவட்டம் சாா்பில் ராஜேஷ் குமாா் எம்.எல்.ஏ தலைமையில் தக்கலை தலைமை தபால் நிலையம் முன்பு ஆாா்ப்பாட்டம் நடந்தது. இளைஞா் காங்கிரஸ் சாா்பில் அழகியமண்டபத்தில் நூதன முறையில் ஆாா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சட்டத்திற்கு பிரதமர் மோடி பதில் சொல்லியாக வேண்டும்- காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பேச்சு!

Published on 26/08/2019 | Edited on 26/08/2019

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்ட விவகாரத்தை, தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. பெயரளவில் சில இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதிலும் சென்னையில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மூத்த தலைவர்கள் பங்கேற்கவில்லை என ஆக.24-ந்தேதி வெளியான நக்கீரன் இதழில் குறிப்பிட்டிருந்தோம்.
 

இதையடுத்து, இன்று (26-09-2019) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் காங்.கமிட்டி தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கிருஷ்ணசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். (இன்றைய தினமும் பெரும்பாலான மூத்த தலைவர்கள் கலந்துக்கொள்ளவில்லை) ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

P CHIDAMBARAM

 

மேடையில் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், "நாட்டின் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டு வருகிறது. வேலை இல்லாமல் இளைஞர்கள் தவித்து வருகின்றனர். பெரிய பெரிய நிறுவனங்கள் தற்போது மூடும் நிலைக்கு தள்ளபட்டுள்ளது. பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. அதை சரிசெய்ய வேண்டிய மோடி அரசாங்கம், காங்கிரஸ் கட்சியை அவமானப்படுத்தும் வகையில் தான், சிதம்பரத்தை கைது செய்துள்ளது. பிரதமர் மோடி நீதித்துறை, ராணுவம், காவல்துறை போன்றவற்றை கையில் வைத்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். சட்டத்திற்கு  மோடி பதில் சொல்லியாக வேண்டும்" என்றார்.

 
கடந்த வாரம் கராத்தே தியாகராஜன் தனியாக ப.சிதம்பரத்திற்காக போராட்டம் நடத்தினார். இப்போது, காங். தரப்பில் மற்றொரு போராட்டம் நடைபெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.



 

Next Story

ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழக காங்கிரஸ் கமிட்டியின் கண்டன ஆர்ப்பாட்டம். (படங்கள்)

Published on 26/08/2019 | Edited on 26/08/2019

 

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி  அமைச்சருமான ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட சிலர் மீது, சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த 20- ஆம் தேதி தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் 21-ஆம் தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்தனர். 
 

ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை தொடந்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்துவருகிறது. இன்று (26.08.2019) சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், கே.ஜெயக்குமார் உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகர்கள் கலந்துகொண்டு கண்டன் உரையாற்றினர்.