Skip to main content

ஈவு இரக்கமற்ற தாய்: பச்சிளம் சிசுவை சாலையில் வீசிய கொடூரம்

Published on 25/08/2018 | Edited on 25/08/2018
baby feet.jpg


பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தை ஒன்று நடுரோட்டில் வீசப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

சென்னை வளசரவாக்கம் எஸ்.வி. எஸ். நகர் 6-வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு முன்பகுதியில் உள்ள மழைநீர் கால்வாயில் கடந்த 15 ஆகஸ்ட் 2018 புதன்கிழமை பச்சிளம் குழந்தை அழுதபடி கிடந்தது. குழந்தையின் அழும் குரல் கேட்டு பொதுமக்கள் கூடினர். இங்குள்ள தரைதள வீட்டில் சின்னத்திரை நடிகையான கீதா வசித்து வருகிறார். சத்தம் கேட்டு அவரும் ஓடி வந்தார். குழந்தையை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. நடிகை கீதா தரையில் படித்தபடி அங்கு இருந்த ஆண் குழந்தையை மீட்டார்.
 

 

 

குழந்தையின் கழுத்தில் அதன் தொப்புள் கொடி சுற்றியபடி காணப்பட்டது. பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தையை பெற்றோர் வீசி சென்றிருப்பது தெரிந்தது.

இதைத்தொடர்ந்து குழந்தையை நடிகை கீதா வெந்நீரில் குளிப்பாட்டி முதலுதவி செய்தார். சுதந்திர தினத்தில் குழந்தை மீட்கப்பட்டதால் அதற்கு ‘சுதந்திரம்’ என்று கீதாவும், பொதுமக்களும் பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.
 

மழைநீர் கால்வாயில் பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தை மீட்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் மறைவதற்குள், சென்னையில் பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தை ஒன்று நடுரோட்டில் வீசப்பட்ட சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

 

 

தண்டையார்பேட்டை நேதாஜி நகர் 6-வது தெருவில் 25.09.2018 சனிக்கிழமை காலை 6.30 மணியளவில் நடுரோட்டில் பிறந்து சில மணி நேரம் ஆன பச்சிளம் ஆண் குழந்தை கீழே கிடந்தது. இதை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். பொதுமக்கள் கூடினர். குழந்தையை கையில் தூக்கி பார்த்தபோது அந்த குழந்தை உயிரிழந்தது தெரிய வந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் சிலர் கண் கலங்கினர். இதுதொடர்பாக ஆர்.கே.நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
 

 

 

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை உடலை நடுரோட்டில் வீசியது யார்? என்று போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
 

அப்பகுதியை சேர்ந்த யாராவது குழந்தை உடலை வீசினார்களா? அல்லது வேறு பகுதியில் இருந்து வந்து வீசி சென்றார்களா? அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் இதுதொடர்பான சம்பவம் பதிவாகி இருக்கிறதா? என ஆய்வு செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'உங்கள் குழந்தை செர்லாக் பேபியா?' -எச்சரிக்கை மணி அடித்த உலக சுகாதார அமைப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Is your child a Cerelac baby?'-World Health Organization has sounded the alarm

நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பான செர்லாக் என்பது ஊட்டச்சத்து உணவு எனப் பொதுவாக குழந்தைகளுக்கு கொடுக்கும் பழக்கம் இந்தியாவில் நீண்ட நெடும் காலமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 'நெஸ்லே' நிறுவனம் இந்தியாவில் பல்லாயிரம் கோடிக்கு வர்த்தகம் செய்து வருகின்ற நிலையில், நெஸ்லேவின் குறிப்பிடத் தகுந்தத் தயாரிப்பில் ஒன்றாக உள்ளது செர்லாக்.

இந்தநிலையில் IBFAN எனப்படும் Baby Food Action Network என்ற ஐரோப்பிய அமைப்பு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் விற்கப்படும் செர்லாக் எனும் குழந்தைகளுக்கான  ஊட்டச்சத்து உணவை ஆய்வு செய்தது. ஊட்டச்சத்து பொருள் என்று கூறப்படும் செர்லாக்கில் சுவைக்கு அடிமையாக்கி அடிக்கடி உண்ண வைக்கும் அடிக்டிவ் சுகர் என்பது சேர்க்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் மிகவும் குறிப்பிடத்தகுந்தது நெஸ்லேவின் முக்கிய சந்தையாக கருதப்படும் பிரிட்டன், ஜெர்மனி போன்ற நாடுகளில் விற்கப்படும் செர்லாக்கில்  அடிக்டிவ் சுகர் சேர்க்கப்படவில்லை. ஆனால் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் விற்கப்படும் செர்லாக்கில் மட்டும் அடிக்டிவ் சுகர் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனையாகும் செர்லாக்கை  குழந்தைக்கு ஒரு முறை ஊட்டுகையில் 2.2 சதவீதம் அடிக்டிவ் சுகர் குழந்தையின் உடலுக்கு செல்கிறது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால் இந்தியாவை விட எத்தியோப்பியா போன்ற நாடுகளில் விற்கப்படும் செர்லாக்கில்  அடிக்டிவ் சுகரின் அளவு 5.2 கிராமாக உள்ளது. நெஸ்லேவின் இந்தச் செயல்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இளம் வயதிலேயே சர்க்கரை நோய் வருவதற்கும், குழந்தைகள் பார்ப்பதற்கு அளவுக்கு மீறி குண்டாக இருப்பதற்கும் இவையே காரணம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story

இரவில் பரவிய வதந்தி ; ராந்தம் சோதனைச்சாவடியில் பரபரப்பு

Published on 03/03/2024 | Edited on 03/03/2024
A fight sparked by rumours; There is commotion at Randham check post

தமிழகத்தில் குழந்தைகளை கடத்துவதற்காக வட மாநிலங்களில் இருந்து கும்பல்கள் கிளம்பி உள்ளதாக சமூக வலைதளங்களில் வெளியான தகவல்களை அடுத்து தமிழகத்தின் பல பகுதிகளில் ஆங்காங்கே வடமாநிலத்தவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

அண்மையில் சென்னையில்  ஐடி துறையில் பணியாற்றும் திருநங்கை ஒருவர் இரவில் உணவகத்தில் சாப்பிட்டு விட்டு வரும் பொழுது அவரின் வினோத தோற்றத்தால் குழந்தை கடத்த வந்த நபர் என பிடித்த சிலர், அவரை அரை நிர்வாணமாக மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய காட்சிகள் வைரலாகி இருந்தது.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த ராந்தம் சோதனை சாவடி பகுதியில் வடமாநில இளைஞர் ஒருவர் குழந்தையைக் கடத்த முயன்றதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது. இதனையடுத்து அந்த பகுதி மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சிக்கிய இளைஞரை தாக்கினர். அதன் பின்னர் அங்கு வந்த போலீசார் அந்த இளைஞரை அங்கிருந்து கூட்டிச் சென்றனர்.

அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.