Skip to main content

கலைஞருக்கு குமரியில் திரும்பிய பக்கமெல்லாம் இரங்கல்!

Published on 10/08/2018 | Edited on 10/08/2018
sf


நெல்லை எனது எல்லை குமரி எனது தொல்லை என்று சொன்ன கலைஞருக்கு குமரி மாவட்டத்தில் திரும்பிய பக்கமெல்லாம் இரங்கல் ஊர்வலமும் மௌன அஞ்சலியும் செலுத்தி கண்ணீா் வடித்தனர்.

தேசிய கட்சிகளின் ஆதிக்கம் கொண்ட குமரி மாவட்டத்தில் மாநில கட்சிகள் தனியாக கால் ஊன்ற முடியாத நிலையில் இருந்த அந்த காலகட்டத்தில் நெல்லையில் நடந்த ஓரு பொதுக்கூட்டத்தில் நெல்லை எனது எல்லை குமரி எனது தொல்லை என்று கலைஞர் பேசினார்.

அதே கலைஞர் கன்னியாகுமரி கடலில் திருவள்ளுவருக்கு வானூயா்ந்த சிலை வைத்து குமரிக்கு பெருமை சேர்த்தார். மேலும், அதே கடற்கரை ஓரத்தில் காமராஜருக்கு மணி மண்டபமும் கட்டினார். அதோடு வில்லுக்குறியில் மாம்பழத்தாறு அணை, ஆசாரிப்பள்ளத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை என உள்ளிட்ட பல திட்டங்களை குமரி மாவட்ட மக்களுக்கு கொண்டு வந்து குமரி மக்கள் மனதிலும் நீங்கா இடத்தை பிடித்தார்.
 

sd


இந்தநிலையில் கலைஞரின் மரணத்தால் நிலை குலைந்த குமரி மக்கள் கட்சி வேறுபாடியின்றி அந்த துக்கத்தில் பங்கெடுத்தனா். குறிப்பாக திருவிதாங்கோடு வட்டம் காலணியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா கொடுத்த கலைஞருக்கு அந்த மக்கள் கண்ணீரோடு அதை நினைவுகூா்ந்து துக்கத்தில் காணப்பட்டனர்.

அதே போல் கலைஞர் வீட்டுமனைபட்டா கொடுத்த தக்கலை பகுதியில் வலியகரை காலணி, குளச்சலில் ரீத்தாபுரம் காலணி, திக்கணங்கோட்டில் கொல்லாய் காலணியில் வசிக்கும் மக்கள் அவருக்கு மரியாதை கொடுக்கும் விதமாக கலைஞரின் படத்துக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி கண்ணீா் வடித்தனர்.
 

sdag


இதேபோல் அரசியல் கட்சியினரும் அனைத்து பகுதியிலும் இரங்கல் ஊர்வலமும் மௌன அஞ்சலியும் செலுத்தி கலைஞர் மீதுள்ள பற்றை வெளிகாட்டினார்கள். அதே போல் வா்த்தக சங்கத்தினரும் ஓட்டு மொத்த கடைகளையும் அடைத்து அந்த துக்கத்தில் பங்கெடுத்தனர்.

இந்தநிலையில் கலைஞரின் மறைவு செய்தியை கேட்டு திக்கணங்கோடு பகுதியை சேர்ந்த அலெக்சாண்டர் (60), கனகப்பபுரத்தை சோ்ந்த சாமிகண் (62) ஆகிய இருவரும் அதிர்ச்சியில் உயிரிழந்தனர். ஓட்டு மொத்த குமரியும் நேற்று துக்கத்தில் ஆழ்ந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்

Next Story

“கலைஞர் உதவி பண்ணலைன்னா, அந்தப் படம் பிணவறைக்கு தான் போயிருக்கும்” - வடிவேலு

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
vadivelu about kalaignar

சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் எதிரில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் நினைவிடம் மற்றும் டிஜிட்டல் அருங்காட்சியகம் கடந்த 26ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்பட்டது. பொதுமக்கள் பார்வைக்கு வரும் 6ஆம் தேதி முதல் இலவசமாக அனுமதிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் வடிவேலு கலைஞர் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செய்தார். பின்பு திமுக சார்பில் நடத்தப்பட்ட நலத்திட்ட விழாவில் கலந்து கொண்டு பேசிய வடிவேலு, “கலைஞர் நினைவிடத்தை பார்த்தேன். அது சமாதி இல்லை. சன்னதி. தி.மு.க தொண்டன் ஒவ்வொருத்தருக்கும் அது குல தெய்வக் கோயில். மணிமகுடம் கலந்த மணிமண்டபம். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் நான். ஆனால், கலைஞருடைய தீவிர பக்தன். தீவிர விஸ்வாசி. 

கலைஞருடன் இருக்கும் போது, எம்.ஜி.ஆரை வெளியில் இருந்து தான் பார்த்திருக்கேன். இருவரும் நண்பர்கள் தான்.  ஆனால் கலைஞரின் கதை வசனத்தில் நடிச்சிருக்கேன். இவர் கூட பேசியிருக்கேன், பழகியிருக்கேன். நிறைய விஷயங்களில் அவர் எனக்கு தைரியம் சொல்வார். கலையுலகத்தை அவர் எந்தளவிற்கு நேசிச்சார் என எல்லா மக்களுக்கு தெரியும்.  

ஒரு முறை 23ஆம் புலிகேசி படத்தை ரிலீஸ் பண்ணமுடியல. அவருக்கு ஃபோன் போட்டு சொன்னே. என்ன பிரச்சனைன்னு கேட்டார். ராஜா குதிரைக்கு மேல் போகக்கூடாதாம், ப்ளு கிராஸ்லாம் பஞ்சாயத்தாம் என்றேன். அதற்கு அவர் ராஜா குதிரையில போகாம குவாலிஸ்-லையா போவார். அப்புறம் ஆ.ராசாவிடம் சொல்லி பார்க்க சொன்னார். அதே போல உன் எம்.ஜி.ஆர் நடிச்ச காஞ்சி தலைவன் படத்துல ஒரு பஞ்சாயத்து நடந்துச்சு,  அப்ப அத சரி பண்ண முடியல. அதுக்கப்புறம் இந்த மேட்டர் என்றார். கண்டிப்பா இந்த படம் ரிலீஸாகிடும் என்று தைரியம் கொடுத்தார். அப்புறம் ரிலீஸ் பண்ண வைச்சதும் கலைஞர் தான். அவர் பண்ணலைன்னா நேரா பிணவறைக்கு தான் போயிருக்கும். அதுக்கப்புறம் தான் படம் ரிலீஸாகி வெற்றி பெற்றுச்சு. அதுமட்டுமல்ல, கலைஞர் டிவி ஆரம்பித்த பிறகு, அந்தப் படத்தை அதில் வெளியிடச்செய்தார். 

திராவிடம்-னா என்னான்னு கேட்கிறவங்க எல்லாம் ஒரே ஒரு முறை மணிமண்டபத்தை சுத்தி பாக்கணும். உள்ள அவ்ளோ அழகா இருக்கு. அதை பார்க்க இரண்டு கண்ணு பத்தாது. ஆயிரம் கண்ணு தேவைப்படும். வரலாற்றில் இப்படி ஒரு மணிமண்டபத்தை கட்ட யாராலையும் முடியாது. யாருக்கும் அந்த வரலாறு கிடையாது” என்றார். மேலும், “சகோதரர் அமைச்சர் உதயநிதி. அவர் விளையாட்டா இருந்தாலும் அலர்ட்டா இருக்கணும். ரொம்ப பயங்கரமான ஆளு. அவர்கிட்ட பேசி தப்பிக்க முடியாது. பெரிய தைரியசாலி” என்றார். 

Next Story

கலைஞர் சிலை திறப்பு விழா; அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அழைப்பு

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Minister Anbil Mahesh invites kalaignar Statue Unveiling Ceremony in trichy

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் மணப்பாறையில் இன்று (01-03-24) முன்னாள் முதல்வர் கலைஞரின் உருவச்சிலை திறப்பு விழா நடக்கிறது. இந்த விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கலந்துகொண்டு, கலைஞரின் உருவச்சிலையை  திறந்து வைக்கிறார்.

இதுகுறித்து திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘தி.மு.க தலைவரின் அறிவுறுத்தலின்படி, கலைஞர் நூற்றாண்டு விழா மிக சிறப்பாக திருச்சி தெற்கு மாவட்டத்தில் வருடம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. 

இதன் அடிப்படையில் இதுவரை 90 நிகழ்ச்சிகள் முடிக்கப்பட்டு தற்போது 91-வது நிகழ்ச்சியானது, கலைஞர் நூற்றாண்டு விழாவில் மற்றொரு நிகழ்வாக சட்டமன்ற தொகுதிக்கு ஒரு சிலை என்ற அடிப்படையில் திருச்சி தெற்கு மாவட்டத்தில் மணப்பாறை தொகுதியில் இன்று (01-03-24) மாலை 3.30 மணிக்கு மணப்பாறை மாட்டுச்சந்தை அருகில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் கலைஞரின் திருவுருவச் சிலையைத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி திறந்து வைக்க உள்ளார். இந்த விழா கழக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு முன்னிலையிலும், எனது தலைமையிலும் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளைக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், மாநகராட்சி, ஒன்றிய நகர, பேரூர் கழக சேர்மன்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கழகத் தொண்டர்களும் பொதுமக்களும் திரளாகக் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.