Skip to main content

கலைஞர் நினைவு நூலகம்; முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்!

Published on 11/01/2022 | Edited on 11/01/2022

 

Chief Minister laid the foundation to kalaignar library

 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கலைஞரின் 97வது பிறந்தநாளை முன்னிட்டு (03.06.2021) அன்று  மதுரையில், ‘முத்தமிழ் அறிஞர் கலைஞர் நினைவு நூலகம்’ அமைக்கப்படும் என அறிவித்தார். ஆளுநர் ஆர்.என்.ரவியும்  21.06.2021 அன்று சட்ட மன்ற பேரவையில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் என அறிவித்தார். கலைஞர் நினைவு நூலகம் அமையவுள்ள மதுரை நத்தம் ரோட்டில் இருக்கும் பொதுப்பணித்துறை குடியிருப்பு வளாகத்தை கடந்த அக்டோபர் மாதம், முதலமைச்சர்  நேரடியாக வந்து பார்வையிட்டார்.

 

இதனைத் தொடர்ந்து பொதுப்பணித்துறையால் தயாரிக்கப்பட்ட மதிப்பீட்டின் படி, நிர்வாக ஒப்புதல் ரூபாய். 114.00 கோடி அரசால் வழங்கப்பட்டது. இவற்றில் ரூபாய். 99.00 கோடி கட்டுமானப் பணிக்கும், ரூபாய்.10.00 கோடி புத்தகங்களுக்கும், ரூபாய். 5.00 கோடி கணினி உபகரணங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. கலைஞர் நினைவு நூலகம் 2.70 ஏக்கர் பரப்பளவில் ஒன்பது தளங்களாக அமையவுள்ளது. தரை தளத்தில் வாகனங்கள் நிறுத்துமிடம் மற்றும் ஏழுதளங்கள் மேலும் இக்கட்டடத்தில் மாற்றுத்திறனாளிக்கான பிரிவு, மாநாட்டு கூடம், குழந்தைகள் நிகழ்ச்சி அரங்கம், ஒளி மற்றும் ஒலி தொகுப்புகள் காட்சியகம், பார்வையற்றோர்களுக்கான மின் நூல், ஒலி நூல், பார்வையாளர் உணவருந்தும் அறை உள்ளடங்கியது.

 

Chief Minister laid the foundation to kalaignar library

 

மேற்கண்ட கட்டடத்தில் தமிழ் மொழி நூல்கள், பார்வையற்றோர் மற்றும் ஒலி நூல்கள், போட்டித் தேர்வு நூல்கள், பொது அறிவு நூல்கள், குழந்தைகள் நூல்கள், தமிழ் மற்றும் ஆங்கிலம், கணினி அறிவியல், நூலக அறிவியல், கணிதம், இயற்பியல் மற்றும் வானுடவியல், வேதியியல், உயிரியல் மற்றும் உயிர்நுட்பவியல், நிலவியல், வேளாண்மை, சுற்றுப்புற சூழல், உணவியல், ஆராய்ச்சி, தத்துவம், உளவியல், மதம் மற்றும் நெறிமுறை, சமூகவியல், அரசியல் அறிவியல், பொருளாதாரம், பொது நிர்வாகம், கல்வி, வணிகவியல், இலக்கியம், மேலாண்மை, வரலாறு மற்றும் புவியியல், சுயசரிதை, பயணம் மற்றும் சுற்றுலா, சட்டம், மருத்துவம், பொறியியல், நுண்கலை, சமூக அறிவியல், பருவ இதழ்கள் மேற்கண்ட பிரிவுகளைச் சார்ந்த மொத்தம் 2.50 இலட்சம் புத்தகங்கள் வைக்கப்படவுள்ளது. 

 

கலைஞர் நினைவு நூலகம் கட்டுமான பணிக்காக இன்று (11/01/2022) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டினார். இக்கட்டடம் 12 மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கேளிக்கை விடுதி விபத்து; மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி இருந்தது.

இது விபத்து குறித்து சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

இந்நிலையில் இந்த விபத்து குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு கிளப்பில் உள்ள மெஸ்ஸானைன் தளம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக விளக்கமிக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் தற்போது நடந்து கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் பணிகளால் அல்ல என்பதை  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தெளிவுபடுத்த விரும்புகிறது.

ஏனெனில் மெட்ரோ ரயில் பணியானது, விபத்து நிகழ்ந்த கட்டிடத்திலிருந்து கிட்டத்தட்ட 240 அடி தொலைவில் உள்ளது. மேலும் விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் அதிர்வுகள் எதுவும் காணப்படவில்லை. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்புப் பணிகளில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரிகளுக்கு உதவி செய்ய உள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவிக்க விரும்புகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விபத்து; 3 பேர் உயிரிழந்த சோகம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Chennai Alwarpet hotel top roof incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது விபத்து குறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.