Skip to main content

தனியார்  பள்ளிகளை கண்காணிக்க  வழங்கிய அதிகாரம் -  அரசாணையில் திருத்தம் செய்ய உத்தரவு

Published on 10/07/2018 | Edited on 10/07/2018
hi

 

தமிழகத்தில் இயங்கி வரும் தனியார்  பள்ளிகளை கண்காணிக்க மாவட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கி பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் திருத்தம் செய்து 2 மாதங்களில் வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

தமிழகத்தில் உள்ள பள்ளிகளின் நிர்வாக அமைப்பை மாற்றி அமைக்கும் வகையில் மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கு நிர்வாக அதிகாரம் வழங்கி தமிழக பள்ளிக்கல்வி துறை கடந்த மே 18 ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது. 

 

இந்த நிலையில் மாவட்ட அளவில் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளை ஒருங்கிணைத்து தலைமை கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி உள்ளிட்ட பதவிகளை மாற்றியமைக்கவும்  இந்த அரசாணை வழிவகை செய்கிறது. அனைத்து பள்ளிகளையும் நிர்வகிக்கும் அதிகாரம் தலைமை கல்வி அதிகாரிக்கு வழங்கப்பட்டுள்ளது. 

 

இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரியும், கல்வியாளர்கள் அடங்கிய குழுவை உருவாக்கி பள்ளி கல்வி நிர்வாகம் குறித்து முடிவு எடுக்க உத்தரவிட கோரியும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் சங்கம் மற்றும் தமிழக ஆசிரியர் கூட்டணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

 

இந்த வழக்கு நீதிபதி குலுவாடி ஜி.ரமேஷ் மற்றும் நீதிபதி தண்டபாணி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது " தனியார் பள்ளி மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் சார்பில், பள்ளிகளை நிர்வகிக்க ஏற்கனவே சட்டங்கள் உள்ள நிலையில் விதிகளை மீறி பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த அரசாணை சட்ட விரோதமானது என வாதிடப்பட்டது. 

 

இதற்கு பதிலளித்த அரசு தரப்பு, கல்வி தரத்தை மேம்படுத்தவும், பள்ளிகள் நிர்வாகத்தை கண்காணிக்கும் நோக்கிலேயே இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டதாக  வாதிடப்பட்டது.

 

இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நிர்வாக வசதிக்காக, ஒரே மாதிரியான நடை முறையை மேற்கொள்ள இந்த உத்தரவு பிறப்பிக்க பட்டிருந்தாலும், அதில் உள்ள குறைகளை நிர்வத்தி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். 

 

மேலும் தமிழக அரசின் இந்த அரசாணையில் தலையிட மறுத்த நீதிபதிகள், அரசாணையில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து 2 மாதங்களில் திருத்தப்பட்ட அரசாணையை வெளியிட வேண்டும் எனவும், மனுதாரர்கள் அரசிடம் குறைகளை தெரிவிக்கவும் நீதிபதிகள் அனுமதி வழங்கியுள்ளனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

'கடைசி நேரத்தில் இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'- நீதிமன்றம் பதில்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Can't order transfer at the last moment'- court reply

தமிழக கூடுதல் டிஜிபி அருண் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் எனவே அவரை  இடமாற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐபிஎஸ் அதிகாரி அருணை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது. அதிகாரிகள் நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் கண்காணித்து தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.  

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கே.சாமி என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். தேர்தல் ஆணையம் சார்பில் காவல்துறை கூடுதல் டிஜிபி ஆக இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரி அருண் ஒரு கட்சிக்காக செயல்படுகிறார். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் அந்த அதிகாரி இருப்பதாகவும் ஆகவே எந்த அச்சமும் மனுதாரர் கொள்ள வேண்டாம். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி யாராக இருந்தாலும் தேர்தல் நடவடிக்கையை பொறுத்தவரை சரியான முறையில் இயங்கவில்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. கடைசி நேரத்தில் காவல்துறை அதிகாரியை இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'  எனக் கூறி இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர். 

Next Story

31 வது முறையாக நீட்டிப்பு; நீதிமன்றம் அதிரடி

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Extension for the 31st time; Court action

போக்குவரத்துத்துறையில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாக்களான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு. முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதியதாக மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில்  இன்று நடைபெற்ற விசாரணைக்கு பிறகு மேலும் 15 நாட்களுக்கு செந்தில் பாலாஜிக்கான நீதிமன்ற காவலை 31 ஆவது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி டி.வி.ஆனந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.