Skip to main content

முட்புதருக்குள் கதறிய பெண் சிசு! கல்லூரி மாணவியின் செயலா? கள்ளக் காதலா? 

Published on 12/07/2018 | Edited on 12/07/2018
child

 

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவாரங்காடு என்ற பகுதியில் உள்ள ஒரு முட்புதரில் இன்று காலை குழந்தையின் அழுகுரல் அவ்வப்போது வந்துள்ளது. மதியம் 11 மணி சுமாருக்கு அவ்வழியாக சென்றவர்கள் அந்த புட்புதரை விளக்கி பார்த்துள்ளனர். ஒரு பச்சிளம் குழந்தை அழுது கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பிறகு அங்கு வந்த பெண் ஒருவர் அந்த குழந்தையை வெளியே எடுத்து வந்துள்ளார்.

 

தொப்புள் கொடி கூட அறுக்கப்படாமல் இருந்த அந்த பெண் சிசு விடியற்காலை தான் பிறந்துள்ளது. அதை அந்த முட்புதருக்குள் வீசி விட்டு சென்றுள்ளனர். தகவல் கேள்விப்பட்டு அங்கு வந்த போலீசார் மருத்துவர்களை அழைத்து வந்து அந்த பெண் சிசுவை பள்ளிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தார்கள். 


பிறந்து ஒரே நாளான அந்த பெண் சிசுவை முட்புதரில் வீசிச் சென்றவர்கள் யார் என போலீசார் விசாரித்து வருகிறார்கள். பள்ளிபாளையம் மாறும் அருகே உள்ள திருச்செங்கோடு பகுதியில் ஏராளமான தனியார் கல்லூரிகள் கல்லூரி மாணவ மாணவியர்களின் காதல் விவகாரங்கள் இங்கு அதிகமாக நடக்கும். அப்படி ஏதாவது கல்லூரி மாணவி தன் வீட்டுக்கு தெரியாமல் கர்பத்தை மறைத்து அதன் மூலம் பெற்றெடுத்த குழந்தையா? அல்லது ஏதாவது கள்ளக் காதல் மூலம் பிறந்த குழந்தையா? அல்லது பிறந்தது பெண் குழந்தை என்பதால் பிடிக்காமல் வீசிச் சென்றனரா? எதுவாக இருந்தாலும் பெற்றெடுத்த பெண் சிசுவை வீசிச் சென்ற கல் நெஞ்சம் யார்? இது எந்த மருத்துவமனையில் பிரசவம் பார்க்கப்பட்டது என தீவிர விசாரனையில் உள்ளார்கள் போலீசார் .
 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் காதலியைப் பார்க்க 3500 கி.மீ பயணித்த ஜி.எம். குமார்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
actor gm kumar drove 3500 kms to meet his ex

வெயில், குருவி, மாயாண்டி குடும்பத்தார், என பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் ஜி.எம் குமார். பாலாவின் அவன் இவன் படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் ஒருவராக நடித்து ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றவர். கடைசியாக கடந்த ஆண்டு கலையரசன் நடிப்பில் வெளியான புர்கா படத்தில் நடித்திருந்தார். இதனிடையே இயக்குநராகவும் எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.

அவரது எக்ஸ் பக்கத்தில் தொடர்ந்து ஆக்டிவாக இருப்பது அவரது வழக்கம். அதில் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து வரும் அவர், தற்போது தனது முன்னாள் காதலியை பார்க்க 3500 கி.மீ பயணித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மெட்ராஸிலிருந்து பெங்களூரு வழியாக கோவா சென்றுள்ளதாகவும் பின்பு பாம்பே சென்று மீண்டும் மெட்ராஸ் திரும்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தனது முன்னாள் காதலியுடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். அந்த பதிவு தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. 

Next Story

3 மாணவிகள் மீது ஆசிட் வீச்சு; பதற வைக்கும் அதிர்ச்சி சம்பவம்

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Acid Incident on 3 female students in karnataka

கர்நாடகா மாநிலம், மங்களூர் பகுதியில் கடாபா என்ற அரசுக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில், நேற்று பியூசி என அழைக்கப்படும் கர்நாடகா மாநில பல்கலைக்கழகத் தேர்வு தொடங்கியது. இந்த தேர்வை எழுதுவதற்காக மாணவர்கள் அனைவரும் தயாராகிக் கொண்டிருந்தனர். 

அப்போது, கல்லூரி வளாகத்திற்குள் மர்ம நபர் ஒருவர் உள்ளே நுழைந்துள்ளார். அதன் பின்னர் அவர், யாரும் எதிர்பாராத நிலையில் அங்கிருந்த மாணவிகள் மீது திடீரென தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை வீசியுள்ளார். இந்த கொடூரச் சம்பவத்தில் அலினா, அர்ச்சனா மற்றும் அமிர்தா ஆகிய 3 மாணவிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, அவர்கள் மூவரும் அலறித் துடித்ததைக் கண்ட அங்கிருந்த மற்ற மாணவர்கள், படுகாயமடைந்த மாணவிகளை உடனடியாக மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

இதனிடையே, மாணவிகள் மீது ஆசிட் வீசி தப்பிச் சென்ற இளைஞரை கல்லூரி பணியாளர்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து, அந்த இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஆசிட் வீசிய நபரின் பெயர் அபின் (28) என்பதும், அவர் கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும், ஆசிட் வீச்சு சம்பவத்தில் காயமடைந்த அலினாவும், அபினும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது போலீசாருக்குத் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்த மாணவிகள் 3 பேர் மீது, இளைஞர் ஒருவர் ஆசிட் வீசியுள்ள சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.