Skip to main content

தரைப்பாலத்தில் வெள்ளம்- சிக்கிய பக்தர்கள் மீட்பு!

Published on 16/10/2021 | Edited on 16/10/2021

 

bridge floods - Trapped devotees rescued!

 

நெல்லை மாவட்டத்தின் களக்காடு அருகிலுள்ள திருக்குறுங்குடியின் மலைமீது நம்பி கோவில் உள்ளது. பெருமாள் கோவில் என்பதால் சனிக்கிழமைகளில் விஷேசமாக இருக்கும். அதுசமயம் மலை மீது 5 கி.மீ. தொலைவிலுள்ள நம்பிகோவிலின் வழிபாட்டிற்காகப் பக்தர்கள் செல்வர்.

 

அதன் பொருட்டு வனத்துறையினர் பக்தர்கள் செல்லும் வகையில் மலைப்பாதையும் அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள். இதர நாட்களை விட புரட்டாசி மாதத்தின் ஒவ்வொரு சனிக்கிழமையும் நம்பி பெருமாளை வழிபடும் பொருட்டு பக்தர்கள் அதிக அளவில் திரளுவதுண்டு.

 

bridge floods - Trapped devotees rescued!

 

தற்போதைய கரோனா தொற்று பரவல் காரணமாக ஆலயங்களில் வழிபாட்டிற்கான தடை விதிக்கப்பட்டிருந்தது. பின்னர் அரசால் தடை நீக்கப்பட்டதால் பக்தர்கள் ஆலய வழிபாட்டிற்காகச் செல்ல ஆரம்பித்தனர். குறிப்பாக, அண்மை நாட்களாக வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் பக்தர்கள் செல்ல விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதால், பக்தர்கள் வழக்கம் போல் வழிபாட்டிற்குச் செல்லத் தொடங்கினர்.

 

தற்போதைய புரட்டாசி சனி என்பதால் பக்தர்கள் இன்று (16/10/2021) காலை திருக்குறுங்குடி மலை நம்பி கோவிலுக்குச் செல்ல ஆரம்பித்தனர். இந்த நிலையில் நேற்றைய தினம் இரவு மலை மீது தொடர் மழை பெய்ததால் மலையில் வெள்ளப் பெருக்கெடுத்து மலைக் கோவிலுக்குச் செல்லும் கரப்பாற்றுப் பாலத்தையும் மூழ்கடித்து காட்டாற்று வெள்ளம் சென்றிருக்கிறது. சனிக்கிழமையான இன்று (16/10/2021) காலை வழிபாடு நிமித்தம் சென்ற பக்தர்கள் தரையிறங்கிவிட்டனர். அதன் பின் சென்ற 50- க்கும் மேற்பட்டவர்கள் வரமுடியாமல் சிக்கிக் கொண்டனர்.

bridge floods - Trapped devotees rescued!

தகவலறிந்த மாவட்ட எஸ்.பி.யான மணிவண்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்தவர் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார். வள்ளியூர், நாங்குநேரிப் பகுதிகளிலிருந்து வரவழைக்கப்பட்ட தீயணைப்பு படையினர் பாலத்தின் இருபக்கமும் பயிறு கட்டி அதன் மூலம் சுமார் 50- க்கும் மேற்பட்ட பக்தர்களை மீட்டனர். மதியம் ஒரு மணிக்குத் தொடங்கிய இந்த மீட்புப் பணி மாலை 05.00 மணி வரை நீடித்தது.

 

வருடம் தோறும் மழை வெள்ளம் செல்வதால் பக்தர்கள் ஆலயம் செல்ல முடியாமல் போகிறது. அதனால் கரப்பாற்றுப் பாலத்தை உயர்த்தியும் பாதைகளைச் சீரமைக்கவும் வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் ஏற்கனவே கோரிக்கை மனு அளித்திருப்பதாகத் தெரிவித்தார் மாநில விவசாய சங்கத் தலைவரான பெரும்படையார்.

 

eee

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் சிக்கிய விவகாரம்; ஹோட்டல் ஊழியர்கள் காவல் நிலையத்தில் ஆஜர்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
 4 crore rupees issue; Hotel staff present at police station

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

முன்னதாக தமிழகத்தில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக சென்று கொண்டிருந்த நேரத்தில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவத்தில் ரொக்கமாக நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் நான்கு கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணியாற்றிய  ஊழியர்கள் மற்றும் உறவினர்களுக்கு காவல்துறை சார்பில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பட்டிருந்தது. தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராகி இது தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணியாற்றிய இரண்டு ஊழியர்கள் தற்போது தாம்பரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். ராஜேந்திரனின் உறவினர் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் என்பவரிடம் இன்று மாலை விசாரணை நடத்த தாம்பரம் போலீசார் முடிவு செய்திருப்பதாகவும்  தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story

மயிலாடுதுறையில் சிறுத்தை; அம்பாசமுத்திரத்தில் கரடி; வைரலாகும் வீடியோ காட்சிகள்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Leopard in Mayiladuthurai; Bear in Ambasamudra; Videos go viral

கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில் வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. மயிலாடுதுறையில் அண்மையில் தென்பட்ட சிறுத்தையை பிடிக்கும் பணியானது ஏழு நாட்களுக்கும் மேலாக இன்று வரை தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், அம்பாசமுத்திரத்தில் வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் புகுந்த கரடி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்த, நபர் ஒருவரை கரடி துரத்துவதும், அந்த நபர் தலைதெறிக்க ஓடும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை ஒட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் புலி, சிறுத்தை, கரடி, யானை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் இருக்கும் நிலையில், தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு மலை ஓரத்தில் உள்ள கிராமங்களில் விலங்குகள் தஞ்சம் புகுவது வாடிக்கையாகி வருகிறது.

Leopard in Mayiladuthurai; Bear in Ambasamudra; Videos go viral

இந்த நிலையில் இன்று அதிகாலை கல்லிடைக்குறிச்சி பகுதிக்கு கரடி ஒன்று வந்துள்ளது. அதிகாலை வீட்டை விட்டு வெளியே வந்த ஒருவர், கரடியைப் பார்த்தவுடன் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி ஓடினார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த அம்பாசமுத்திரம் வனச்சரகர் நித்யா தலைமையிலான வனத்துறையினர் ஊருக்குள் புகுந்த கரடியைத் தேடி வருகின்றனர். பொதுமக்களுக்கு எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டு வருகிறது.