Skip to main content

போட்டிப் போட்டு உதவி... தழைக்கும் மனித நேயம்... பசியறியாத கண்டரமாணிக்கம்..!

Published on 17/04/2020 | Edited on 17/04/2020

முதல் நாள் ஒருவர், மறு நாள் மற்றொருவர், இன்னொரு நாள் இன்னொருவர் என போட்டிப் போட்டுக் கொண்டு அரிசி, காய்கறி, மளிகை தொகுப்புகள், பால், தயிர், முககவசம், கிருமி நாசினிகள் வழங்கி, தங்களுடைய ஊரை பசியறியாத ஊராக்கி மனித நேயம் தழைக்க பாடுபடுகின்றனர் கண்டரமாணிக்கம் ஊராட்சி மன்றத்திற்குட்பட்ட மண்ணின் மைந்தர்கள்.

 

Competition and help ... working humanity ...

 

சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்டது கண்டரமாணிக்கம் ஊராட்சி மன்றம். 3,840 வாக்காளர்களைக் கொண்ட இந்த ஊராட்சி மன்றத்தில் கண்டரமாணிக்கம், தெற்குப்பட்டு, பொன்னாங்குடி, காணிக்காடு, வடக்குத்தெரு, அமிர்தபுரம், வலையப்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளடங்கியுள்ளன. கரோனா தொற்றுக் காரணமாக ஊரடங்கு அமலில், நாடெங்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்க, பெரும்பான்மையான கூலித் தொழிலாளர்களைக் கொண்ட கண்டரமாணிக்கம் ஊராட்சி மன்றமும் பாதிப்பிலிருந்து தப்பவில்லை. இவ்வேளையில், ஊர்மக்களைக் காக்க நாங்கள் இருக்கின்றோமென கண்டரமாணிக்கம் ஊராட்சிக்குட்பட்டவர்கள் கைகொடுக்க பசியறியாமல் திகழ்கின்றது ஊர்.

 

 nakkheeran app


 

Competition and help ... working humanity ...


"முதன்முதலாக கண்டரமாணிக்கம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திருப்புத்தூர் தீயணைப்பு துறை மற்றும் கோயம்புத்தூர் வாழ் கண்டரமாணிக்க நகரத்தார் உதவியுடன், கிருமிநாசினி மருந்து தெளிக்க, நாங்களும் பங்கெடுக்கின்றோமென ஏப்ரல் 6,7,8, ஆகிய தேதிகளில் கிருமி நாசினி மருந்து தெளிப்பிற்கான மொத்த செலவினை ஏற்றுள்ளார்கள் மதுரைவாழ் கண்டரமாணிக்க நகரத்தார்கள். அதற்கடுத்த நாட்களில் மதுரையை சேர்ந்தவர்கள் கபசுரக் குடிநீர் வழங்கிய வேளையில், ஊராட்சி மன்றத்திற்குட்பட்ட 1,480 ரேசன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு ஒரு குடும்பத்திற்கு தலா 5 கிலோ அரிசி வீதம், மொத்தம் 7 ஆயிரத்து 400 கிலோ அரிசி வழங்கினர்.

 

Competition and help ... working humanity ...


இதே வேளையில், திருநெல்வேலி, கோவை, ஈரோடு, மதுரை, சென்னை மற்றும் அமெரிக்காவில் வாழும் இந்த நகரத்தார்களும் உதவி செய்துள்ளனர். மேலும் கத்திரிக்காய், தக்காளி, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் என ஒரு குடும்பத்திற்கு 4 கிலோ காய்கறிகள் வீதம் மொத்தம் 6,000 கிலோ காய்கறிகளை வழங்கியுள்ளனர், தெற்குப்பட்டில் வசிக்கும் சேது பாஸ்கரா குழுமத்தினர். இதற்கு அடுத்ததாக, மீண்டும் கண்டரமாணிக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 1,480 ரேசன் அட்டை வைத்துள்ள குடும்பத்திற்கும், குடும்ப அட்டை இல்லாத ஏனைய குடும்பத்திற்கும் சேர்த்து மொத்தம் 1,800 குடும்பத்திற்கும், ஒரு குடும்பத்திற்கு தலா 5 கிலோ அரிசி வீதம் மொத்தம் 9 ஆயிரம் கிலோ அரிசி மற்றும் அதனுடன் 1 கிலோ கல் உப்பு சேர்த்து வழங்கியுள்ளனர், ஆட்டோ லெக் குழுமத்தினர். இதுபோக ஊராட்சி மன்றத்திற்குட்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் பால், தயிர், டீ தூள் பாக்கெட், சோப், முககவசம் என ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை வழங்கி மனித நேயத்தை வளர்த்து வருகின்றனர். இன்னும் எங்களுக்கு உதவ பலரும் முன்வருகின்றனர்" என்கிறார் அனைவரையும் ஒருங்கிணைத்து வரும் ஊராட்சிமன்றத் தலைவரான ராமு கனக கருப்பையா. இச்சேவைக்காக திருப்புத்தூர் சட்டமன்றத்தொகுதியின் உறுப்பினரான பெரியகருப்பன் பாராட்டு தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது. இன்னும் மனிதம் மரித்துப் போகவில்லை என்பதற்கு கண்டரமாணிக்கம் ஓர் முன் உதாரணம்.!!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆறு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; தலைமை ஆசிரியருக்கு 47 ஆண்டுகள் சிறை

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Headmaster gets 47 years in jail

சிவகங்கையில் பள்ளி சிறுமிகள் ஆறு பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமை ஆசிரியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ளது பெரிய நரிக்கோட்டை கிராமம். இங்கு செயல்பட்டு வரும் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காளையார் கோவில் அண்ணா நகர்ப் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு அதே பள்ளியில் பயின்ற ஆறு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. பாதிக்கப்பட்ட சிறுமியின் பாட்டி ஒருவர் இது தொடர்பாக சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகார் அடிப்படையில் தலைமை ஆசிரியரை விசாரித்த பொழுது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கினை நடத்தி வந்தனர். தொடர்ந்து இந்த வழக்கில் பல கட்டங்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சரத்ராஜ் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளார். தீர்ப்பில் ஆறு குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் முருகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை, 47 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

இந்த குற்றத்திற்கு அபராதத் தொகையாக 69 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட ஆறு சிறுமிகளுக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் 29 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Next Story

'சோதனை செய்யும் பறக்கும் படை அதிகாரிகள் மீது நடவடிக்கை'- தேவநாதன் பேச்சு

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
'Action on Test Flying Officers'- Devanathan's speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் உள்ள ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் திருவரங்குளம், வம்பன், குளவாய்ப்பட்டி உட்பட பல கிராமங்களில் பாஜக கூட்டணி வேட்பாளர் தேவநாதன் வாக்கு சேகரிக்க பிரச்சாரம் செய்தார். வேட்பாளரின் பிரச்சார இடங்களுக்கு வந்த தேர்தல் பறக்கும்படை கண்காணிப்பு குழுவினர் வேட்பாளர் வாகனத்தை சோதனை செய்ய கேட்டனர்.

அதேபோல திருவரங்குளத்தில் அவர் பேசிக் கொண்டிருக்கும் போது கூட்டத்திற்குள் பறக்கும் படை வாகனம் வந்ததும் பிரச்சாரத்தில் பேசிக்கொண்டிருந்த தேவநாதன், 'இது திமுக தேர்தல் இல்லை நாடாளுமன்றத் தேர்தல். தொடர்ந்து எங்கள் பிரச்சாரத்தில் இடையூறு ஏற்படுத்துவது போல அதிகாரிகள் கூட்டத்திற்குள் வருகின்றனர். தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதும் இந்த அதிகாரிகள் மீது புகார் கொடுப்போம். நடவடிக்கை இல்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்'' என்றார்.

தேர்தல் விதிமுறைகளின் படி பறக்கும்படை கண்காணிப்பு குழுவினர் சோதனை செய்வது வழக்கமானது தான் ஆனால் தேவநாதன் அதிகாரிகளை மிரட்டுவது போன்று பேசுகிறார் என்கின்றனர் அதிகாரிகள்.