Skip to main content

சிறுமி எரித்துக் கொலை... கொடூர வளர்ப்புத் தந்தை கைது!

Published on 24/11/2021 | Edited on 25/11/2021

 

child  incident in nellai... police action

 

நெல்லை மாவட்டத்தின் காவல் கிணறு பகுதியைச் சேர்ந்தவர் சபா. இவருக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் என மூன்று குழந்தைகள் கணவர் இறந்து விட்டதால் சுஜா ஜேசு அந்தோணி ராஜ் என்பவரை மறுமணம் மணம் செய்து கொண்டார். இவர்கள் அங்குள்ள ஹோட்டலில் வேலை செய்பவர்கள். சென்ற 17ம் தேதி அன்று ஜேசு அந்தோணி ராஜிடம், உனது குழந்தை திண்பண்டத்தை வாங்கிச் சாப்பிட்டு விட்டு பணம் தராமல் போய் விட்டது என்று பேக்கிக்காரர் கூறியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த ஜேசு அந்தோணி ராஜ், வீட்டிற்கு சென்றவர் மூன்று வளர்ப்புக் குழந்தைகளையும் தாக்கி விட்டு குழந்தைகள் என்றும் பாராமல். மண்ணெண்ணெய்யை அவர்கள் மீது ஊற்றி தீ வைத்திருக்கிறார்.

 

இதில் இரண்டு குழந்தைகள் அக்கம் பக்கத்தவர்களால் காப்பாற்றப்பட்டனர். படுகாயமடைந்த சிறுமி மகேஸ்வரியை மீட்டு நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்த செய்திகள் நக்கீரன் இணையதளம் ஏற்கனவே வெளியிட்டிருந்தது. தொடர்ந்து விசாரணை நடத்திய பணகுடி இன்ஸ்பெக்டர் சகாய சாந்தி வளர்ப்புத் தந்தை ஜேசு அந்தோணி ராஜ் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்திருந்தார்.

 

இந்த நிலையில் சிகிச்சையிலிருந்து சிறுமி மகேஸ்வரி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் பணகுடி போலீசார் கொலை முயற்சி வழக்கைக் கொலை வழக்காக மாற்றினர். விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் சகாய சாந்தி கொடூர வளர்ப்புத் தந்தையான ஜேசு அந்தோணி ராஜைக் கைது செய்தார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.