Skip to main content

அண்ணாமலைப் பல்கலைக்கழக தேர்தல் முடிவு - இருதரப்பு வேட்பாளர்களின் கருத்துக்கள்

Published on 04/10/2018 | Edited on 05/10/2018
au



அண்ணாமலைப் பல்கலைக்கழக தேர்தலில் முதல்வரின் ஆசிபெற்ற வேட்பாளர்கள் படுதோல்வி என்று நக்கீரன் இணையத்தில் கடந்த 23-ந்தேதி செய்தி கட்டுரை படங்களுடன் பிரசுரிக்கப்பட்டுள்ளது. 
 

இதனையறிந்த 3-ம் எண் அணியில் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட ஏ.ஜி மனோகர், இணைப்பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட ரஞ்சித் என்பவர் செய்தி குறித்து நம்மிடம் பேசுகையில், எங்கள் அணியினர் 50 வாக்கிலிருந்து 250 வாக்கு வித்தியாசத்தில் 1-ம் எண் அணியினரிடம் குறைந்த வாக்கில் தோல்வி அடைந்துள்ளார்கள். 
 

அண்ணாமலைப்பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் உறுப்பினராக இருந்தார்கள். அவர்களில் அயற்பணியிடம் சென்ற 4 ஆயிரம்  உறுப்பினர்களை ஓட்டுபோடாத வகையில் தற்போது வெற்றிபெற்றுள்ள அணியினர் செய்துவிட்டனர். தேர்தலை அரசு விடுமுறை நாட்களில் வைக்காததால் 5340 உறுப்பினர்களில் 4431 உறுப்பினர்கள் மட்டும் வாக்கு அளித்துள்ளனர். அவர்கள் வாக்கு அளித்து இருந்தால் நாங்க தான் வெற்றிபெற்று இருப்போம். 
 

இது அரசு பல்கலைக்கழகம். ஆதலால் முதல்வரிடம் ஆசி பெற்றோம். முருகையன் கடந்த தேர்தலில் தற்போது 1ம் எண் அணியில் வெற்றிபெற்ற மனோகரன் அணிக்கு வாக்கு சேகரித்தார். அந்த அணியும் வெற்றிபெற்றது. அதேபோல் தான் எங்களுக்கு வாக்குசேகரித்தார் என்று கூறினார்கள்.
 

தற்போது ஊழியர் சங்க தலைவராக 1-ம் எண் அணியில் வெற்றிபெற்றுள்ள மனோகரனிடம் பேசுகையில் நீதிமன்ற உத்திரவுபடியும், நீதிபதியின் முன்னிலையில் தான் தேர்தல் நடந்தது. எங்கள் அணியினருக்கு தேர்தல் நடக்கும் முதல் நாள் வரை மிரட்டல்கள் வந்துகொண்டு இருந்தது. இதனை வெளியில் சொன்னால் தேர்தலுக்கு ஆபத்து ஆகிவிடுமோ என்று முடிந்தவரை சமாளித்து தேர்தலில் ஜனநாயக முறையில் வெற்றிபெற்று ஜனநாயகத்தை மீட்டெடுத்துள்ளோம் என்றார்.  
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.