/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Chennai_High_Court_25.jpg)
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளர் தனபால் இன்று (10/06/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வரும் ஜூன் 14- ஆம் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் அனைத்து பிரிவுகளும் 50% பணியாளர்களுடன் செயல்படும். பணியாளர்களை இரு பிரிவுகளாகப் பிரித்து ஒவ்வொரு பிரிவுக்கும் இரண்டு நாட்கள் என சுழற்சி முறையில் பணிக்கு வர அறிவுறுத்தப்படுகிறது. மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)