Skip to main content

ஏமாற்றிய எம்.எல்.ஏ பேரனை சிறைக்கு அனுப்பிய பி.எச்.டி மாணவி!!

Published on 30/08/2018 | Edited on 30/08/2018

இன்றைய தலைமுறையினர் காதல் என்ற பெயருக்கே அர்த்தம் தெரியாமல் வெறும் உடல் சுகத்திற்காக மட்டுமே காதல் என்கிற போர்வையில் ஜாலியாக இருந்து கசந்த பின்பு அடுத்தவரிடம் தாவும் மனப்பான்மையுடன் தான் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் சிலர் விதி விலக்காக தன்னை ஏமாற்றியவனை எப்படியும் பலி வாங்கி விடவேண்டும் என்கிற மனபோக்கு தற்போது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் திருச்சி பி.எச்.டி படித்த மாணவியை சட்டம் படிக்கும் மாணவன் இரண்டு வருடம் காதலித்து விட்டு வேறு ஒரு பெண்ணை காதலித்தவனை சிறையில் அனுப்பிய சம்பவம் திருச்சியில் நடைபெற்று உள்ளது.

 

cheat


 

 

 

திருச்சி கொட்டப்பட்டு ஜீவா தெருவை சேர்ந்த தங்கராஜ்-பழனியம்மாள் ஆகியோரின் மகள் ரம்யா(26). பி.எச்டி பட்டம் பெற்றுள்ளார். திருவெறும்பூரை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏவும் தற்போது அதிமுகவில் இருந்து வரும் துரை என்பவரின் மகன் முத்துவின் மகன் ராம்பிரசாத் (26). திருச்சி அரசு சட்ட கல்லூரியில் படித்து வருகிறார். 

ராம்பிரசாத்தும் ரம்யாவும் தூரத்து உறவுமுறையாகும். இருவரும் 2 ஆண்டுகளாக காதலித்தனர். ராம்பிரசாத் ரம்யாவை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதனால் இருவரும் நெருங்கி பழகினர். 

இதற்கிடையே ராம்பிரசாத் தான் படிக்கும் அதே சட்டக்கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவரை காதலித்ததால் ரம்யாவை திருமணம் செய்துகொள்ள மறுத்துள்ளார். இதனால் ரம்யா சட்ட கல்லூரிக்கு சென்று ராம் பிரசாத்தையும் சம்மந்தப்பட்ட மாணவியையும் கண்டித்துள்ளார். ஆனாலும் ராம்பிரசாத் ரம்யாவை திருமணம் செய்ய மறுத்து விட்டார். 

இந்நிலையில் 10 நாட்களுக்கு முன் ராம்பிரசாத்தை ரம்யா நேரில் சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் போலீசில் புகார் செய்வேன் என்று கூறியுள்ளார். அதன்படி திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் அமுதாராணி வழக்குப்பதிவு செய்து ராம்பிரசாத்தை தேடி வந்த நிலையில் அவர் தலைமறைவாகி விட்டார். 

ஆனால் ராம்பிரசாத் தினமும் சட்ட கல்லூரிக்கு வந்து செல்வதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருவெறும்பூர் எஸ்ஐ சத்யாதேவி சட்ட கல்லூரிக்கு சென்று வாசலில் ராம்பிரசாத் சட்டக்கல்லூரியில் இருந்து வெளியே வரும்வரை காத்திருந்து நண்பர்களுடன் வெளியே வந்த ராம்பிரசாத்தை கைது செய்தனர். 


பின்னர் திருவெறும்பூர் காவல் நிலையம் அழைத்து வந்து ராம்பிரசாத்திடம் மகளிர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். ஆனால் அவர் ரம்யாவை திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. அதையடுத்து ராம்பிரசாத்தை திருச்சி 6-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் ரம்யாவை மருத்துவ பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். முன்னாள் எம்எல்ஏவின் பேரன் முனைவர் பட்டம் பெற்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.