Skip to main content

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

Published on 20/06/2022 | Edited on 20/06/2022

 

Class 10th Exam Results Released

 

2021-2022ஆம் கல்வியாண்டில் தேர்வு எழுதிய பத்தாம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியானது.

 

கரோனா காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெறாத நிலையில், இந்தாண்டு மே மாதம் வழக்கம்போல தேர்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, விடைத்தாள் திருத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவந்தன. பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்ட நிலையில், தற்போது 10ஆம் வகுப்பு தேர்வு முடிவும் வெளியிடப்பட்டுள்ளது.

 

தேர்வு முடிவுகளை அரசு அறிவித்துள்ள www.tnresults.nic.in , www.dge.tn.gov.in , www.dge1.tn.gov.in , www.dge2.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தங்கள் பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம். மேலும், பதிவு செய்த செல்போன் எண்களுக்கு SMS வாயிலாகவும் தேர்வு முடிவுகளை அனுப்பி வைக்க தேர்வுகள் துறை ஏற்பாடு செய்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எஸ்எஸ்எல்சி தேர்வர்களுக்குத் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்; மே 26 முதல் விநியோகம்!

Published on 25/05/2023 | Edited on 25/05/2023

 

 SSLC public examination will be issued a provisional score certificate from May 26

 

எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மே 26 ஆம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் எனத் தேர்வுத்துறை  இயக்ககம் அறிவித்துள்ளது.     

 

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு நடந்தது. இதன் முடிவுகள் மே 19 ஆம் தேதி வெளியிடப்பட்டது. தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் ஐடிஐ., பாலிடெக்னிக் கல்லூரி, பிளஸ்1 சேர்க்கைக்குத் தயாராகி வருகின்றனர். இதற்காக மாணவர்கள் நலன் கருதி, தற்காலிக மதிப்பெண் சான்றிதழை வழங்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. வெள்ளிக்கிழமை  (மே 26) முதல் பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம்.     

 

இது தொடர்பாகத் தமிழ்நாடு தேர்வுகள் துறை இயக்கக அதிகாரிகள் கூறியது: “எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து, அந்தந்த உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகள் மூலம், தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவிகளின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களைத் தேர்வுத்துறை இயக்கக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதேபோல், தனித்தேர்வர்கள் எந்தெந்த மையங்களில் தேர்வு எழுதினார்களோ அந்த மையங்களின் தலைமை ஆசிரியர்கள் தனித்தேர்வர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களில் உள்ள தேர்வரின் பெயர், பிறந்த தேதி, தேர்வரின் தலைப்பெழுத்து (இனிஷியல்), புகைப்படம், பயிற்று மொழி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கவனமாக சரிபார்க்க வேண்டும்.     

 

இதையடுத்து, மே 26 ஆம் தேதி பிற்பகல் முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை விநியோகம் செய்யத் தலைமை ஆசிரியர்களுக்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. பள்ளிகள் மூலம் தேர்வு எழுதியவர்களுக்கு அந்தந்தப் பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்களுக்கு அவர்கள் தேர்வு எழுதிய மையங்கள்  வாயிலாகவும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். சான்றிதழில் ஏதேனும் பிழைகள் இருப்பின், பள்ளிக்கல்வித்துறை இயக்ககத்தால் அறிவிக்கப்படும் குறிப்பிட்ட நாளில் திருத்தங்கள் செய்துகொள்ள வாய்ப்பு வழங்கப்படும். தேர்வர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படும்போது, மதிப்பெண் சான்றிதழ் வரிசை எண் குறிப்பிடப்படும் இடத்தில், 'உண்மைச்  சான்றிதழைப் பார்க்க' என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டு தேர்வர்களுக்கு வழங்க வேண்டும்.”  இவ்வாறு தமிழ்நாடு தேர்வுகள் துறை இயக்கக அதிகாரிகள் கூறினர்.  

 

 

Next Story

பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வி; சிறுவன் தூக்கிட்டு தற்கொலை!

Published on 21/05/2023 | Edited on 21/05/2023

 

10th student passes away in salem after public exam result

 

தாரமங்கலம் அருகே, பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தோல்வி அடைந்ததால் ஏற்பட்ட விரக்தியில் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

 

சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே உள்ள கங்காணியூரைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (45). வெல்டிங் பட்டறை தொழிலாளி. இவருடைய மகன் திருபின் (15). கே.ஆர்.தோப்பூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் மே 19ம் தேதி வெளியானது. 

 

பொதுத்தேர்வில் திருபின் தோல்வி அடைந்துவிட்டார். தேர்வு முடிவை பார்த்து  அதிர்ச்சி அடைந்த திருபின், பெற்றோரிடம் எதுவும் பேசாமல் வீட்டிற்குள் புகுந்து தனது அறைக்கதவை சாத்திக் கொண்டார். இதைப் பார்த்து பதற்றம் அடைந்த பெற்றோர், கதவை தட்டியுள்ளனர். ஆனால் திருபின் கதவைத் திறக்கவில்லை. 

 

அக்கம்பக்கத்தினர் துணையுடன், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு திருபின் படுக்கை அறையில், மின் விசிறியில் தூக்கிட்டு தொங்கிக் கொண்டிருந்தார். அவரை மீட்ட பெற்றோர்கள் உடனடியாக சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மருத்துவப் பரிசோதனையில் சிறுவன், வரும் வழியிலேயே இறந்து விட்டது தெரியவந்தது. 

 

இந்த சம்பவம் குறித்து தாரமங்கலம் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.