Skip to main content

ஓடும் ரயிலில் இளம்பெண்ணுக்கு பாலியல் அத்துமீறல்... ஈரோட்டில் விமானப்படை அதிகாரி கைது!

Published on 16/10/2021 | Edited on 16/10/2021

 

Air Force officer arrested in Erode

 

சமீபத்தில்தான் கோவை விமானப் படை முகாமில் பயிற்சிக்காக வந்த இளம்பெண்ணை விமானப் படை அதிகாரி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த பரபரப்பு சம்பவம் நடந்தது. இது தொடர்பான வழக்கில் அந்த அதிகாரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

 

தற்போது, பெங்களூருவைச் சேர்ந்த 29 வயது கல்லூரி பேராசிரியை ஒருவர் தசரா விடுமுறைக்காகப் பெங்களூருவிலிருந்து 13ஆம் தேதி மாலை புறப்பட்டு கேரள மாநிலம் கோட்டயத்துக்கு ஐலாண்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில், முன்பதிவு பெட்டியில் தனியாகப் பயணம் செய்தார். அதே முன்பதிவு பெட்டியில் பேராசிரியைக்கு எதிரே இந்திய விமானப்படையில் ஹவில்தாராக பணிபுரியும் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரைச் சேர்ந்த 28 வயது பிரப்ஜோட் சிங் என்பவரும் பயணம் செய்தார். அப்போது தனியாகப் பயணம் செய்த அந்தப் பேராசிரியையிடம் பிரப்ஜோட் சிங் பேச்சு கொடுக்கத் தொடங்கினார். மத்திய அரசு அதிகாரி என்பதால் மரியாதை கொடுத்துப் பேசினார் அந்த இளம் பேராசிரியை. தொடர்ந்து பேசிய பிரப்ஜோட் சிங், பாலியல் ரீதியான வார்த்தைகளைச் சாதாரணமாகப் பேச தொடங்க, தவறான அர்த்தத்துடன் பேசுவதை உணர்ந்து பேசாமல் அவரது பெர்த்தில் படுத்துக்கொண்டார் அந்த இளம்பெண். ஆனால் விடாத அந்த விமானப் படை அதிகாரி அப்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடத் தொடங்கினார். 

 

நள்ளிரவு நேரம் என்பதால் ரயிலில் மற்ற அனைத்து பயணிகள் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர். பிரப்ஜோட் சிங் அந்தக் கல்லூரி பேராசிரியையிடம் தொடர்ந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டே வந்திருக்கிறார். ஒருகட்டத்தில் எல்லை மீறுவதை அறிந்த அந்தக் கல்லூரி பேராசிரியை பாலியல் சீண்டலில் ஈடுபட்ட விமானப்படை அதிகாரியை எச்சரித்தார். ஆனால் அந்த அதிகாரி எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் தொடர்ந்து சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். 

 

udanpirape

 

அதுவரை அமைதி காத்திருந்த அந்த இளம் பேராசிரியை, ரயில் ஈரோடு ரயில் நிலையத்திற்கு நள்ளிரவு வந்து நின்றதும் உடனடியாக ரயிலில் இருந்து இறங்கி, ஈரோடு ரயில்வே போலீஸ் நிலையத்திற்குச் சென்று நடந்தவற்றைக் கூறி அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப் புகார் கொடுத்தார்.

 

அதன்பேரில் ஈரோடு ரயில்வே போலீசார் சம்பந்தப்பட்ட முன்பதிவு பெட்டிக்குச் சென்று விமானப்படை அதிகாரி பிரப்ஜோட் சிங்கை விசாரணைக்காகக் காவல் நிலையத்திற்கு வாருங்கள் அழைத்துள்ளனர். அதற்கு அந்த அதிகாரி, “நான் சென்டர் கவர்மென்ட் ஆஃபீசர் தமிழ்நாடு ஸ்டேட் போலீஸ் கூப்பிட்டா எல்லாம் நான் வர முடியாது” என ரயில்வே போலீசாரை மிரட்ட, அந்த நபரை ரயிலைவிட்டு குண்டுக்கட்டாக தூக்கிவந்தனர். பிறகு அந்த நபரிடமும் போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் அந்தக் கல்லூரி பேராசிரியையிடம் ஓடும் ரயிலில் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து ஈரோடு ரயில்வே போலீசார் பாலியல் அத்துமீறல், மிரட்டல், பெண்கள் வன்கொடுமைச் சட்டத்தில் பிரட்ஜோட் சிங்கை கைது செய்தனர். பிறகு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோபிசெட்டிபாளையம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

 

"சார் இதுபோன்று சில பெண்கள் துணிச்சலாகச் செயல்பட்டு புகார் கொடுக்கிறார்கள். ராணுவ அதிகாரி என்ற பெயரில் பலபேர் தனியாகவரும் பெண்களிடம் அத்துமீறுகிறார்கள். சில பெண்களை ஓடும் ரயிலில் பாலியல் வன்கொடுமையும் செய்துவிடுகிறார்கள். பயம், அவமானத்தில் சிலர் புகார் கொடுப்பதில்லை. ராணுவத்தினர், மத்திய அரசு ஆஃபீசர், ஸ்டேட் போலீஸ் எதுவும் செய்ய முடியாது என்று அதிகார வெறியால்தான் இப்படி அவர்கள் துணிச்சலாக ஈடுபடுகிறார்கள்." என்றனர் ரயில்வே போலீசார்.

 

மனித உரிமை மீறல், மக்கள் விரோதபோக்கு, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களைத் தண்டிக்க இந்தியா முழுக்க ஒரே சட்டம்தான் என்பதை எல்லை மீறும் குற்றவாளிகள் உணர வேண்டும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறந்து கிடந்த ஆண் யானை; வனத்துறையினர் விசாரணை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest department investigation


                                கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுவதும்,  உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கும்டாபுரம் அருகே ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். இதுபற்றி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதில் இறந்த யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் எனத் தெரிவித்தனர். ஆண் யானையின் தந்தங்கள் இல்லாததால் யானை சுட்டுக் கொல்லப்பட்டதா? அல்லது விஷம் வைத்து கொல்லபட்டதா?  அல்லது இறந்த கிடந்த யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிரேதப் பரிசோதனை மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த யானை உடலை மற்ற வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.