Skip to main content

சர்வதேச சந்தைக்குக் கடத்த முயன்ற கஞ்சா ஆயில்..!

Published on 14/04/2021 | Edited on 14/04/2021

 

Cannabis oil caught at tuticorin

 

உணவுப் பொருட்களான மஞ்சள், அரிசி முதல் போதை பொருட்களான கஞ்சா, ஹெராயின் பிரவுன் சுகர் உள்ளிட்டவை வரை தென்மாவட்ட தூத்துக்குடியின் கடல் மார்க்கமாகக் கடத்தப்படுவது அண்மையில் சகஜமான தொழிலாகவே மாறிவிட்டது.

 

அந்த வகையில், இப்போது புதிய போதை வஸ்து ‘க்யூ’ பிரிவிடம் மாட்டியிருக்கிறது. க்யூ பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், தூத்துக்குடியின் க்யூ பிரிவு இன்ஸ்பெக்டரான விஜய அனிதா, உதவி ஆய்வாளர்களான சிவமணி, தர்மராஜ் உள்ளிட்ட போலீஸ் டீம், புதுக்கோட்டை அருகிலுள்ள கூட்டாம்புளி கிராமத்தின் நவஜீவன் விவசாயப் பண்ணையை முற்றுகையிட்டது. அதிரடியாக நுழைந்த க்யூ பிரிவின் அலசலில், ஆயில் போன்ற, பிளாஸ்டிக் பேக்குகளிலிருந்து டப்பாவில் அடைக்கப்பட்ட, மூன்று கிலோ மணக்கும் அந்தப் பொருளையும், அங்கிருந்த 2 பேரையும் மடக்கி விசாரித்தனர். இது கஞ்சாவிலிருந்து தயாரிக்கப்படும் கஞ்சா ஆயில், அதிக போதை தரும் சரக்கு. கடல் வழியாக மாலத்தீவிற்கு அனுப்பவிருந்ததாக சொல்லியிருக்கிறார்கள்.

 

மேலும், அவர்களது விசாரணையில் பிடிபட்ட நாகல்குளம் பகுதியின் பிரிட்டோவும், பண்ணைவிளையின் விக்டரும், தாங்கள் கடத்தல் கூலிகள். தேனியிலிருந்து கொண்டு வந்தவர் கொடுத்ததை, டப்பாக்களில் அடைத்து மாலத்தீவிற்கு அனுப்பும்படியான தகவலையும் சொல்லியிருக்கிறார்கள். பிடிபட்ட ஹசீத் எனப்படும் கஞ்சா ஆயிலின் இந்தியச் சந்தை மதிப்பு 45 லட்சம் என்கிற க்யூ பிரிவு அதிகாரிகள், சர்வதேச சந்தையில் இதன் கிராக்கி ஒன்றரை கோடி (இந்திய மதிப்பு) என்கிறார்கள். கஞ்சா ஆயிலையும் பிடிபட்ட இருவரையும் போதை தடுப்பு யூனிட்டான என்.ஐ.பி. வசம் ஒப்படைத்திருக்கிறது க்யூ பிரிவு.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
issue of ration rice should be prevented says Edappadi Palaniswami

ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், ரேஷன் அரிசி கடத்தலுக்கு எதிராக செயல்பட்ட வழக்கறிஞர் வீட்டில் அரிசி கடத்தல் கும்பல் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்ட ஆட்சியில் ஏற்கெனவே போதைப்புழக்கமும், அதுசார்ந்த குற்றங்களும் சர்வ சாதாரணம் ஆகிவிட்ட நிலையில், தற்போது வெடிகுண்டு கலாச்சாரமும் தலைவிரித்தாடுகிறது.

மேலும், தமிழ்நாட்டில் இருந்து ரேஷன் அரிசி வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவதும் இந்த ஆட்சியில் தொடர்கதையாகிவிட்டது. மாநிலத்தில் நடக்கும் எந்த விஷயத்திலும் கட்டுப்பாடு இல்லாத முதல்வராக இன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலின் இருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.

வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய ரேஷன் கடத்தல் கும்பல் மீது துரிதமாக சட்ட நடவடிக்கை எடுத்து, இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழா வண்ணம் சட்டம் ஒழுங்கை நிர்வகிக்குமாறும், ஏழை எளிய மக்களின் பசியாற்றும் ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுத்து நிறுத்துமாறும் முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி வெட்டி கொலை; போலீசார் விசாரணை

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
drug dealer hacked to in broad daylight; Police investigation

புதுச்சேரி கோவில் திருவிழாவில் கஞ்சா வியாபாரி ஒருவரை ஐந்து நபர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி மாநிலம் பெரிய நகர் பகுதியைச் சேர்ந்தவர் ருத்ரேஷ். அந்தப் பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்த இவர் மீது கொலை முயற்சி வழக்கு, கஞ்சா வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பெரியார் நகர் கங்கையம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் இன்று பால்குட ஊர்வலம் நடைபெற்றது. அதில் ருத்ரேஷின் தாய் மற்றும் தங்கை ஆகியோர் பால்குடம் எடுத்தனர். அதற்காக அங்கு ருத்ரேஷ் வந்திருந்த போது, கோவிலில் பதுங்கி இருந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் ருத்ரேஷை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொடூரமாக படுகொலை செய்தனர்.

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி பால் குட ஊர்வலத்திலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உருளையன்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உடல் தற்போது பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.