Skip to main content

பாஜகவின் கோவில் அரசியல்... குட்டு வைத்த நீதிமன்றம்!

Published on 04/07/2022 | Edited on 04/07/2022

 

BJP's temple politics...  court!

 

குமரி மாவட்டம் வேளிமலை குமாரகோவில் முருகன் கோவிலில் ஜூன் 11ஆம் தேதி  நடந்த தேரோட்டத்தின்போது இந்து மதம் நம்பிக்கை இல்லாத மாற்று மதத்தைச் சேர்ந்த அமைச்சர் மனோதங்கராஜ் தேர் வடத்தைப் பிடித்து இழுக்க பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்ததை மீறியும் அவர் தேரின் வடம் பிடித்து இழுத்தார். அதேபோல் ஜூன் 14-ம் தேதி மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை தொடக்க விழாவில் அமைச்சர் மனோதங்கராஜ் கலந்து கொள்வதற்கும் பாஜகவினர் எதிர்ப்பு காட்டியதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனையைக் கருத்தில் கொண்டு அந்த நிகழ்ச்சியில் மனோதங்கராஜ் கலந்து கொள்ளாமல் அவருக்கு பதில் இந்து மதத்தை சேர்ந்த நாகர்கோவில் மேயர் மகேஷ் அதில் கலந்து கொண்டார்.

 

இந்தநிலையில்தான் தென்மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற 108 வைணவத் தலங்களில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் 418 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் வருகிற 6-ம் தேதி நடக்க இருக்கிறது. அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்பட்ட கும்பாபிஷேக அழைப்பிதழில் அமைச்சர் மனோ தங்கராஜின் பெயர் இடம் பெற்றிருந்ததால் பாஜகவினருக்கு அது உஷ்ணத்தை ஏற்றியது. இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

 

mm

 

மேலும் பிரம்மபுரத்தை சேர்ந்த சோமன், இந்துக்கள் அல்லாதவர்கள் கும்பாபிஷேகம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக்கூடாது. மேலும் கும்பாபிஷேகத்திற்காக பக்தர்களிடமிருந்து பணம் வசூல் செய்யப்பட்டுள்ளது. ஆகம விதிப்படி கும்பாபிஷேகம் விழாக்களில் கலந்து கொள்ளும் ஆண்கள் மேல் சட்டையைக் கழற்றி விட்டு தான் பங்கேற்க வேண்டும். அரசு விழாவாக நடைபெறும் போது இந்துக்கள் அல்லாதவர்கள் கலந்து கொள்ளும் போது சம்பிரதாயங்கள் கடைபிடிக்காமல் கோவிலின் புனிதம் கெட வாய்ப்புள்ளது. எனவே இந்துக்கள் அல்லாதவரை நுழைய அனுமதிக்கக் கூடாது என்று மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

 

அந்த மனுவை விசாரித்து நீதியரசர்கள் பி.என் பிரகாஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் கும்பாபிஷேகம் விழாக்களில் இந்துக்கள் அல்லாதோர் பங்கேற்க கூடாது என்று இந்து சமய அறநிலையத்துறையின் விதிகளில் சொல்லப்படவில்லை. 120 கோடி மக்கள் வாழும் இந்த நாட்டில் இறை நம்பிக்கை கொண்டவர்கள் கோவிலுக்கு செல்லும்போது அவர்களின் மதத்தை உறுதி செய்வது பெரும் பிரச்சினையை வழிவகுக்கும்.

 

எனவே இந்த விவகாரத்தை நீதிமன்றம் குறுகிய பார்வையில் அணுக விரும்பவில்லை பரந்த மனபான்மையில் அணுக வேண்டும் என கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்தார். இது பாஜகவினருக்கு பலத்த எதிரடியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் மனோ தங்கராஜ் ஐகோர்ட் கிளையின் தீர்ப்பு போலி ஆன்மீகம் பேசும் பாஜக மத வெறியர்களுக்கு கிடைத்த செருப்படி என்றிருக்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.