Skip to main content

வாஸ்து காரணமா? பாதுகாப்பு  காரணமா? குமரியில் திடீரென ஓட்டலை மாற்றிய சந்திரசேகர ராவ்

Published on 09/05/2019 | Edited on 09/05/2019

 


       தெலுங்கானா முதல்வா் சந்திரசேகர ராவ் காங்கிரஸ் பாஜகவுக்கு மாற்றாக மூன்றாவது  அணி அமைப்பது தொடா்பாக மாநில கட்சிகளின் தலைவா்கள் மற்றும் தேசிய கட்சிகளின் முதல்வா்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறாா். 

 

k


            அந்த வகையில் 7-ம் தேதி கேரளா வந்த சந்திரசேகர ராவ் திருவனந்தபுரம்  பத்மநாபசாமி கோவிலுக்கு சென்று தாிசித்து விட்டு முதல்வா் மா. கம்யூ பினராய் விஜயனை சந்தித்து மூன்றாவது அணி குறித்து பேசியதோடு  தென்னிந்தியாவில் இருந்து ஒரு பிரதமா் உருவாக வேண்டும் என்ற கருத்தையும் வலியுறுத்திய சந்திரசேகர ராவிடம் பினராய் விஜயன் கேரளா மா. கம்யூனிஸ்டின்  நிலைப்பாடு என்பது  தேசிய தலைமையின் முடிவு தான் என்ற ஒற்றை வாியில் பதில் அளித்ததாக கேரளா கம்யூனிஸ்ட் வட்டாரம் தொிவித்தது. 

 

k


            இதனை தொடா்ந்து 8-ம் தேதி  மதியம் கன்னியாகுமாி வந்த சந்திரசேகர ராவ் திருவனந்தபுரத்தில் உள்ள பொிய ஸ்டாா் ஓட்டல்களை தவிா்த்து வரும் வழியில் தக்கலை எனும் ஒரு சிறிய ஊாில் உள்ள முபாராக் எனும் சாதாரண அசைவ ஓட்டலில் சாப்பிட்டாா். இது ஒரு வாரத்துக்கு முன்னே இந்த ஓட்டலில் தான் சாப்பிடுவதற்கு முடிவு செய்யப்பட்டது என்று அவாின் உதவியாளா்கள் தொிவித்தனா்.

 

k

பின்னா் கன்னியாகுமாியில்  முன் கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கடற்கரையையொட்டி உள்ள கனிமொழிக்கு சொந்தமான ஸ்பாா்ஸா ஓட்டலில் தங்க சென்றாா். அங்கு சென்ற  ஒரு மணி நேரத்தில் இந்த ஓட்டலில் இருந்து வேற ஓட்டலில் தங்க ஏற்பாடு செய்யுங்கள் என அதிகாாிகளிடம் கேட்டு கொண்டதன் அடிப்படையில் உடனடியாக கேரளா அரசு விருந்தினா் மாளிகையில் தங்க ஏற்பாடுபாடு செய்யப்பட்டது. 

 

சந்திரசேகர ராவின் இந்த திடீா் மாற்றம் குறித்து நாம் விசாாித்தபோது...சந்திரசேகர ராவ் முதலில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஓட்டல் மேற்கு பகுதியை பாா்த்து இருப்பதாலும் மேலும் அவா் ஓட்டலுக்குள் செல்லும் போது வாசல் படிகட்டு வலது காலில் தட்டியதால் அங்கு தங்குவது நல்ல வாஸ்தாக இருக்காது என்றும் இதனால் அங்கிருந்து அவா் எடுக்கும் முடிவுகளும் தீா்மானிப்பது நல்ல பலனை தராது என்பதால் தான் தெற்கு  வாசல் பகுதியை கொண்டிருக்கும் கேரளா அரசு விருந்தினா் மாளிகைக்கு சென்றாா் என்பது தான் உண்மையாக இருந்தாலும் பாதுகாப்பு காரணத்துக்காகத் தான் இடமாற்றம் செய்யப்பட்டாா் என்று அவருடன் வந்த பாதுகாப்பு அதிகாாிகள் கூறினாா்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சந்திரசேகர ராவ் மகள் கவிதா கைது; அமலாக்கத்துறை அதிரடி!

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
Former Telangana CM's daughter Kavitha arrested; Enforcement action

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு  அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார்.

இத்தகைய சூழலில், டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கு தொடர்பாக தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திர சேகர் ராவ் மகள் கவிதா இல்லத்தில் இன்று (15.03.2024) நாள் முழுவதும் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கவிதா கைது செய்யப்பட்டதை கண்டித்து தெலங்கானா மாநிலம் முழுவதும் ராஷ்ட்ரிய சமிதி கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும் பி.ஆர்.எஸ். கட்சி தொண்டர்கள் சார்பில் வெயிடப்பட்டுள்ள வீடியோ ஒன்றில், கவிதா இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மற்றும் பி.ஆர்.எஸ். கட்சித் தலைவர்  கே.டி.ஆர். ராவ் இடையே கடும் வாக்குவாதம் நடைபெறுவது போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளன. அதில் அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர், “ சோதனை நடந்து முடிந்துள்ளது. கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் கவிதா வர மறுக்கிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

சந்திரசேகர் ராவை நேரில் சென்று நலம் விசாரித்த பிரகாஷ்ராஜ்

Published on 12/12/2023 | Edited on 12/12/2023
Prakash Raj personally visited Chandrasekhar Rao and inquired after his well-being

தெலங்கானா மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பி.ஆர்.எஸ் கட்சித் தலைவருமான சந்திரசேகர் ராவ், கடந்த 8 ஆம் தேதி நள்ளிரவு 2 மணியளவில் தனது வீட்டின் குளியலறைக்குச் சென்ற போது வழுக்கி விழுந்துள்ளார். பின்பு வலியால் துடித்த அவரை குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.  பின்னர் அவருக்கு இடது கால் எலும்பு முறிவு, ஏற்பட்டதை அடுத்து சந்திரசேகர ராவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். 

இந்த நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சந்திரசேகர் ராவை நேரில் சென்று நலம் விசாரித்தார். இதேபோன்று ஆந்திரமாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவும் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார்.

ஆந்திர மாநிலத்திலிருந்து தெலங்கானா மாநிலம் பிரிந்த கடந்த 10 ஆண்டுகளாக சந்திரசேகர் ராவ் தலைமையிலான பி.ஆர்.எஸ் கட்சி ஆட்சி செய்து வந்தது. இதனைத் தொடர்ந்து அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆளும் பி.ஆர்.எஸ் கட்சியை தோற்கடித்து முதல் முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.