Skip to main content

தரைப்பாலத்தில் வெள்ளம்- சிக்கிய பக்தர்கள் மீட்பு!

Published on 16/10/2021 | Edited on 16/10/2021

 

bridge floods - Trapped devotees rescued!

 

நெல்லை மாவட்டத்தின் களக்காடு அருகிலுள்ள திருக்குறுங்குடியின் மலைமீது நம்பி கோவில் உள்ளது. பெருமாள் கோவில் என்பதால் சனிக்கிழமைகளில் விஷேசமாக இருக்கும். அதுசமயம் மலை மீது 5 கி.மீ. தொலைவிலுள்ள நம்பிகோவிலின் வழிபாட்டிற்காகப் பக்தர்கள் செல்வர்.

 

அதன் பொருட்டு வனத்துறையினர் பக்தர்கள் செல்லும் வகையில் மலைப்பாதையும் அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள். இதர நாட்களை விட புரட்டாசி மாதத்தின் ஒவ்வொரு சனிக்கிழமையும் நம்பி பெருமாளை வழிபடும் பொருட்டு பக்தர்கள் அதிக அளவில் திரளுவதுண்டு.

 

bridge floods - Trapped devotees rescued!

 

தற்போதைய கரோனா தொற்று பரவல் காரணமாக ஆலயங்களில் வழிபாட்டிற்கான தடை விதிக்கப்பட்டிருந்தது. பின்னர் அரசால் தடை நீக்கப்பட்டதால் பக்தர்கள் ஆலய வழிபாட்டிற்காகச் செல்ல ஆரம்பித்தனர். குறிப்பாக, அண்மை நாட்களாக வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் பக்தர்கள் செல்ல விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதால், பக்தர்கள் வழக்கம் போல் வழிபாட்டிற்குச் செல்லத் தொடங்கினர்.

 

தற்போதைய புரட்டாசி சனி என்பதால் பக்தர்கள் இன்று (16/10/2021) காலை திருக்குறுங்குடி மலை நம்பி கோவிலுக்குச் செல்ல ஆரம்பித்தனர். இந்த நிலையில் நேற்றைய தினம் இரவு மலை மீது தொடர் மழை பெய்ததால் மலையில் வெள்ளப் பெருக்கெடுத்து மலைக் கோவிலுக்குச் செல்லும் கரப்பாற்றுப் பாலத்தையும் மூழ்கடித்து காட்டாற்று வெள்ளம் சென்றிருக்கிறது. சனிக்கிழமையான இன்று (16/10/2021) காலை வழிபாடு நிமித்தம் சென்ற பக்தர்கள் தரையிறங்கிவிட்டனர். அதன் பின் சென்ற 50- க்கும் மேற்பட்டவர்கள் வரமுடியாமல் சிக்கிக் கொண்டனர்.

bridge floods - Trapped devotees rescued!

தகவலறிந்த மாவட்ட எஸ்.பி.யான மணிவண்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்தவர் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார். வள்ளியூர், நாங்குநேரிப் பகுதிகளிலிருந்து வரவழைக்கப்பட்ட தீயணைப்பு படையினர் பாலத்தின் இருபக்கமும் பயிறு கட்டி அதன் மூலம் சுமார் 50- க்கும் மேற்பட்ட பக்தர்களை மீட்டனர். மதியம் ஒரு மணிக்குத் தொடங்கிய இந்த மீட்புப் பணி மாலை 05.00 மணி வரை நீடித்தது.

 

வருடம் தோறும் மழை வெள்ளம் செல்வதால் பக்தர்கள் ஆலயம் செல்ல முடியாமல் போகிறது. அதனால் கரப்பாற்றுப் பாலத்தை உயர்த்தியும் பாதைகளைச் சீரமைக்கவும் வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் ஏற்கனவே கோரிக்கை மனு அளித்திருப்பதாகத் தெரிவித்தார் மாநில விவசாய சங்கத் தலைவரான பெரும்படையார்.

 

eee

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.

Next Story

மது போதையில் ரகளை; தட்டிக் கேட்டவர் கொலை; சுட்டுப் பிடித்த போலீசார்

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Intoxicated with alcohol; Police shot

சிறையில் இருந்து வந்த இளைஞர் மது போதையில் சாலை பணியாளரை அரிவாளால் வெட்டி கொன்றுவிட்டு காவலரையும் வெட்டிக் கொல்ல முயன்ற சம்பவம் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் வெள்ளங்குளி பகுதியை சேர்ந்த பேச்சிதுரை என்ற நபர் வழக்கு ஒன்றில் சிக்கி கடந்த வாரம் பாளையங்கோட்டை சிறையில் இருந்து வெளிவந்த நிலையில், தன்னுடைய நண்பர் சந்துரு என்பவருடன் சேர்ந்து காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மது போதையில் இருந்த இருவரும் சாலையில் காரை நிறுத்தி ரகளை செய்து கொண்டிருந்தனர். அந்த பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த சாலை பணியாளர் கருப்புசாமி என்பவர் இதனைத் தட்டிக் கேட்டுள்ளார்.

போதையில் ஆத்திரமடைந்த பேச்சிதுரை சாலைப் பணியாளர் கருப்பசாமியை அரிவாளால் வெட்டிக்கொலை செய்துள்ளார். அதன் பிறகு அந்த வழியாக வந்த அரசு பேருந்தின் முன் பக்க கண்ணாடியை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு வந்த தலைமைக் காவலர் செந்தில்குமார் விசாரணை நடத்திக் கொண்டிருந்த போது, அவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு அருகிலிருந்த வாழை தோப்புக்குள்  பேச்சிதுரை தலைமறைவானான்.

Intoxicated with alcohol; Police shot

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்த உடனடியாக காவல்துறையினர் பலர் அந்த பகுதியில் முகாமிட்டனர். தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையை அடுத்து வாழை மர தோப்பில் பதுங்கி இருந்த பேச்சிதுரையை போலீசார் சுட்டுப் பிடித்தனர். அதன் பிறகு அவனுடன் சேர்ந்து ரகளையில் ஈடுபட்ட சந்துருவையும் போலீசார் கைது செய்துள்ளனர். மதுபோதையில் நிகழ்ந்த இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.