Skip to main content

அரசு ஊழியர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி சலுகை ரத்து!

Published on 24/06/2022 | Edited on 24/06/2022

 

Cancel jewelry loan discount offer for government employees!

 

கூட்டுறவு வங்கிகளில் அரசு ஊழியர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி சலுகை ரத்து செய்து உத்தரவிடப்பட்டு உள்ளது.

 

கூட்டுறவு சங்கங்களில், 5 பவுன் வரையிலான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 31.3.2021ம் தேதி வரை நகைக்கடன் பெற்றவர்களுக்கு இந்த சலுகை திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், அனைத்து வகையான கூட்டுறவு வங்கிகள், சங்கங்களில் நடந்த தணிக்கையில் அரசாணைக்குப் புறம்பாக அரசு ஊழியர்கள், அவர்களுடைய குடும்பத்தினர், ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கும் நகைக்கடன் தள்ளுபடி சலுகை வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. 

 

இது தொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம், அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், கூட்டுறவு தணிக்கை இயக்குநர் அறிக்கையில், கூட்டுறவு வங்கியில் பொது நகைக்கடன் தள்ளுபடியில் அரசு ஊழியர்கள், அவர்களுடைய குடும்பத்தினர், ஓய்வூதியதாரர்கள் ஆகிய 37984 கடன்தாரர்கள் தகுதியற்றவர்களாக கண்டறியப்பட்டு உள்ளது. 

 

தகுதியற்றவர்களுக்கு அனுமதிக்கப்பட்டு இருந்த அசல் மற்றும் வட்டித் தொகையான 160 கோடி ரூபாய் மறுக்கப்பட வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தப் பட்டியலில் உள்ள தகுதியற்ற கடன்தாரர்களுக்கு தள்ளுபடி சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பின், அவற்றை உடனடியாக ரத்து செய்து அரசாணையில் குறிப்பிட்டுள்ளவாறு உரிய நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு பதிவாளர் தெரிவித்துள்ளார். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வட்டியில்லா கடன் என நகைகளை வாங்கிக் கொண்டு மோசடி; பெண் மீது போலீசில் புகார்

Published on 29/05/2023 | Edited on 29/05/2023

 

 Fraud by buying jewelry as an interest-free loan; A police complaint was filed against the woman

 

வட்டி இல்லா கடன் என்ற பெயரில் நகைகளை வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக திருவாரூரில் பெண் ஒருவர் மீது காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

 

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்துள்ள புகாரில் அப்பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனக்கு திருமணமாகி குழந்தை இல்லாததால் நகைகளை பெற்றுக் கொண்டு வட்டி இல்லாமல் பணம் தருவதாக தெரிவித்தார். நானும் வங்கியில் அடகு வைத்திருந்த 13 பவுன் வகையை மீட்டு அவரிடம் கொடுத்து மூன்று லட்சம் ரூபாய் கடன் பெற்றேன். கடனுக்கான பாதி தொகையை கொடுத்துவிட்டு நகையை கேட்டபோது அவர் தர மறுத்தார். தொடர்ந்து எனக்கு கொலை மிரட்டலும் விட்டு வருகிறார் என புகாரில் தெரிவித்துள்ளார்.

 

மேலும் அப்பெண் இதேபோல ஏராளமானவர்களிடம் நகைகளை பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டு வருகிறார். எனவே உரிய விசாரணை செய்து அவரை கைது செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த புகாரின் மீது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

Next Story

நூதன முறையில் வங்கியை ஏமாற்றிய வாலிபர்; போலீசார் தீவிர விசாரணை 

Published on 20/02/2023 | Edited on 20/02/2023

 

chennai private bank gold loan incident 

 

சென்னை என்.எஸ்.சி. போஸ் சாலை பகுதியைச் சேர்ந்தவர்  ஹர்சல் சிவாஜி (வயது 33). இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு தம்புச் செட்டி தெருவில் செயல்பட்டு வரும் தனியார் வங்கி ஒன்றில் 397 கிராம் அளவிற்கு தங்க நகைகளை வங்கியில் அடமானம் வைத்து 15 லட்சத்திற்கு மேல் நகைக்கடன் பெற்று உள்ளார். நகைக்கடன் பெற்றதில் இருந்து கடனுக்கு உரிய அசல் மற்றும் வட்டி கட்டாமலும் அடகு வைத்த நகைகளை மீட்காமலும் இருந்து வந்துள்ளார்.

 

இதனைத் தொடர்ந்து வங்கி சார்பில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இவரது நகைகளை ஏலத்தில் விட முடிவு செய்து நகைகளை சோதனை செய்தபோது ஹர்சல் சிவாஜி அளித்த நகைகள் அனைத்தும் தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகள் என அறிந்து வாங்கி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த மோசடி சம்பவம் குறித்து வங்கியின் மேலாளர் குருலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த ஹர்சல் சிவாஜி விடுதி ஒன்றில் தங்கி இருப்பது குறித்து போலீசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் போலீசார் தொடர்ந்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

 

ஹர்சல் சிவாஜி மேலும் இதே போன்று வங்கிகளில் போலி நகைகளை வைத்து சுமார் 18 லட்சம் வரை மோசடி செய்து இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த மோசடி சம்பவத்திற்கு ஹர்சல் சிவாஜிக்கு உதவியாக இருந்த வங்கியின் நகை மதிப்பீட்டாளரை போலீசார் தேடி வருகின்றனர். போலி நகைகளை வைத்து பல லட்ச ரூபாய் மோசடி செய்த சம்பவம்  வங்கி அதிகாரிகள் மற்றும் போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.