Skip to main content

கணவன் - மனைவி இருவருமே என்னை பயன்படுத்தினர் - காதலன் வாக்குமூலத்தால் போலீசார் அதிர்ச்சி

Published on 25/08/2018 | Edited on 25/08/2018


 

Both husband and wife used me


கட்டிட தொழிலாளி பிணமாக கிடந்த வழக்கில், மனைவியுடன் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்ட சம்பவமும், தன்னை கணவன் - மனைவி இருவமே பயன்படுத்தினர் என கள்ளக்காதலன் கொடுத்த வாக்குமூலமும் போலீசாரை அதிர்ச்சியடைய வைத்தது. 
 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மணப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ராமன். 33 வயதான இவருக்கு 22 வயதில் அனிதா என்ற மனைவியும், ஒன்றரை வயதில் பிரதீஷ் என்ற மகனும் உள்ளனர். கடந்த 14-ந் தேதி முதல் ராமனை காணவில்லை. கணவனை காணவில்லை என அனிதா அக்கம் பக்கத்தில் கூறினார். உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தனர். 
 

 

 

புகாரின் பேரில் போலீசார் தேடி வந்த நிலையில் கடந்த 22-ந்தேதி, பணிக்கன்குப்பத்தில் ராமன் பிணமாக கிடந்தார். தகவல் அறிந்த அனிதா கதறி அழுதார். அவரது குடும்பத்தினரும் கதறினர். மேலும் ராமன் கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். ராமன் கானாமல் போனது, சடலமாக கிடைத்தது குறித்து கிராம நிர்வாக அலுவலர் மைக்கேல் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
 

போலீசார் விசாரணையில் விழுப்புரம் மாவட்டம் சொர்ணாவூர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் மகன் சந்தோஷ்குமார் என்பவர் மீது சந்தேகம் வந்தது. இதையறிந்த  சந்தோஷ்குமார் சொர்ணாவூர் கிராம நிர்வாக அலுவலர் இளஞ்செழியனிடம் சரணடைந்தார். காடாம்புலியூர் போலீசார், சந்தோஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
 

அப்போது சந்தோஷ்குமார் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், ராமன், அனிதா ஆகியோர் யார் என்று எனக்கு தெரியாது. சொர்ணாவூரில் ஒரு வருடத்திற்கு முன்பு நடந்த ஒரு திருமண விழாவில் அவர்களை சந்தித்தேன். அப்போது ராமன், அனிதாவிடம் பழகினேன். இந்த பழக்கத்தால் ராமனிடம் செல்போனில் பேச ஆரம்பித்தேன். நாளடைவில் ராமனின் வீட்டுக்கும் செல்ல ஆரம்பித்தேன்.
 

 

 

அடிக்கடி சென்று பேசிக்கொண்டிருக்கும்போதுதான் ஒரு நாள் ராமன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபாடு உள்ளவராக இருந்துள்ளார். இதனால் என்னை தனது ஆசைக்கு பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்தார். அதற்கு நானும் உடன்பட்டேன். இது பலமுறை நடந்தது. 
 

இதற்கிடையே, ராமனை சந்திக்க சென்ற எனக்கு அனிதாவுடன் பழக்கம் ஏற்பட்டது. ராமன் இல்லாத நேரத்தில் அனிதாவுடன் பேசிக்கொண்டிருப்பேன். அடிக்கடி ராமன் வீட்டுக்கு சென்றதால், அனிதாவுடனான நட்பு கள்ளக்காதலாக மாறியது. ராமன் இல்லாத நேரத்தில் நாங்கள் இருவரும் அடிக்கடி உல்லாசம் அனுபவித்தோம். ஒரு கட்டத்தில் ராமனுடைய ஆசையை நிறைவேற்றுவதில் வெறுப்பு ஏற்பட்டு நான் மறுப்பு தெரிவித்தேன். இருப்பினும் என்னை ராமன் கட்டாயப்படுத்துவார். 
 

இதையடுத்து, ராமன் செயல்கள் குறித்து அனிதாவிடம் இதுபற்றி தெரிவித்தேன். அப்போது அவர் கடும் அதிர்ச்சியடைந்தார். இப்படிப்பட்ட கணவர் தனக்கு வேண்டாம். நாம் இருவரும் சேர்ந்து வாழ ராமனை தீர்த்துக் கட்டிவிடலாம் என்று தெரிவித்தார். 
 

அதன்படி கடந்த 14-ந்தேதி எனக்கு ராமன் போன் செய்து அழைத்தார். அப்போது, மது பாட்டில் ஒன்றை, வாங்கி அதில் 10 தூக்க மாத்திரைகளை கலந்து எடுத்து சென்றேன். இருவரும் வழக்கம் போல் பணிக்கன்குப்பத்தில் உள்ள முந்திரிதோப்புக்கு சென்று, அங்கு தனிமையில் இருந்தோம். அவரது ஆசையை நான் நிறைவேற்றினேன். 
 

 

 

வழக்கம்போல மது வாங்கி வந்திருக்கிறேன் என்று மதுவை கொடுத்ததும், ராமனும் குடித்துவிட்டு மயங்கினார். பின்னர் கைலியை எடுத்து ராமனின் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பினேன். ராமனுடன் பழகிய விதம், அவருடைய மனைவியை அடைந்த விதம், ராமனை கொலை செய்த சம்பவம் அனைத்தையும் நினைத்து தவறு செய்துவிட்டோம், என்ன செய்யலாம் என்று எண்ருந்தபோது போலீசார் தன்னை தேடுவது பற்றி அறிந்தவுடன், எப்படியும் மாட்டிக்கொள்வோம், அதுக்கு நாமே போய் சரணடைவோம் என்று கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்ததாக தெரிவித்துள்ளார்.
 

சந்தோஷ்குமார் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அனிதாவையும், சந்தோஷ்குமாரையும் போலீசார் கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

 



 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆன்லைன் ரம்மியில் மூழ்கிய கணவன்; மனைவி எடுத்த பரிதாப முடிவு

Published on 10/03/2024 | Edited on 10/03/2024
nn

ஆன்லைன் ரம்மி சூதாட்டம் காரணமாக பலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் தமிழகம் மட்டுமல்லாது பல மாநிலங்களில் நிகழ்ந்து வருகிறது. இந்தநிலையில் கள்ளக்குறிச்சியில் ரம்மி ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான கணவனால் மனைவி தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி அண்ணா நகர் பிரதான சாலை பகுதியில் வசித்து வருபவர் செண்பகராமன். இவருடைய மனைவி கௌசல்யா. கணவன் செண்பகராமன் ரம்மி ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் வெளியே சென்ற செண்பகராமன் ஆன்லைன் ரம்மி விளையாடிக் கொண்டிருந்த பொழுது மனைவி கைது கௌசல்யா கால் செய்துள்ளார்.

ஆனால் செண்பகராமன் அவருடைய விளையாட்டில் பிஸியாக இருந்தால் அழைப்பை எடுக்க மறுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து வீட்டுக்கு வந்த செண்பகராமனிடம் கௌசல்யா செல்போன் அழைப்பை எடுக்காதது குறித்து கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் வீட்டை விட்டு செண்பகராமன் வெளியே சென்ற நிலையில், கௌசல்யா மனமுடைந்து தூக்கிட்டு வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் காவல் நிலையத்திற்கு சென்ற நிலையில் உடலை கைப்பற்றிய போலீசார் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததோடு, இந்த சம்பவம் தொடர்பாக கணவன் செண்பகராமனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மனைவி இறந்த செய்தியைக் கேட்ட அடுத்த நொடியே உயிரிழந்த கணவன்!

Published on 25/01/2024 | Edited on 25/01/2024
 husband passed away the second he heard the news of his wife lost their life

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பூங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வயது முதிர்ந்த தம்பதியினர் ராஜா(65), ஜோதி(60). இவர்கள் விவசாயம் செய்து வந்துள்ளனர். இவர்களுக்கு  2 ஆண் மற்றும் ஒரு பெண் என 3 பிள்ளைகள் உள்ளனர். இவருடைய மனைவி ஜோதி கடந்த 2 ஆண்டுகளாக சிறுநீரகக் கோளாறு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த இந்நிலையில் நேற்று ஜோதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு வேலூர் அடுக்கம்பாரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இன்று அவர் சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்துள்ளார். இந்த செய்தியைக் கேட்ட அவரது கணவர் ராஜா அடுத்த நொடியே வீட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். 

ad

இந்த தகவல் அறிந்த கிராம மக்கள், அரசியல் பிரமுகர்கள் நேரில் சென்று இருவர் உடலுக்கும் அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். மிகவும் பாசமாக வாழ்ந்த வயது முதிர்ந்த தம்பதியினர் 2 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.