Skip to main content

அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டச் செயலாளர் மோசடி வழக்கில் கைது!

Published on 18/07/2018 | Edited on 18/07/2018
ADMK_RAVI (2)


உலகமே ஆன்லைனுக்கு மாறிக்கொண்டிருக்கும் நேரத்தில், ஆன்லைன் என்றாலே மோசடி செயல் தான் என்கிற எண்ணமும் சேர்ந்தே வருகிறது. இந்த நேரத்தில் திருச்சி அதிமுக ஆன்லைன் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் ரவிசந்திரன் என்பவரை திடீர் என திண்டுக்கல் போலீசார் நேற்று கைது செய்திருப்பது எல்லோருக்கும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

முதல் கட்டமாக அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்திருக்கிறார் என்று தகவல் வெளியானதும், என்ன மாதிரியான புகார் என்று விசாரித்தோம்..

சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் எஸ்.பி. சக்திவேலிடம் நத்தம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார், பாலசுப்ரமணியன் ஆகியோர் திருச்சி பாலக்கரை படையாச்சி தெருவை சேர்ந்த ரவிசந்திரன் என்பவர் அரசாங்கமே எங்க அரசாங்கம் தான் வேலை வாங்கி தருகிறேன் என்று சொல்லி ஏமாற்றி உள்ளதாக புகார் கொடுத்திருக்கிறார்கள். இதன் அடிப்படையில் இன்ஸ் வினோதா, எஸ்.ஐ.ரெய்கான் ஆகியோரை விசாரிக்க சொல்லி உத்தரவிட்டிருக்கிறார்.

 

 

திண்டுக்கல் குற்றபிரிவு போலீசார் விசாரணையில் ரவிசந்திரன் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவில் மாவட்ட செயலாளராக இருப்பதால் நடப்பது எங்க ஆட்சி, அரசாங்கத்தில் எந்த வேலையும் வாங்கி தருகிறேன். எதுக்கும் ஒரு விலை இருக்கிறது, எனக்கு அமைச்சர் முதல் எல்லோரும் பழக்கமானவர்கள் தான். நான் சொன்னா உடனே வேலை கிடைக்கும் என்று ஆசை வார்த்தை சொல்லி 2015ம் ஆண்டு நத்தம் பகுதியை சேர்ந்தவர்கள் 11 பேரிடம் ரூ.63 லட்சம் வாங்கியிருக்கிறார்.

அதிமுக கட்சியில் தகவல் தொழில்நுட்ப பிரிவில் இருப்பதால் அமைச்சர்கள் எல்லோருக்கும் நெருக்கமாக இருப்பார் என்று நினைத்து பணம் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் வாங்கினதோடு சரி... இப்ப நடக்கும், அப்ப நடக்கும், ஆட்சி மாற்றம் ஏற்பட்டும், திரும்ப எங்க ஆட்சி தான் வந்திருக்கு, நாங்க பண்ணிடுவோம் என்று சொல்லி சொல்லி 3 வருடம் ஆகியும் எந்த அரசாங்க வேலையும் வாங்கி கொடுக்கவில்லை. கொடுத்த பணத்தை திரும்ப கேட்டதற்கு பணம் எல்லாம் கொடுக்க முடியாது. இனி பணம் கேட்டு வந்தீங்க அவ்வளவு தான் என்று மிரட்டியிருக்கிறார். அதன் அடிப்படையிலே கொடுத்த புகாருக்கு வழக்கு பதிவு செய்திருக்கிறார்.

கடந்த ஆட்சியில் மனோகரன் கொறடாவாக இருந்த போது தான் ரவிசந்திரன் அவருடைய தீவிர ஆதரவாளராக மாறினார். அதன் பிறகு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூடவே இருந்தார். கட்சி பிரச்சனைக்கு பிறகு தினகரன் அணியிலே கொஞ்ச காலம் இருந்தவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மீண்டும் அதிமுகவில் இணைத்துக்கொண்டார்.

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.