Skip to main content

கோவை: அங்கன்வாடி ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்!

Published on 08/12/2017 | Edited on 08/12/2017
கோவை: அங்கன்வாடி ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்!

காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி தமிழ்நாடு அங்கஙாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.



தமிழகம் முழுவதும் காலியாகவுள்ள அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் பணியிடங்களை உடனே நிரப்பக்கோரியும், முன்னால் முதலமைச்சர் அறிவித்தபடி காலமுறை ஊதியம் வழங்க கோரிக்கை விடுத்தனர். மேலும், ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு முறையான ஒய்வூதியம் வழங்கவும், 21 மாத நிலுவைத்தொகையை உடனே வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். 

மே மாத விடுமுறை, பறிக்கப்பட்ட சனிக்கிழமை விடுமுறை உட்பட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேற்கண்ட கோரிக்கைகளை அரசு கண்டுகொள்ளவில்லை என்றால், 20ஆம் தேதி  மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும், அதனைத்தொடர்ந்து 22, 23, 24 ஆம் தேதிகளில் தரமணியிலுள்ள தலைமை அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக தெரிவித்தனர்.

- அருள்

சார்ந்த செய்திகள்