Skip to main content

“தேர்தல் நெருங்குவதால் எல்.முருகன் வேல் யாத்திரை நடத்துகிறார்” - அமைச்சர் செல்லூர் ராஜு! 

Published on 11/11/2020 | Edited on 11/11/2020

 

"BJP leader Murugan is conducting a vel pilgrimage as the election is approaching" Minister sellur Raju


மதுரை தங்கராஜ் சாலையில், 1986ஆம் ஆண்டு முதல் செயல்படும், அன்னை சத்தியா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்லம், ரூ.5 கோடி மதிப்பில் புதிய கட்டிடமாகக் கட்டப்பட்டது. இதை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். 


இக்கட்டிடத்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் நிகழ்ச்சியில், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் ஆட்சியர் அன்பழகன், ஆணையர் விசாகன் ஆகியோர் பங்கேற்று ஆய்வு செய்தனர். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு கூறுகையில், “பீகார் தேர்தலில் வெற்றிபெற்ற நிதிஷ்குமார் மற்றும் பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள். 

 

அ.தி.மு.க.வின் 10 ஆண்டுகால ஆட்சியில் மதுரை நன்றாக வளர்ந்துள்ளது. தி.மு.க ஆட்சிக் காலத்தில் மதுரை மாவட்டத்தில் ரவுடிகள் மட்டுமே வளர்ந்தனர். தி.மு.க ஆட்சிக் காலத்தில், ஸ்டாலின் மதுரைக்கு வர பயப்பட்டார். பீகார் தேர்தல் காரணமாக வெங்காயம் கொண்டு வர முடியாததால், தமிழகத்தில் வெங்காய விலை உயர்ந்துள்ளது.

 

தி.மு.க ஆட்சிக் காலத்தில் நடத்த முடியாத கூட்டுறவுத்துறை தேர்தலை அ.தி.மு.க ஆட்சியில், 2 முறை நடத்தி முடித்துள்ளோம். தி.மு.க ஆட்சிக் காலத்தில் ரேஷன் பொருட்கள் கடத்தப்பட்டன. அ.தி.மு.க அரசின் வளர்ச்சி திட்டங்களை நேரில் பார்த்து, ஸ்டாலின் பேச வேண்டும்.

 

cnc

 

கரோனா தொற்று காலகட்டத்தில் பா.ஜ.க நடத்தும் வேல் யாத்திரையைத் தவிர்த்து இருக்கலாம். அரசியல் காரணம் மற்றும் தேர்தல் நெருங்குவதால் பா.ஜ.க தலைவர் எல்.முருகன் வேல் யாத்திரை நடத்துகிறார்.


பிரேமலதா விஜயகாந்த் எங்கள் ஊர் மருமகள். அவரிடம் தவறான செய்தியைக் கூறியதால், 'ஸ்மார்ட் சிட்டி' பணிகள் முடிந்துவிட்டது என்று நினைத்துக் கொண்டு சாலைகள் சரியில்லை என்று புகார் கூறியுள்ளார். விஜயகாந்த் ஓடியாடி விளையாடிய இடங்கள் அனைத்தும் தற்போது, 'ஸ்மார்ட் சிட்டி' மூலம் வளமாக இருக்கிறது.” என்று தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“விஷம் கொடுத்து கொல்பவர்களும் உள்ளனர்” - பா.ஜ.கவை கடுமையாக விமர்சித்த செல்லூர் ராஜு

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
Sellur Raju who severely criticized the BJP

இரண்டு நாள் சுற்றுப் பயணமாகத் தமிழகம் வந்திருக்கும் பிரதமர் மோடி, கடந்த பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பா.ஜ.க. நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இதனையடுத்து இரண்டாவது நாளாக தூத்துக்குடியில் நடைபெற்ற பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அந்த வகையில் பல்லடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வணக்கம் எனக் கூறி பேசுகையில், “தமிழ் மொழி மிகவும் பழமையானது. பல்வேறு சிறப்புகளை கொண்டது. தமிழகத்திலிருந்து கொண்டு செல்லப்பட்ட செங்கோல் நாடாளுமன்றத்தை அலங்கரிக்கிறது. கடந்த 1991இல் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு இடையில் காஷ்மீரில் தேசியக்கொடியை ஏற்றினோம். நல்லாட்சியை நடத்தி தமிழகத்திற்கு கல்வி, சுகாதாரத்தை எம்.ஜி.ஆர். கொடுத்துள்ளார். குடும்ப அரசியல் நடத்தி எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வரவில்லை. எம்.ஜி.ஆருக்கு பிறகு ஜெயலலிதாதான் தமிழகத்தில் சிறந்த ஆட்சியை கொடுத்தார். ஜெயலலிதா தனது வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களின் நலன் மற்றும் வளர்ச்சிக்காக பணியாற்றினார். என் மீது அன்பு கொண்டவர்கள் தமிழக மக்கள். பாஜகவின் இதயத்தில் தமிழ்நாடு உள்ளது. தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

கடந்த 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் கூட்டணியில் திமுக அங்கம் வகித்தபோது தமிழகத்திற்கு ஒன்றும் செய்யவில்லை. தமிழகம் தேசியத்தின் பக்கம் நிற்பதை இங்கு கூடியுள்ள மக்கள் மூலம் தெரிகிறது. 2024 தேர்தலில் தமிழகத்தில் அரசியல் திருப்பம் ஏற்படும். ஒவ்வொரு பாஜக தொண்டரும் தேசமே பிரதானம் என கருதி உழைக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். மேலும் தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி திமுகவை கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில், மதுரையில் அதிமுக வழக்கறிஞர்கள் பிரிவு ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்துகொண்டு பிரதமர் மோடியையும் பா.ஜ.க.வையும் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். அதில் அவர், “வெல்லம் கொடுத்து கொல்பவர்களும் இருக்கிறார்கள். விஷம் கொடுத்து கொல்பவர்களும் இருக்கிறார்கள். அதிமுக தலைவர்களை உயர்த்தி பேசினால் பா.ஜ.க.வுக்கு வாக்கு கிடைக்கும் என பிரதமரே நினைக்கிறார். பா.ஜ.க கார்ப்பரேட் கம்பெனிகளுக்கானது. ஒன்றிய பா.ஜ.க ஆட்சியில் விலைவாசி உயர்வு விண்ணை எட்டியுள்ளது.

பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 15 லட்சம் கொடுப்போம் என்று பிரதமர் கூறினார். வேலைவாய்ப்பு தருவோம் என்று கூறினார்கள். ஆனால் பா.ஜ.க எதுவுமே செய்யவில்லை. தமிழ்நாட்டில் மழை வெள்ள பாதிப்புக்கு நிவாரணம் தர ஒன்றிய அரசுக்கு மனமில்லை. தமிழ்நாட்டின் வளர்ச்சியை தேசியக் கட்சிகள் புறக்கணிக்கின்றன. தமிழர் உரிமை, மொழிதான் முக்கியம் என்று பா.ஜ.க கூட்டணியை முறித்து தைரியமாக எடப்பாடி பழனிசாமி முடிவு எடுத்துள்ளார்” என்று பேசினார். 

Next Story

''கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமையக் காரணமே அதிமுகதான்''- செல்லூர் ராஜூ பேச்சு

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
"The reason for the construction of Klambakkam bus stand is AIADMK"-Sellur Raju's speech

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைவதற்கு காரணமாக இருந்தது அதிமுகதான் என  அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

மதுரையில் கட்சி நிகழ்ச்சியில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, ''இன்று என்.சி.பி தேசிய போதைப்பொருள் ஒழிப்பு முகமை ஒரு பெரிய அதிர்ச்சிகரமான செய்தியை வெளியிட்டு இருக்கிறார்கள். அது என்னவென்றால் 2000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் வெளிநாடுகளுக்கு கடத்தியதாக 25ஆம் தேதி டெல்லியில் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த மூன்று பேரை கைது செய்துள்ளனர். மேலும் 3 பேர் தேடப்பட்டு வருவதாகவும் ஒரு அதிர்ச்சி தகவல் கொடுத்திருக்கிறார்கள். இது மிக மிக முக்கியமானது.

இந்த கடத்தலில் திமுகவுடைய சென்னை மேற்கு மாவட்ட அலுவலக அணியின் உடைய துணை அமைப்பாளரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் தான் மூளையாக செயல்பட்டதாகவும், அவர்களுடைய சகோதரர் மைதீன் மற்றும் சலீம் ஆகியோர் இணைந்து இந்த கடத்தலில் ஈடுபட்டதாகவும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது என வலைத்தளங்களில் பரப்புகிறார்கள். வந்து கொண்டிருக்கிறது.

இதற்கு இந்த அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பது மக்கள் மத்தியில் நாம் விட்டுவிடுகிறோம்.  சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் நிறைய பேசுகிறார். அதை எல்லாம் எடிட் பண்ணி விடுகிறார்கள். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைவதற்கு காரணமாக இருந்தது நாம தான். ஆனால் அதிக பேருந்துகள் கொடுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளோம்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை உடனடியாக நிறைவேற்றவில்லை. அதற்கான வசதிகளை எல்லாம் செய்த பிறகு தான் செய்ய வேண்டும் என்று சொல்லி இருந்தார்கள். ஆனால் இவர்கள் வேக வேகமாக பஸ் நிலையத்தை திறந்து கலைஞருடைய பேருந்து நிலையம் என பெயர் வைக்கிறார்கள். திமுக ஒரு  திராவிட இயக்கத்தின் மாடல் என்று முதல்வர் சொல்கிறார். ஆனால் எங்கே எடுத்தாலும் மதுரையில் நூலகத்திற்கு கலைஞர் பெயர், ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு கலைஞர் பெயர் என எல்லாவற்றுக்கும் கலைஞர் பெயர் வைக்கிறார்கள். ஏன் அண்ணாவுடைய பெயரை வைக்கலாமா அல்லவா? இந்த அரசாங்கம் செய்ததா?' என்றார்.