Skip to main content

கல்லூரி மாணவர்கள் மோதல்; ஒருவர் கொலை! ஆறு பேர் கைது! 

Published on 21/07/2022 | Edited on 21/07/2022

 

College student passed away in bike theft case police arrested six

 

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகில் உள்ள டி. எடையார் கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் அருண்குமார்(21). மாற்றுத்திறனாளியான இவர், விழுப்புரம் அரசு கலை கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவரது வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்று கடந்த 9ம் தேதி காணாமல் போனது. இதில் அதே ஊரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன்மீது சந்தேகம் எழுந்தது. அந்த சிறுவன் சென்னை ஹோட்டலில் வேலை செய்து வருபவர்.

 

இதையடுத்து அருண்குமார் மற்றும் அவரது உறவினர்கள் சிறுவனிடம் பைக் திருடு போனது குறித்து கேட்டுள்ளனர். இதனால் இது தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 14ஆம் தேதி அந்த சிறுவன் மற்றும் அவனது நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்தபோது சிறுவன் போதையில் அருண்குமார் இருசக்கர வாகனத்தை திருடி விற்று விட்டதாக கூறியுள்ளார். 

 

இதனை தனது நண்பர்கள் மூலம் அருண்குமார் அறிந்துள்ளார். மேலும், அந்த ஆடியோவை அவரும் பெற்றுள்ளார். மீண்டும் சிறுவனிடம் திருடிய வாகனத்தை தரவில்லை என்றால் போலீஸில் புகார் செய்வோம் என்று தெரிவித்துள்ளனர். இதில், இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு அவர்கள் கலைந்து சென்றுள்ளனர். 

 

அதன்பிறகு சிறுவன், தனது நண்பார்களான சத்யராஜ்(21) மற்றும் 17 வயது மற்றொரு சிறுவனுடன் இணைந்து அருண்குமாருக்கு போன் செய்து, ‘வாகனம் பனப்பாக்கம் கிராமத்தில் உள்ள ஏரிக்கரை பகுதியில் உள்ளது. அங்கு வந்தால் வாகனத்தை எடுத்துக் கொள்ளலாம்’ என்று கூறி அருண்குமாரை அங்கு வரவழைத்துள்ளனர். அங்கு வந்த அருண்குமாரை நாலு பேரும் சேர்ந்து தாக்கி பெல்ட் மூலம் அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்தனர். பின் அவர் உடலில் கற்களை கட்டி அருகில் இருந்த கிணற்றில் சடலத்தை வீசிவிட்டுச் சென்றுள்ளனர். 

 

வீட்டில் இருந்து வெளியே சென்ற அருண்குமார், வெகு நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை என்பதை அறிந்த அவரது பெற்றோர், அதிர்ச்சி அடைந்து பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். எங்கும் அருண்குமார் கிடைக்காததால், திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் போலீஸ் நடத்திய விசாரணையில் சத்யராஜ் மற்றும் சிறுவர்கள் மூன்று பேரும் சேர்ந்து அருண்குமாரை கொலை செய்து கிணற்றில் வீசியதை ஒப்புக்கொண்டனர். மேலும் இந்தக் கொலையில் ராஜேஷ்(21), மற்றும் 17 வயது சிறுவன் ஈடுபட்டிருப்பது அந்த விசாரணையில் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

 

இதையடுத்து நேற்று காலை 7:30 மணி அளவில் அருண்குமாரின் உடலை கிணற்றிலிருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

College student passed away in bike theft case police arrested six

 

இந்தநிலையில், கைது செய்யப்பட்டவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று கூறி நேற்று காலை 8 மணி அளவில் இடையார் பஸ் நிறுத்தம் அருகே அருண்குமாரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த விழுப்புரம் டி.எஸ்.பி செல்வகுமார், சப்-இன்ஸ்பெக்டர் பிரபு, பார்த்தசாரதி மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.