Skip to main content

அண்ணா பிறந்தநாளில் திருச்சியை திணறவைத்த அ.தி.மு.க- அ.ம.மு.க

Published on 15/09/2018 | Edited on 15/09/2018

 

 

அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் அனைத்து கட்சிகளின் சார்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதே போல திருச்சியில் அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். ஆனால் அ.தி.மு.க.வும் - அ.ம.மு.க.வும் போட்டி போட்டுக்கொண்டு பேரணி - கார் ஊர்வலம், டூவிலர் பேரணி என பிரமாண்டப்படுத்தி விட்டார்கள். 

 

திருச்சி மா.செ. குமார் தலைமையில் சுப்ரமணியபுரத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருந்து ஆயிரக்கணக்கில் டூவிலரில் புறப்பட்டு, தபால்நிலையம், நீதிமன்றம், எம்ஜி.ஆர்.சிலை, தென்னூர் வழியே சத்திரம் பேருந்து நிலையத் வந்து கொடி ஏந்தியபடி பெரும் கூட்டத்திற்கு நடுவே அண்ணாசிலைக்கு கட்சி பொறுப்பாளர்களுடன் மாலை அணிவித்து பத்திரிகையாளர்களிடம் பேசும் போது. திருப்பரங்குன்றம், திருவாரூர் தேர்தலில் எங்கள் பலத்தை நிறுபீத்து வெற்றியை உறுதி செய்வோம். இந்தியாவிலே மிகப்பெரிய கட்சி அ.தி.மு.க. என்று பேசினார். 

 

திருச்சியில் அ.ம.மு.க. சார்பில் தினகரன் தலைமையில் திருச்சியில் அண்ணாசிலைக்கு பேரணியாக சென்று மாலை அணிவித்து புதுக்கோட்டைக்கு பொதுகூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதானல் அ.ம.மு.க. மா.செ.கள் சீனிவாசன், மனோகரன், ராஜசேகரன், சாருபால தொண்டையன், ஆகியோர் தலைமையில் பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருந்தனர். தினகரன் அணி பேரணியில் 4 குதிரைகள், பேரணியை வழி நடத்த,மேளதாளங்க, ஜரிகை நடனம், கொடிகளை ஏந்தி பிரமாண்டமா வழக்கம் போல் திறந்தவெளி வந்து தொண்டர்களியே கையசைத்து வந்து மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

 

இரண்டு கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு திருச்சி மாநகர் முழுவதும் பிரமாண்டமா பேனர்கள், வால்போஸ்டார்கள், தட்டிகள், கொடிமரங்கள் என அதகளபடித்தியிருந்தார்கள், பல இடங்களில் பேனர் வைப்பதற்கு போட்டா போட்டியே ஏற்பட்டது. சில இடங்களில் அனுமதி இன்றி பேனர் வைத்தாக தினகரன் பேனர்களை எடுத்தனர். ஒரே கட்சியாக இருந்த அதிமுக தற்போது இரண்டாக பிரிந்தாலும் தங்கள் பலத்தை காட்டுவதற்காக பயங்கரமாக கட்சிவேலைகளில் ஈடுபட்டு ஆட்கள் பிடிக்கும் வேலையில் இறங்கியிருக்கி இருப்பதால் திருச்சி அரசியல்… பரபரப்பை அடைந்துள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.