Skip to main content

‘சக்ரா’ வசூல் விபரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்ய விஷாலுக்கு உத்தரவு!

Published on 18/02/2021 | Edited on 18/02/2021

 

chakra film actor vishal chennai high court order

 

நடிகர் விஷால் நடித்த 'சக்ரா' படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து, முதல் இரண்டு வார வசூல் விபரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்ய விஷாலுக்கு உத்தரவிட்டுள்ளது.

 

ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் பட நிறுவனத்தின் உரிமையாளர் ரவி தொடர்ந்த வழக்கில், நடிகர் விஷாலின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள 'சக்ரா' திரைப்படத்தின் கதையை, அப்படத்தின் இயக்குனர் ஆனந்தன் தன்னிடம் முன்னரே தெரிவித்து, அந்தப் படத்தை தயாரிக்க ஒப்பந்தம் போட்டுள்ளதாகவும், ஒப்பந்தத்தை மீறும் வகையில், விஷால் தயாரிப்பு மற்றும் நடிப்பில், தன்னிடம் கூறிய அதே படக்கருவை உருவாக்கி உள்ளது காப்புரிமைச் சட்டத்திற்கு எதிரானது என்றும் மனுவில் குற்றம்சாட்டியிருந்தார்.

 

படத்தை வெளியிடத் தடை விதிக்கக் கோரிய இந்த வழக்கை  விசாரித்த உயர்நீதிமன்றம், 'சக்ரா' படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து பிப்ரவரி 16-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. சக்ரா படம் பிப்ரவரி 19- ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தடையின் காரணமாக திரைப்படம் வெளியாவதில் சிக்கல் நிலவியது.

chakra film actor vishal chennai high court order

 

இந்த நிலையில், வழக்கு நீதிபதி சி.வி கார்த்திகேயன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 'சக்ரா' படத்தின் இயக்குனரான ஆனந்தன், ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனர் ரவியிடம் மேற்கொண்ட ஒப்பந்தம் விஷாலுக்கு முன்பே தெரியுமா, தெரிந்துதான் படத்தைத் தயாரித்தாரா என்பது போன்ற விஷயங்களெல்லாம் விரிவான விசாரணைக்குப் பின்னரே தெரியவரும் என்பதாலும், தற்போதைய நிலையில் படம் வெளியாகத் தடை விதித்தால், அது பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், தியேட்டர்கள் முடிவு செய்யப்பட்டு, டிக்கெட்டுகள் விற்கப்பட்டு, விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளதால், தடை விதிப்பது வணிகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைக் கருத்தில் கொண்டு, ஏற்கனவே விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்குவதாக உத்தரவிட்டார். 

 

எனினும், வழக்கு விசாரணையை நிலுவையில் வைப்பதாகத் தெரிவித்த நீதிபதி, பிப்ரவரி 19- ஆம் தேதி முதல் வரும் மார்ச் 5- ஆம் தேதி வரையிலான படத்தின் முதல் இரண்டு வார வசூல் விவரங்களையும், ஓ.டி.டி. தளங்களுக்கு படம் விற்பனை செய்யப்பட்டிருந்தால், அது தொடர்பான விவரங்களையும் நீதிமன்றத்தில் அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டுமென, நடிகர் விஷாலுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 10- ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பள்ளிகளில் வழங்கப்படும் தண்டனை தொடர்பான வழக்கு; பள்ளிக்கல்வித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court ordered the school education department for Case related to punishment in schools

சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘தமிழ்நாடு முழுவதும் பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனை விதிப்பதை தடை செய்ய வேண்டும் என்ற தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது. 

இது தொடர்பான மனு இன்று (25-04-24) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ‘பள்ளி குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனையைத் தடுக்கும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை பள்ளிக்கல்வித்துறை அமல்படுத்த வேண்டும். ஆணைய விதிகளை அனைத்து பள்ளிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்க வேண்டும். 

விதிகளை மீறி குழந்தைகளுக்குத் தண்டனை வழங்கப்பட்டது தொடர்பாக ஏதேனும் புகார்கள் வந்தால், அதன்பேரில் அதிகாரிகள் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக விதிகளை அமல்படுத்துவதை கண்காணிக்க அனைத்து பள்ளிகளிலும், தலைமை ஆசிரியர், பெற்றோர், ஆசிரியர், மூத்த மாணவர்கள் அடங்கிய கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும்” என்று கூறி பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டது. 

Next Story

“கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்கள்” - விஷால் பகிரங்க குற்றச்சாட்டு 

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
vishal allegation about theatre owners for not allocating theatres for rathnam movie

விஷால் - ஹரி கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள படம் ரத்னம். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி உலகெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. இதனால் தற்போது புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ரத்னம் படத்தின் போஸ்டர் மற்றும் பெரிய திரை (எல்இடி) உடன் கூடிய வேன் கடந்த 4ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உலா வரும் என அறிமுகப்படுத்தப்பட்டது. 

பின்பு விஷால் மற்றும் ஹரி இருவரும் சென்னை, திருச்சி உள்ளிட்ட ஊர்களில் கல்லூரியில் புரொமோஷன் நிகழ்ச்சி நடத்தி படத்தை விளம்பரப்படுத்தி வந்தனர். மேலும் புதுச்சேரியில் ஹரி, கடை வீதிகளில் ஒவ்வொரு கடையாக சென்று படத்தை பார்க்கும்படி கேட்டுக்கொண்டார். இந்த நிலையில் திருச்சி, தஞ்சாவூர் பகுதி திரையரங்குகளில் ரத்னம் படம் வெளியிடுவதற்கு தடை விதித்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக விஷால் குற்றச்சாட்டு குறித்து பேசிய ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த ஆடியோவில், “சங்கத்தின் தலைவர் மீனாட்சி மற்றும் செயலாளர் சிதம்பரம் என்னுடைய ஃபோனை எடுக்க மறுக்கிறார்கள். என் நண்பர் சீனு சார், ரத்னம் படத்தை வடக்கு மற்றும் தெற்கு பதிகளில் வாங்கியிருக்கிறார். ஒரு திரைப்படம் வெளியாவதே பெரிய விஷயம். இந்த காலகட்டத்தில் இப்படி நீங்க பண்ணும் போது இதற்கு பெயர் கட்டப்பஞ்சாயத்து.   

இதில் முதலமைச்சர் திருச்சி கலெக்டர், எஸ்.பி, காவல் துறையினர் என அனைவருக்கும் நான் சொல்ல விருப்பப்படுவது, அவர்கள் செய்வது கட்டப்பஞ்சாயத்தை தவிர்த்து வேற எதுவும் கிடையாது. விஷாலுக்கே இந்த கதி என்றால் நாளைக்கு ஒரு புதுமுக நடிகருக்கு என்ன நடக்கும். நீங்க ஃபோன் எடுக்காமல் இருப்பது, தியேட்டர் ஒதுக்கப்படாமல் இருப்பது, அது உங்களுடைய அலட்சியம். ஆனால் அந்த அலட்சியத்தைப் பார்த்து நான் சும்மா இருக்க மாட்டேன்” என கூறுகிறார்.