Skip to main content

 நூல் விலை கிலோவிற்கு 40 ரூபாய் குறைக்கப்படுவதாக அறிவிப்பு! 

Published on 01/07/2022 | Edited on 01/07/2022

 

Announcement that the price of yarn will be reduced by 40 rupees per kilo!

 

ஜூலை மாதத்திற்கான நூல் விலை கிலோவிற்கு 40 ரூபாய் குறைக்கப்படுவதாக நூல் உற்பத்தி நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 

 

திருப்பூரில் 1,000- க்கும் மேற்பட்ட பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பின்னலாடைத் தயாரிப்பிற்கு முக்கிய மூலப்பொருளான நூல் விலை கடந்த பல மாதங்களாகவே உயர்ந்து வருகிறது. எனவே, நூல் விலையைக் குறைக்க வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றன. இந்த நிலையில், ஜூலை மாதத்திற்கான நூல் விலை கிலோவிற்கு 40 ரூபாய் குறைக்கப்படுவதாக நூல் உற்பத்தி நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 

 

ரகத்திற்கு ஏற்றப்படி, ஒரு கிலோ நூல் 350 ரூபாய் முதல் 420 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நூல் விலை உயர்வைக் காரணம் காட்டி, ஆடைத் தயாரிப்பு நிறுவனங்கள் விலையை உயர்த்திய நிலையில், தற்போது குறைக்குமா என கேள்வி எழுந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்