Skip to main content

பங்களாதேஷ் கொள்ளையர்கள் அட்டகாசம்! அச்சத்தில் கேரள மக்கள்!

Published on 08/09/2018 | Edited on 08/09/2018
math


கேரளாவில் ஊடுருவியுள்ள பங்களாதேஷ் கொள்ளையா்களால் அந்த மாநில மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

கேரளாவில் மழை வெள்ளம் பாதிப்பின் போது முகாம்களின் தங்க வைக்கப்பட்டிருந்த மக்களின் வீடுகளில் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அரங்கேறின. இந்த சம்வத்தில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலன கொள்ளையா்கள் கேரளாவில் தங்கி வேலை செய்து வரும் பங்களாதேஷை சார்ந்தவா்கள் என்று கண்டறியப்பட்டது.

மேலும் கேரளாவில் தற்போது பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் வீடுகளில் கொள்ளையடிப்பதற்காக இரண்டு வாரங்களுக்கு முன்பு 50க்கும் மேற்பட்ட கொள்ளையா்கள் பங்களாதேஷில் இருந்து கேரளாவுக்கு ஊடுருவி இருப்பதாக போலீசாரிடமிருந்து தகவல் வெளியானது. அந்த கொள்ளையா்கள் தான் மாத்ருபூமி பத்திரிக்கையின் கண்ணூர் பதிப்பின் செய்தி ஆசிரியரின் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடித்து விட்டு கணவன் மனைவியை தாக்கியுள்ளனர்.

கண்ணூர் சிட்டி உருவாச்சால் பகுதியில் உள்ள வீட்டில் மாத்ருபூமியின் ஆசிரியர் வினோத் சந்திரா மற்றும் அவருடைய மனைவி சரிதா குமாரி இருவரும் தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவு 1.30 மணிக்கு கதவு தட்டும் சத்தம் கேட்டு வினோத் சந்திரா கதவை திறந்ததும், முகமூடி அணிந்த கொள்ளையா்கள் 4 பேர் வீட்டுக்குள் புகுந்து கணவன் மனைவி இருவரின் வாயையும் துணியால் கட்டி போட்டு பலவந்தமாக தாக்கியுள்ளனர்.

பின்னர் பீரோவில் இருந்த 25 பவுன் நகை மற்றும் 15 ஆயிரம் பணம், விலையுயா்ந்த இரண்டு செல்பேன் இருவருடைய ஏடிஎம் கார்டையும் எடுத்துக் கொண்டு இரண்டு மணி நேரத்துக்கு பிறகு அங்கிருந்து வெளியே சென்றதும் வந்து நின்ற கார் ஒன்றில் ஏறி கொள்ளையர்கள் தலைமறைவானர்கள்.

பின்னர் காலை 6 மணிக்கு பக்கத்தில் உள்ளவா்கள் வந்து வினோத் சந்திராவையும் மனைவியையும் கட்டை அவிழ்த்துவிட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சோ்த்தனர். இச்சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மாநிலம் முமுவதும் உள்ள காவல்நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வேலை செய்து வரும் பங்களாதேஷத்தை சோ்ந்தவர்களை பிடித்து விசாரணை நடத்த டிஜிபி உத்தரவிட்டுள்ளார். மேலும் அனைத்து தனிப்படை போலிசும் களமிறக்கப்பட்டுள்ளது.

மேலும் ஓரே நாளில் பங்களாதேஷத்தை சார்ந்த பலர் தலைமறைவாகி விட்டனர் என்றும் கூறப்படுகிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

“ராகுல், நேரு குடும்பத்தில் பிறந்தவர் தானா?” - கேரள எம்.எல்.ஏ பரபரப்பு பேச்சு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kerala MLA sensational speech on Rahul was born in the Nehru family?

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று (23-04-24) மாலையுடன் நிறைவு பெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் ஒருசேர இருந்தாலும், கேரளாவைப் பொறுத்தவரை இந்த இரு கட்சிகளும் தனித்தே போட்டியிடுகின்றன. அதே வேளையில், இந்த இரு கட்சி தலைவர்களும் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர். இது இந்தியா கூட்டணியில் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில், கேரளாவில் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசும் போது, “பினராயி விஜயனுக்கு எதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ள போது, மத்திய விசாரணை அமைப்புகள் அவரை ஏன் விட்டு வைத்திருக்கிறது?” என்று கூறி கேரள முதல்வர் பினராயி விஜயனை கடுமையாக சாடினார்.

இந்த நிலையில், பினராயி விஜயன் இருக்கும் இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணியின் எம்.எல்.ஏ. பி.வி அன்வர், ராகுல் காந்தியைக் கடுமையாக சாடியுள்ளார். அதில் அவர், “காந்தி பெயரை பயன்படுத்த ராகுலுக்கு உரிமை இல்லை. அவர் நான்காம் தர குடிமகன் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். அவர் நேரு குடும்பத்தில் பிறந்தவரா? எனக்கு சந்தேகம் உள்ளது. அவரது டி.என்.ஏ ஆய்வு செய்யப்பட வேண்டும்” என்று பரபரப்பு கருத்தை கூறியுள்ளார்.