Skip to main content

அதிமுகவினர் வேட்புமனு நிராகரிப்பு... மறியல் செய்தவர்களை கைது செய்த போலீசார்!

Published on 24/09/2021 | Edited on 24/09/2021

 

AIADMK nomination rejected

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 355 பதவிகளுக்கு 1,238 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சீனிவாசன், செந்தில் குமார் ஆகியோர் நேற்று (23.09.2021) வேட்பு மனுக்களைப் பரிசீலனை செய்தனர். இதில், 3 ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் 13 வார்டு மாவட்டக் கவுன்சிலர் என அதிமுக சார்பில் தாக்கல் செய்த நான்கு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவித்தனர். முறையாக அனைத்து ஆவணங்களுடன் வேட்புமனு தாக்கல் செய்திருந்தும் வேண்டுமென்றே அதிகாரிகள் மனுவை நிராகரித்துள்ளனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

 

இதையடுத்து, அதிமுக மாவட்டச் செயலாளர் குமரகுரு கள்ளக்குறிச்சி முன்னாள் எம்.எல்.ஏ பிரபு, இன்னாள் எம்.எல்.ஏ. செந்தில்குமார், ஒன்றிய செயலாளர்கள் ஐயப்பா, கிருஷ்ணமூர்த்தி, ராஜசேகர், நகரச் செயலாளர் சியாம் சுந்தர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்களைச் சந்தித்து வேட்புமனு நிராகரிப்பு செய்யப்பட்டது ஏன் என்று காரணம் கேட்டுள்ளனர். தேர்தல் நடத்தும் அதிகாரிகள் உரிய காரணத்தைக் கூறவில்லை என்று கூறி முன்னாள் எம்.எல்.ஏ. பிரபு தலைமையில் இரவு 11 மணி அளவில் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் செய்தனர்.

 

மறியலில் ஈடுபட்டவர்களைப் போலீசார் கைதுசெய்தனர். மாவட்டச் செயலாளர் குமரகுரு, “எங்கள் கட்சி சார்பில் போட்டியிடுவதற்காக நான்கு பேரும் முறையாக விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அப்படியிருந்தும் அவர்களது மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அந்த மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றால் மாவட்டம் முழுவதும் அதிமுக சார்பில் பெரும் போராட்டம் நடத்தப்படும்” என்று கடும் கோபத்துடன் தெரிவித்துள்ளார். அதிமுகவினரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது அரசியல் கட்சியினரிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இரண்டாம் கட்டத் தேர்தல் வாக்கு சதவீதம்; வெளியான விவரம்!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Details released on Second Phase Election Vote Percentage

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 88 தொகுதிகள் தேர்தல் நடைபெற்றது. 

இதில், இரண்டாம் கட்டத் தேர்தலில் 60.69% வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, திரிபுரா மாநிலத்தில் அதிகபட்சமாக  79.66% வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும், குறைந்தபட்சமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் 54.85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், மணிப்பூர் 78.78%, சத்தீஸ்கர் 75.16%, மேற்கு வங்கம் 73.78%, அசாம் 77.35%, ஜம்மு காஷ்மீர் 72.32%, கேரளா 70.21%, கர்நாடகா 68.47%, ராஜஸ்தான் 64.07%, மத்தியப் பிரதேசம் 58.26%, மகாராஷ்டிரா 59.63%, பீகார் 57.81% வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

இரண்டாம் கட்டத் தேர்தல் நேற்று (26-04-24) முடிவடைந்த நிலையில், மூன்றாம் கட்டத் தேர்தல் வரும் மே 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 94 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.