Skip to main content

அண்ணாமலைப் பல்கலை மாணவர்கள் கல்வி உதவிதொகைக் கேட்டுப் போராட்டம்! 

Published on 11/04/2022 | Edited on 11/04/2022

 

Annamalai University. Students struggle for scholarships!

 

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயிலும் பொறியியல் மாணவர்கள் 1000-க்கும் மேற்பட்டவர்கள் பட்டதாரிக்கான கல்வி உதவிதொகை கடந்த மூன்று ஆண்டுககளாக வழங்காததைக் கண்டித்தும் மற்ற அரசு பொறியியல் கல்லூரியில் வசூலிக்கும் கட்டணத்தை இந்தக் கல்லூரியிலும் வசூலிக்க வலியுறுத்தி வகுப்பைப் புறக்கணித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் குமரவேல் கலந்துகொண்டு மாணவர்களின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து மாணவர்கள் மத்தியில் பேசினார். இதனைத் தொடர்ந்து மாணவர்களிடம் பல்கலைக்கழக நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் 30-தேதிக்குள் கல்வி உதவி தொகை வழங்குவதாக உறுதி அளித்ததின் பேரில் மாணவர்கள் கலைந்துசென்றனர். இதனால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

 

இதுகுறித்து இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் செம்மலர், செயலாளர் குமாரவேல் கூறுகையில், ‘அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பொறியியல் புலத்தில் படிக்கின்ற மாணவர்களுக்கு மற்ற அரசுப் பல்கலைக்கழகம் போலவே கல்விக் கட்டணத்தை வசூலிக்க வேண்டும். பல்கலை கழகம் அரசு பல்கலைகழகமாக ஆன பின்பும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு இணையாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.


இங்கு ஒரு ஆண்டுக்கான கல்விக் கட்டணம் 5,500 மற்றும் சிறப்புக் கட்டணம் 15,000 இதர கட்டணம் 10,000 அளவில் வசூலிக்கப்படுகிறது. சிறப்புக் கட்டணம் வசூலிப்பதற்கு பல்கலைக்கழகம் எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த 3 ஆண்டுகளாக மாணவர்களுக்கு முதல் பட்டதாரி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படாமல் உள்ளது. இதுகுறித்து உதவித்தொகை இயக்குனரிடம் கேட்டபோது உதவித்தொகையில் பாதி பணத்தை தருகிறோம்  மீதிப் பணத்தில் பல்கலைக்கழகத்திற்கு பெயிண்ட் அடித்து விட்டோம் என அலட்சியமாகப் பதில் அளிதிருக்கிறார். மாணவர்களுடைய உதவித்தகையை உரிய நேரத்தில் வழங்காமல் இழுத்தடித்ததோடு மட்டுமல்லாமல் பணத்தை முழுமையாகக் கொடுக்கமாட்டோம் எனப் பல்கலைக்கழக நிர்வாகம் கூறுவதையும், எந்த விதமான அனுமதியின்றி மாணவர்களின் பணத்தை செலவழித்த பல்கலைக்கழக நிர்வாகத்தை இந்திய மாணவர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

எனவே பல்கலைக்கழக நிர்வாகமும் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய உரிய கல்வி உதவித்தொகையை முழுமையாக ஆண்டுக்குத் தலா ரூ 20 ஆயிரத்தை உடனடியாக வழங்க வேண்டும். மற்ற அரசு பல்கலைக் கழகங்களில் வசூலிக்கும் கல்வி கட்டணத்தை இங்கும் வசூலிக்க வேண்டும் என வலியுறுத்துவதோடு, இதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக அரசை இந்திய மாணவர் சங்கம் கேட்டுக் கொள்கிறது’ என்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சின்னத்தை முடக்க முயற்சிப்பது மோடியின் மோடி மஸ்தான் வேலை” - அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Minister MRK Panneerselvam criticized BJP

தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி இந்தியா கூட்டணியின் சிதம்பரம் மக்களவைத் தொகுதி வேட்பாளரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுதா ஆகியோரை ஆதரித்து சிதம்பரத்தில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

இதற்காக சிதம்பரம் புறவழிச்சாலையில் உள்ள லால்புரம் என்ற இடத்தில் பிரம்மாண்ட மேடை மற்றும் பொதுக்கூட்ட பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வியாழக்கிழமை(28.4.2024) பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொதுக்கூட்ட மேடை அமைய உள்ள இடத்திற்கு வந்த அமைச்சர் பன்னீர்செல்வம், மேடை அமைந்துள்ள பகுதி, தொண்டர்கள் அமர உள்ள இடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை நடந்து சென்று பார்வையிட்டார். அப்போது மேடை அமைக்கும் பணிகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வருகிற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சிதம்பரம் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் தொல். திருமாவளவன், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி வேட்பாளர் உள்ளிட்டோரை ஆதரித்து சிதம்பரத்தை அடுத்த புவனகிரி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட லால்புரம் பகுதியில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். இதில் வாக்காளர்கள், பொதுமக்கள், தொகுதிகளைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் கலந்து கொள்வார்கள். மாநாடு போன்று இந்த கூட்டம் நடைபெற இருக்கிறது.

முதலமைச்சர் நேரடியாகச் சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். 3 ஆண்டு காலத்தில் செய்துள்ள சாதனைகள், பணிகள் குறித்து முதல்வர் பேசி வருகிறார். சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 75 ஆயிரம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். முந்தைய தேர்தலில் எதிர்க்கட்சியாக இருக்கும்போது மக்களைச் சந்தித்து வாக்கு கேட்டு 39 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறோம். இந்த ஆட்சியில் தனி நபர்கள் பண பலன்களைப் பெற்றுள்ளனர். ஒரு கோடியே 15 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை நேரடியாகச் செல்கிறது. மகளிருக்கு இலவச பேருந்து பயணம், மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் போன்ற திட்டங்கள் எந்த உலகத்திலும் இல்லை. பெண் கல்வியை ஊக்குவிப்பதற்காகக் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு உதவித்தொகை என அனைத்து உதவிகளும் நேரடியாக பயனாளிகளுக்குச் செல்கிறது.

திமுக கூட்டணி கொள்கை உள்ள கூட்டணி. இந்த கூட்டணிக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது. இது 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் கேட்கும் சின்னங்களை முடக்குவதன் மூலமாக அவர்களது வெற்றியை தடுக்க முயற்சிக்கின்றனர். இது மோடியின் மோடி மஸ்தான் வேலை. இது எதிர்க்கட்சிகளை முடக்குவதற்கு செய்கின்ற வேலை. இந்த ஆட்சி இ.டி., சி.பி.ஐ போன்றவற்றை வைத்துக் கொண்டு ஆட்சி புரிகின்றார்கள். ஆனால் தமிழக முதலமைச்சர் மக்கள் நலத்திட்டங்களை செய்து விட்டு, அதை முன்னெடுத்து பிரச்சாரம் செய்து வருகிறார். மக்கள் சக்தியாக ஒன்று திரண்டு வெற்றி பெறச் செய்வார்கள். 100 நாள் வேலைத் திட்டத்தில் கூலியை உயர்த்தியது அவரது பயத்தை காட்டுகிறது. இவற்றையெல்லாம் பார்த்து மக்கள் ஏமாற மாட்டார்கள். திரண்டு வந்து திமுக கூட்டணிக்கு வாக்களிப்பார்கள்” எனக் கூறினார்.

Next Story

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் திருமாவளவன் உள்ளிட்ட 14 பேர் போட்டி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
14 contests including Thirumavalavan in Chidambaram Parliamentary Constituency

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான புதன்கிழமை சிதம்பரம் தொகுதியில் 27 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் அரியலூர் மாவட்ட ஆட்சியருமான ஆணிமேரி ஸ்வர்னா தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் திமுக கூட்டணி தலைமையில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சிராணி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் நீலமேகம், நாடாளும் மக்கள் கட்சியின் வேட்பாளர் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதில் சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் அதிமுக எம்பி சந்திரகாசி மனு நிராகரிக்கப்பட்டது.  மேலும் மாற்று வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட பிரதான கட்சி வேட்பாளராக 6 பேரும் 8  சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இதில் இறுதி வேட்பாளர் பட்டியல் 30-ந்தேதி வெளியிடப்படுகிறது. இன்னும் வேட்பாளர்கள் குறையும் என்று கூறப்படுகிறது.