Skip to main content

கல்லூரி பேராசிரியர் மீது தாக்குதல்; மாணவர்கள் இடைநீக்கம்! பேராசிரியரும் சஸ்பென்ட்!!

Published on 06/08/2022 | Edited on 06/08/2022

 

jkl

 

தூத்துக்குடி மாவட்டத்தின் கோவில்பட்டி நகரிலுள்ள மந்தித்தோப்பு செல்லும் சாலையில் அரசுக் கலை அறிவியல் கல்லூரி இயங்கிவருகிறது. இங்கு கணிதத் துறையின் தலைமைப் பொறுப்பிலிருப்பவர் பேராசிரியர் சிவசங்கரன்(45). இவர் நேற்று முன்தினம் கல்லூரியிலுள்ள தனது அறையில் இருந்தபோது அங்கு வந்த கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் அவரை சரமாரியாகத் தாக்கினர். இதில் பேராசிரியர் மயங்கிச் சரிந்திருக்கிறார். அங்கிருந்த அலுவலக ஊழியர்கள் அவரை மீட்டுக் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

 

இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல்நிலைய போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய போது, என்னுடைய கணிதத் துறை மாணவர் ஒருவர் சக மாணவியைக் காதலித்தார். இதை நான் கண்டித்ததோடு அதனை இருவரது பெற்றோரின் கவனத்திற்குக் கொண்டு சென்றேன். இதனால் ஆத்திரமான மாணவர், மற்றும் 3 மாணவர்கள் சேர்ந்து என் அறைக்குள் புகுந்து என்னைத் தாக்கினார்கள் என்று புகார் கூறியுள்ளார். இதன்பின் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர்.

 

இந்நிலையில், இந்த தாக்குதல் காரணமாக இரண்டு மாணவர்களை கல்லூரி முதல்வர் நிர்மலா சஸ்பெண்ட் செய்திருக்கிறார். தவிர கல்லூரி பேராசிரியரின் நடத்தை குறித்து மாணவர்களிடம் விசாரணை நடத்தியவர் அதுகுறித்த அறிக்கையை நெல்லை மண்டல கல்லூரி கல்வி துணை இயக்குநருக்கு சமர்ப்பிக்க, அதனடிப்படையில் கல்லூரி பேராசிரியர் சங்கரனை இடைநீக்கம் செய்து கல்லூரிக் கல்வி துணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். பேராசிரியர் மீது பாலியல் சீண்டல் குறித்த தகவலும் உள்ளன. அதுகுறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது என போலீஸ் தரப்பிலும் சொல்லப்படுகிறது.

 

jkl

 

இந்நிலையில் பேராசிரியர் மீதான பாலியல் குற்றச்சாட்டை விசாரணை செய்து அவர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் புகார் மனு கொடுத்துள்ளனர். இதனிடையே கல்லூரி மாணவர் ஒருவர் கொடுத்த பாலியல் புகாரின் பேரில் பேராசிரியர் சிவசங்கரன் மீது 377வது பிரிவின் படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் தரப்பில் தெரிவித்தனர். தாக்குதல் மற்றும் பாலியல் புகார் சம்பவங்களால் தூத்துக்குடி மாவட்டம் பரபரப்பாகியிருக்கிறது

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.