Skip to main content

“நான் ரொம்ப பிசி…. கோப்புகளில் கையெழுத்திட மறுக்கும் மண்டலக் கல்லூரி இணை இயக்குநர்!

Published on 18/01/2019 | Edited on 18/01/2019

திருச்சி மண்டலக் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்திற்கு உட்பட்ட அரசு உதவிபெறும் கல்லூரிகள் திருச்சி மாவட்டத்தில் 8 கல்லூரியும் புதுக்கோட்டையில் ஒரு கல்லூரியும் மொத்தம் 9 கல்லூரிகள் உள்ளன. இக் கல்லூரிகளில் 2016 முதல் 2018 ஆம் ஆண்டு வரை ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர்களுக்கு 7ஆவது ஊதியக்குழுவின் அடிப்படையில் மாற்றியமைக்கப்பட்ட ஊதிய விகிதம் தொடர்பான கோப்புகள் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருச்சி RJD அலுவலகத்திற்குக் கல்லூரிகள் முன்மொழிவுகளை அனுப்பி வைத்துள்ளன.

 

thiruchy

 

இந்தக் கோப்புகளில் பல கோப்புகள் OC என்னும் அலுவலக நகலில் கையொப்பம் பெறப்பட்டுள்ளன. FC எனப்படும் உண்மை நகல் கையொப்பமிடப்படாமல் கடந்த 2 மாதங்களாக RJD அறையில் வைக்கப்பட்டுள்ளன. இதனால் மாற்றியமைக்கப்பட்ட புதிய ஓய்வூதியம் பெறாமலும், ஓய்வூதியப் பலன்கள் தலா ஒரு ஆசிரியருக்கு 30 – 50 இலட்சம் வரை கிடைக்காமல் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

 

 

கடந்த 3 மாதங்களாக ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் தனித்தனியாக கோப்புகளின் நிலவரங்களை அறிந்து வர RJD அலுவலகம் சென்றால் இணைஇயக்குநரைப் பார்க்கச் சென்றால், “நான் ரொம்ப பிசி…. உதவி இயக்குநர் பொறுப்பு வகிக்கும் கணக்கு அலுவரைப் பாருங்கள்” என்றே பதில் வரும். கணக்கு அலுவலர் இரண்டு நாளில் கோப்புகள் கையெழுத்தாகிவிடும் என்று சொல்லி அனுப்பி வைப்பார். இதுநாள் வரை கோப்புகள் கையெழுத்திடப்படாமலே உள்ளன.

 

 

இந்நிலையில், இன்று (18.01.2018) பிற்பகல் 2.00 மணிக்கு ஓய்வுப் பெற்ற கல்லூரி ஆசிரியர்கள் பேராசிரியர் பெலிசியா செல்வராணி தலைமையில், RJD அவர்களை நேரில் சந்தித்து முறையீடு செய்வதென சுமார் 20 ஆசிரியர்கள் RJD அலுவலகம் சென்றனர். RJD அவர்கள் வழக்கம்போல் கணக்கு அலுவரைச் சந்தியுங்கள். என்னைச் சந்திக்கவேண்டாம் என்று கூறியதாக அலுவலகத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

 

 

பிற்பகல் 2.30 மணியளவில் பேராசிரியர் பெலிசியா செல்வராணி தலைமையில் கணக்கு அலுவலருடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது. அப்போது கணக்கு அலுவலர் தெரிவித்த விவரங்கள் “இணைஇயக்குநர் வேறுபணியாக வெளியே சென்றுள்ளார்கள். ஓய்வூதியம் தொடர்பான அனைத்துக் கோப்புகளிலும் திங்கட்கிழமை கையொப்பம் வாங்கித் தருவாக” உறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து, ஓய்வுப் பெற்ற ஆசிரியர்கள் இணை இயக்குநரிடம் வழங்கக் கொண்டுவந்த முறையீட்டு மனுவைக் கணக்கு அலுவலர் பெற்றுக்கொண்டு, இணை இயக்குநர் பார்வைக்கு வைப்பதாகவும் உறுதி அளித்தார். 

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பேராசிரியர் பெலிசியா செல்வராணி, “தமிழ்நாட்டில் உள்ள அனைதது மண்டலங்களிலும் 7 ஆவது ஊதியக்குழுவின் அடிப்படையில் ஓய்வூதியம் கடந்த 4 மாதங்களுக்கு முன்பே வழங்கப்பட்டு விட்டது. திருச்சி மண்டலத்தில் மட்டும் புதிய ஓய்வூதியம் வழங்கப்படாத நிலையே நீடித்து வருகின்றது. இது ஓய்வுபெற்ற ஆசிரியர்களின் வாழ்வாரத்தைப் பாதிக்கும் செயல். இணைஇயக்குநர் உடனே கோப்புகளில் கையொப்பமிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.

 

 

முறையீடு செய்யும் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் தி.நெடுஞ்செழியன் பேசும்போது, “எதிர்வரும் 23ஆம் தேதி வரை திருச்சி மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் கையொப்பமிடுகிறார்களா? என்று பொறுத்திருப்போம். கையொப்பமிடாத நிலை நீடித்தால், சென்னையில் உள்ள கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலகத்தை ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும். திருச்சி மண்டலக் கல்லூரிக் கல்வி இணைஇயக்குநரைப் பணியிடமாற்றம் செய்யும்வரை எங்கள் போராட்டம் தொடரும்” என்று தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கட்டுனா அத்தப்  பொண்ணத்தான் காட்டுவேன்'- தாயைக் கொன்ற மகன்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
nn

மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள தாய் அறிவுறுத்திய நிலையில் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என அடம் பிடித்த மகன், தாயையே கொன்ற சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை வாசன் சிட்டியில் வசித்து வந்தவர்கள் லிங்கம், கொடிமலர் தம்பதி, இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் மகன் ராஜகுமாரனுக்கு (28) திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர். ஆனால் நீண்ட நாட்களாகவே ராஜகுமாரன் அத்தைப் பெண்ணை திருமணம் செய்து வையுங்கள் என வீட்டில் உள்ளோரிடம் கேட்டுள்ளார். ராஜகுமாரனின் அத்தை வீட்டு தரப்போ 'எங்கள் பெண்ணை உங்களுக்கு கொடுக்க முடியாது' எனத் தெரிவித்து வந்துள்ளனர். இதனால் மாமன் மகளைத் திருமணம் செய்து கொள்ள ராஜகுமாரனின் பெற்றோர்கள் அவரிடம் தெரிவித்துள்ளனர்.

கட்டினால் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என வைராக்கியமாக இருந்த ராஜகுமாரன் விரக்தியில் தற்கொலை முயற்சி எடுத்துள்ளார். உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றினர். ஆனால் தொடர்ந்து மறுபடியும் அத்தை மகளைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என ராஜகுமாரன் கேட்டு வந்துள்ளார். நாளடைவில் இது பெற்றோருக்கும் ராஜகுமாரனுக்கும் இடையே தகராறு ஏற்படும் அளவிற்கு சென்றுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜகுமாரனின் தாய் கொடிமலர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கிடந்துள்ளார் .வெளியில் சென்றிருந்த தந்தை லிங்கம் வீட்டுக்கு வந்து பார்த்து அதிர்ச்சிடைந்து, அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார். உடனே மகன் ராஜகுமாரனும் வந்துள்ளார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்து கொடிமலர் உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனைக்கு பிறகு, இது தனக்கு தானே குத்திக்கொள்ளும் அளவிற்கான காயம் அல்ல, யாரோ ஒருவர் கொலை முயற்சியில் கத்தியால் குத்தியுள்ளனர். இவ்வளவு ஆழமாக தனக்குத் தானே குத்திக் கொள்ள முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொது, ராஜகுமாரன் அந்தக் கொலையை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அத்தை மகளை தனக்கு கட்டி வைக்க ஏற்பாடு செய்யாததால் ஆத்திரமடைந்த ராஜகுமாரன் சண்டையிட்டுள்ளார். தாய் கொடிமலர் மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள கூறியதால் தாயையே கத்தியால் குத்தி ராஜகுமாரன் கொலை செய்தது உறுதியானது. பின்னர் கைது செய்யப்பட்டுள்ள ராஜகுமாரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Next Story

'என் மகராணி என்னைய விட்டு போறியேடா...'-திருச்சியை அதிர வைத்த சம்பவம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
nn

திருச்சியில் கல்லூரி மாணவி ஒருவர் வீட்டு மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை தொடங்கி இருக்கும் நிலையில் இது கொலைச் சம்பவம் என  சிறுமியின் தந்தை தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள ராஜகோபால் நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருக்கு 19 வயதில் ஜெயஸ்ரீ என்ற மகள் இருந்தார். பி.ஏ ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வந்த ஜெயஸ்ரீ அதே ஸ்ரீரங்கம் வடக்கு சித்திர வீதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவருடைய மகன் கிஷோரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரின் காதலும் இரு தரப்பு வீட்டுக்கும் தெரியும் என்றும் சொல்லப்படுகிறது.

ஸ்ரீராம் என்ற நண்பரின் வீட்டின் மாடியில் மாலை வேளையில் ஜெயஸ்ரீ கிஷோர் சந்தித்து பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அப்பொழுது ஸ்ரீராமின் நண்பர்கள் தீபக், ராகுல், ரிஷிகேஷ் ஆகியோரும் மொட்டை மாடியில் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஜெயஸ்ரீ கிஷோர் வழக்கம்போல் ஸ்ரீராம் வீட்டின் மாடியில் பேசிக் கொண்டிருந்த பொழுது, திடீரென தவறி விழுந்த ஜெயஸ்ரீக்கு ரத்த காயம் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் கிஷோர், ஸ்ரீராம் ஆகியோர் அவரை ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் பின் தலையில் ரத்தம் அதிகமாக வெளியேறியதால் மேல் சிகிச்சைக்காக திருச்சி தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஜெயஸ்ரீ திருச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஜெயஸ்ரீ ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். திருமணம் செய்து கொள்ளலாம் என ஜெயஸ்ரீ கிஷோரிடம் கூறியதாகவும் ஆனால் தற்பொழுது திருமணம் வேண்டாம் என கிஷோர் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. அப்பொழுது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் அருகில் இருந்த முகம் பார்க்கும் கண்ணாடியை கைகளாலே கிஷோர் உடைத்துள்ளார். இதனால் அவருடைய கைகளில் ரத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக பக்கத்தில் இருந்த  ஸ்ரீராம் மற்றும் அவரது நண்பர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால் சிறிது நேரத்தில் ஜெயஸ்ரீ மாடியிலிருந்து தவறி விழுந்ததாக கூறி அவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் ஜெயஸ்ரீயை மருத்துவர்கள் பரிசோதித்து அவர் உயிரிழந்ததை தெரிவித்ததும் உடன் வந்த கிஷோர் உள்ளிட்ட அத்தனை பேரும் தப்பித்து ஓடி தலைமறைவாகினர். உண்மையாக ஜெயஸ்ரீ தவறிவிழுந்து உயிரிழந்தால் ஏன் நண்பர்கள் அனைவரும் தலைமறைவாக வேண்டும் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது.

இது தொடர்பாக போலீசார் தேர்தல் வேட்டை நடத்திய நிலையில் கரியமாணிக்கம் பகுதியில்  உள்ள ஸ்ரீகிருஷ்ணன் என்பவரின் வீட்டில் ஐந்து பேரும் தலைமறைவாகி இருந்தது தெரிய வந்தது. 5 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அடைக்கலம் தந்த ஸ்ரீ கிருஷ்ணனையும் போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை சென்று கொண்டிருக்கிறது.

கிஷோர் மற்றும் அவரது நண்பர்கள் ஐந்து பேரும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு அடிமையானவர்கள் என தெரியவந்துள்ளது. மேலும் கிஷோர் அந்த பகுதியில் சரித்திர பதிவேடு குற்றவாளியாகவும் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்நிலையில் பிரேதப் பரிசோதனைக்கு பின்னர் தந்தையிடம் ஜெயஸ்ரீயின் உடல் ஒப்படைக்கப்பட்டது. அப்பொழுது கண்ணீர் விட்டு கதறி அழுத அவரது தந்தை, ''அப்பா உனக்கு என்ன பாவம் செய்தேன்... என் மகராணி என்னைய விட்டு போறியேடா... நான் என்ன பாவம் செஞ்ச... கொன்னுட்டாங்களே பாவிங்க எல்லாம்... யாருக்காகவோ உன்னை இழந்துட்டியேடா...'' என்று கதறி அழுதது நெஞ்சை உறைய வைத்தது.