Skip to main content

தமிழகத்தை சேர்ந்த ஒரு வயது குழந்தைக்கு வடமாநிலத்தில் நடந்த கொடூரம்!

Published on 16/06/2018 | Edited on 16/06/2018



இந்தியாவில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை நாளுக்குள் நாள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று இரவு மகாராஷ்ட்ரா மாநிலத்தில் ஒரு வயது பெண் குழந்தைக்கு நடத்த கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

 

 

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் அமைந்துள்ளது லோனி கள்போர் ரயில் நிலையம். இந்த பகுதியில் தமிழகத்திலிருந்து புலம் பெயர்ந்த ஒரு தம்பதியினர் சாலையோரம் வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு 1 வயது குழந்தையும் உள்ளது. இவர்கள் நேற்று இரவு வழக்கம்போல் சாலையோரத்தில் குழந்தையுடன் படுத்து தூங்கியுள்ளனர். 

 

 

 

அப்போது நள்ளிரவில், குழந்தையின் தாய் திடீரென முழித்து பார்த்த போது அருகில் தூங்கி கொண்டிருந்த குழந்தை இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவர்கள் இருவரும் அருகில் உள்ள அனைத்து இடங்களில் குழந்தையை தேடி அழைந்துள்ளனர் எங்கும் கிடைக்கவில்லை.  


 

The horrific incident in the North


 

இதன்பின், விரக்தி அடைந்தவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அவர்களின் புகாரை ஏற்ற காவல்துறை உடனடியாக குழந்தையை தேடி விசாரணையை மேற்கொண்டது. சம்பவம் நடந்து 4 மணி நேரத்தில் அந்த பகுதியில் உள்ள சி‌சி‌டி‌வி காட்சிகள் உதவியுடன் காவல்துறையினர் தூங்கிகொண்டிருந்த குழந்தையை கடத்தியவரை உடனடியாக கைது செய்தனர். விசாரணையில் குழந்தையை கடத்தியவர் மல்ஹரி பன்சோடே (65) என்பது தெரியவந்தது. 
 

அதன் பின்னர் நடந்த மருத்துவ பரிசோதனையில், குழந்தையின் தலை பயங்கரமாக அடித்து நொறுக்கபட்டு இருப்பதும், கொலை செய்வதற்கு முன்பு குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகப்பட்டதும் தெரியவந்துள்ளது. மேலும் சம்பவத்தின் போது அவர் குடிபோதையில் இருந்ததாக விசாரணையில் தெரிய வந்தது.

 

 

 

இதையடுத்து குற்றவாளி பன்சோடே காவல்துறை கைது செய்யப்பட்டு போக்ஸோ சட்டதில் 4,8(G), 366 (கடத்தல்), 376 (வன்கொடுமை), 302 (கொலை) ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யபட்டு உள்ளது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.