தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக முக்கியமான இடங்களில் உணவின் தரம் குறித்து பல்வேறு இடங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். மேலும் பல்வேறு இடங்களில் தரமற்ற உணவுப் பொருட்கள் மற்றும் அதிக சாயப் பொடிகள் உபயோகித்த உணவுகளை தாயரிக்கும்கடைகளைக் கண்டறிந்து அபராதம் விதித்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

அதே போல் இன்றைய சூழலில் நாம் அன்றாடம் அதிகம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் கலப்படம் குறித்தவற்றில் நாம் அதிகவிழிப்புணர்வுடன்இருக்க வேண்டும். அந்த வகையில் இன்று (25.10.2021) சென்னை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் உள்ள கலப்படம் குறித்து அண்ணா நகர் கிருஷ்ணசாமி மகளிர் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Advertisment