Skip to main content

நீக்கம் செய்யப்பட்டதால் கல்லூரி மாணவர் விஷமருந்து குடித்து தற்கொலை முயற்சி!

Published on 02/02/2019 | Edited on 02/02/2019

திருவாரூர் திரு.வி.க அரசு கல்லுாரியில் படித்துவரும்  மாணவர் மாரிமுத்து அடிக்கடி போராட்டத்தில் ஈடுபடுவதாகவும், போராட்டத்தில் பேராசிரியர் ஒருவரை தாக்கி முழக்கமிட்டதாகவும் நீங்கம் செய்யப்பட்டார், விரக்தியான மாணவன் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியில்  ஈடுபட்டு ஆபத்தான நிலையில் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது   மாணவர்கள் வட்டாரத்தில் பரபரப்பை  உண்டாக்கிவருகிறது.

 

SUICIDE

 

திருவாரூர் கங்ளாஞ்சேரியை சேர்ந்த மாணவன் மாரிமுத்து. இவர் திருவிக அரசு கல்லுாரியில் பிஏ தமிழ் துறையில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த டிசம்பர் 16ம் தேதி கல்லுாரி வளாகம் முன்பு குடிநீர், உள்ளிட்ட அடிப்படை  தேவைகள் கேட்டு நடைபெற்ற போராட்டத்தில்  கலந்து கொண்ட மாரிமுத்து,  கல்லுாரி பேராசிரியர் ஓருவர் போராட்டத்திற்கு  எதிராக  இருப்பதாக கூறி கூறி முழக்கமிட்டதாக, கூறி கல்லுாரி நிர்வாகம் மாணவர் மாரிமுத்துவை கல்லுாரியை விட்டு நீக்கியது.

 

 

மாணவர் மாரிமுத்து கல்லூரி நிர்வாகத்திடம் பல முறை மன்னிப்புக்கேட்டும், மன்னிப்பு கடிதத்தை கொடுத்தும்,  கல்லூரி நிர்வாகம் அவரது மன்னிப்பை ஏற்கவில்லை  இதனால் விரக்தியான  மாணவர் மாரிமுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்துள்ளார். அந்த வழக்கும் தற்போது நிலுவையில் உள்ளது.

 

 

இந்த சூழலில் மீண்டும் கல்லூரியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மாரிமுத்துவின் விளக்கத்தையும், மன்னிப்பையும்  மீண்டும் கல்லூரி நிர்வாகம் ஏற்க மறுத்து நிராகரித்துவிட்டது. வீீட்டிலும் மாரிமுத்துவை திட்டியுள்ளனர், மனமுடைந்த மாரிமுத்து 1 ம் தேதி இரவு வீட்டில் எலி மருந்தை சாப்பிட்டு படுத்துவிட்டார், மயக்க நிலையில் இருந்த மாணவர் மாரிமுத்து அவரது  குடும்பத்தினர் திருவாரூர் அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர், அவருக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்படுவதோடு, தீவிர கண்காணிப்பிலும்  வைத்துள்ளனர்.

 

 

இந்த சம்பவம் குறித்து திருவாரூர் பகுதியில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

தந்தை உயிரிழந்த போதும் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
 student who wrote her 12th class exam despite  passed away of her father

கடலூர் சூரப்ப நாயக்கன் சாவடி பகுதியைச் சேர்ந்த ரத்தினவடிவேல். இவர் ஓய்வு பெற்ற அளவையர். இவர் வெள்ளிக்கிழமை(15.3.2024) காலை உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார்.  இவரது மகள் ராஜேஸ்வரி வயது 16 இவர் கடலூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.  இவருக்கு வெள்ளிக்கிழமை இயற்பியல் தேர்வு இருந்துள்ளது.

தந்தை உயிரிழந்ததை பார்த்து கதறி அழுத்துள்ளார். ஒரு கட்டத்தில் அவர் தன்னை திடப்படுத்திக் கொண்டு  இயற்பியல் தேர்வு எழுத செல்வதாக கூறி தேர்வு எழுதும் பள்ளிக்கு சென்றுள்ளார். இவரை பார்த்து அங்கிருந்த சக மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மாணவிக்கு ஆறுதல் கூறி ஊக்கமளித்தனர்.

இதனை தொடர்ந்து அவர் பள்ளியில் இயற்பியல் தேர்வு எழுதினார். பின்னர் தேர்வு முடிந்த பிறகு அவரது தந்தையின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். இந்நிகழ்வு கடலூரில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.