Skip to main content

வாகன சோதனையில் காவல்துறையினர் அத்துமீறல்! - இருசக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கு எலும்பு முறிவு!

Published on 12/09/2018 | Edited on 12/09/2018
Vehicle inspection


காவல்துறையினரின் அத்துமீறிய வாகன சோதனையின் போது, இருசக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதால் சம்பந்தபட்ட காவலர் மீது வழக்கு பதிவு செய்யகோரி சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே குமாராட்சி காவல் நிலைய எல்லலைக்குட்பட்ட வீரநத்தம் என்ற இடத்தில் குமராட்சி காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காட்டுமன்னார்கோவிலை அடுத்த வீராண நல்லூர் கிரமத்தை சேர்ந்த குணசேகரன், பொன்னம்பலம் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அப்போது வாகனத்தை சோதனை செய்து கொண்டிருந்த காவலர்கள் இவர்கள் வாகனத்தை நிறுத்துவற்குள், வண்டியை ஓட்டிவந்தவரின் கையை பிடித்து இழுத்துள்ளார்.

இதில் வாகனத்தில் வந்த இருவரும், அவர்கள் ஓட்டிவந்த இருசக்கர வாகனமும் கீழே விழுந்ததில் அவர்கள் பலத்த காயம் அடைந்தனர். உடனடியாக அருகிலிருந்தவர்கள் அவர்களை மீட்டு காட்டுமன்னார்கோயில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். காயம் பட்டவர்களில் ஒருவருக்கு பலத்த எலும்பு முறிவும், மற்றொருவருக்கு அடி பலமாக பட்டதில் காதில் இருந்து ரத்தம் வந்துகொண்டிருந்தது. மேலும் காதில் இருந்து ரத்தம் வந்தவருக்கு மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 

Vehicle inspection


இது குறித்து பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ், மார்க்சிஸ்ட் கட்சியின் காட்டுமன்னார்கோயில் வட்டசெயலாளர் இளங்கோ மற்றும் கட்சியினர் சம்பவத்தை அறிந்து காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு வந்து விசாரித்துக் கொண்டு இருக்கையில், அப்போது அங்கு இருந்த குமராட்சி காவலர் ஒருவர் மருத்துவமனையில் உள்ள முதல் தகவல் அறிக்கை ரசீதை மருத்துவர் அனுமதி இல்லாமல் கிழித்து விட்டு சென்றார்.
 

Vehicle inspection


இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விதோச மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமையில் திங்கள் இரவு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து காவல்துறை ஆய்வாளர் ஷீயாம்சுந்தர் சம்பந்தபட்ட காவலர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கிறேன் என்று உறுதி கூறினார். இதனை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக இரவு நேரத்தில் விளக்கிகொள்ளப்பட்டது.

இந்நிலையில் செவ்வாய் காலை சம்பந்தபட்ட காவலர் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியினர் மற்றும் விபத்துக்குள்ளானவர்களின் உறவினர்கள் குமராட்சி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். வழக்கு பதிவது குறித்து காவல்துறை ஆய்வாளர் சரியான பதில் கூறாமல் மழுப்பலாக பேசியுள்ளார். பின்னர் ஆய்வாளரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைவரும் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பந்தபட்ட காவலர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோட்டாட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்காளர்களுக்கு பணம்; கையும் களவுமாக சிக்கிய பாஜக பிரமுகர்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Money for Voters BJP leader caught handed

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் வசந்த ராஜன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக வாக்களிக்கக் கோரி நேற்று நள்ளிரவில் பூலுவப்பட்டியில் உள்ள தேநீர் கடையில் வார்டு வாரியாக ஆலந்துறை பாஜக மண்டல தலைவர் ஜோதி மணி என்பவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துள்ளார்.

இது குறித்து கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பணம் விநியோகம் செய்த பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரிடம் இருந்த ரூ.81 ஆயிரம் ரொக்கப்பணத்தையும், வாக்காளர் பெயர்கள் அடங்கிய பட்டியலையும் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஏற்கனவே சில வார்டுகளில் பணம் விநியோகம் செய்த நிலையில் மேலும் சில வார்டுகளுக்கு பணம் கொடுக்க முயன்றது தெரிய வந்துள்ளது. 

Next Story

'மீண்டும் சிக்கிய 4 கோடி'-பறக்கும் படை அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
erode


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.

மேலும், தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் இரவு பகல் என சுழற்சி முறையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் தொகையைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.

அதன்படி ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, கோபி, அந்தியூர், பவானி சாகர் என மாவட்டம் முழுவதும் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவரைத் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையின் போது, உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.4 கோடியே 28 லட்சத்து 20 ஆயிரத்து 303 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் காண்பித்ததால் ரூ.2 கோடியே 95 லட்சத்து 65 ஆயிரத்து 213 சம்பந்தப்பட்டவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதம் 1 கோடியே 32 லட்சத்து 55 ஆயிரத்து 90 ரூபாய் பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் பாஜகவின் நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அது தொடர்பாக அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.