Skip to main content

ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை நிரந்தரமாக ரத்து செய்ய கோரி மனித சங்கிலி போராட்டம்; இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு

Published on 13/05/2019 | Edited on 13/05/2019

ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை நிரந்தரமாக ரத்து செய்ய கோரி மனித சங்கிலி போராட்டம் நடத்துவதென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், அதன் விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன. 

 

sivapunniyam


இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்ட செயலாளர் சிவபுண்ணியமும், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பி.எஸ்.மாசிலாமணியும் கூறியிருப்பதாவது, “தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் முடிந்த நிலையில், காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை அமல்படுத்தும் வகையில், வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பது டெல்டா விவசாயிகளையும், பொதுமக்களையும் பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது, தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது.
 

ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுத்தால் காவிரி டெல்டா மாவட்டத்தில் உள்ள விளை நிலங்கள், விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், சேவை சங்கங்களும் தொடர்ந்து போராடி வருகிறது.  
 

இதனால் தற்காலிகமாக ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது, இந்நிலையில் 2016-ம் ஆண்டு மத்திய அரசின் புதிய எண்ணெய் எடுப்பு கொள்கையின்படி, மீத்தேன், ஷேல்  காஸ் உள்ளிட்ட பலவகை எண்ணெய் எரிபொருள் எடுப்பதற்கு வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி நிறுவனங்களுக்கு அனுமதியளித்து வேதனையை மூட்டியது. 
 

திருவாரூர், நாகை மாவட்டங்களில் மரபுசாரா எண்ணெய் எடுப்பு பணிகளுக்கு மத்திய வனம் மற்றும் சுற்று சூழல் அமைச்சகத்திற்கு வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் சில வாரங்களுக்கு முன்பு விண்ணப்பித்திருந்தது. இதனை ஏற்று அந்நிறுவனம் மக்களிடம் கருத்துகேட்பு கூட்டம் நடத்தவும், சுற்று சூழல் அறிக்கை, சுற்றுசூழல் மேலாண்மை அறிக்கை தாக்கல் உள்ளிட்ட 32 நிபந்தனைகளை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் முடிவுற்ற நிலையில் மத்திய அரசு டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுப்பதற்கு வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கும் வகையில் கடிதம் அனுப்பியுள்ளதாக சொல்லப்படுகிறது. வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி நிறுவனங்களுக்கு மத்திய மாநில அரசுகள் மறைமுகமாக ஆதரித்து வருவது இதன் மூலம் தெளிவாகிறது.
 

திருவாரூர் மாவட்டத்தில் திருக்களார், ராயநல்லூர், நான்காம்சேத்தி, சேரன்குளம், நெம்மெலி, கருக்கங்குடி, கர்ணாவூர், அரிச்சபுரம், கூத்தாநல்லூர், பூதமங்கலம், மேலராதாநல்லூர், வெங்காரம்பேரையூர், கமலாபுரம், கீழகொத்தங்குடி, புலிவலம், வெங்கடேசபுரம் உள்ளிட்ட இடங்களில் எண்ணெய் கிணறுகள் அமைக்கப்பட உள்ளதாகவும் இதில் கூறப்பட்டுள்ளது. சாதரண ஏழை விவசாயிகளும், விவசாய கூலி தொழிலாளர்களும் நிரம்ப வாழும் இப்பகுதியில் இத்திட்டம் அனுமதிக்கப்பட்டால் தங்களின் வாழ்வாதாரமும், ஜீவாதாரமும் பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் தற்கொலையை தவிர வேறு வழியில்லாத நிலையை அரசே உருவாக்குவது வேதனையளிக்கிறது.
 

சுற்று சூழலுக்கும், விவசாயத்துக்கும், பொது மக்களுக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகளைப் பற்றி கவலைப்படாத வேதாந்தா நிறுவனத்திற்கு இரு உரிமங்களின்படி 247 இடங்களில் ஆய்வு நடத்த அனுமதி அளித்து மக்களை எடப்பாடி அரசு அச்சப்பட வைக்கிறது’’ என்றவர்கள்.
 

மேலும், “தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை அமைத்து அப்பகுதியில் சுற்றுச்சூழலையை நாசப்படுத்தியதுடன், கடல்வாழ் உயிரினங்கள் அழிவதற்கும், அப்பாவி பொதுமக்கள் 13 பேரின் உயிர் பலிக்கும் காரணமான  வேதாந்த குழுமத்திற்கு தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதையும். அதற்கு எடப்பாடி பழனிசாமி அரசு துணை போவதையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
 

தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் தொடர்ந்து போராடி வருகின்ற நிலையில், பாராளுமன்ற தேர்தல் வாக்குறுதியில் அதிமுக உள்ளிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்வோம் என்று அறிவித்திருந்த நிலையில், தேர்தல் முடிந்தவுடன் திட்டத்தை செயல்படுத்துவது மக்களை மேலும் வஞ்சிக்கும் செயலாகும். காவிரி டெல்டா மாவட்டத்தையும், தமிழக விவசாயிகளையும் பாதுகாத்திட ஹைட்ரோகார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஜூன் மாதத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அனைத்து தரப்பு மக்களையும் திரட்டி மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும்.’’ என்று கூறியுள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.

Next Story

'எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும்' -தமிழிசை பேட்டி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

nn


'ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மக்கள் மிகவும் வரவேற்றார்கள்' எனப் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''இந்தத் தேர்தலில் இன்னும் வாக்கு எண்ணிக்கை சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். நேற்றைய தினம் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி சொல்லும்போது ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். சென்னை போன்ற இடங்களில் அப்பொழுதுதான் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். சில பேர் இரண்டு வாக்குகள் வைத்திருக்கிறார்கள். கிராமத்திலும் போய் வாக்களிக்கிறார்கள். அது ஒரே இடத்தில் இருந்தால் சென்னையில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் மக்கள் அதிகமாக வாக்களிக்க வரவேண்டும். வாக்களிக்க வந்தவர்களுக்கு மிக்க நன்றி. ஏனென்றால் அதிகாலையில் வயதானவர்கள், முடியாதவர்கள் கூட வந்து வாக்களித்தார்கள். அவர்களை நான் தலை வணங்குகிறேன். எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும். பாரதிய ஜனதா கட்சிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. வடசென்னை பகுதியாக இருக்கட்டும், தென் சென்னை, மத்திய சென்னை, தமிழகம் முழுவதும் குறிப்பாக தென் சென்னையில் நான் போட்டியிட்ட இடத்தில் மக்கள் மிகுந்த அன்பையும் ஆதரவையும் அளித்தார்கள், என்னை உணர்ச்சி வயப்படும் அளவிற்கு, நெகிழ்ச்சி அடைய வைக்கும் அளவிற்கு எல்லோரும் என்னிடம் அன்பு பாராட்டினார்கள். ஒரு ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மிகவும் வரவேற்றார்கள்''என்றார்.