Skip to main content

நக்கீரனில் செய்தி, வீடியோவை பார்த்த பிறகு அலுவலகத்தில் இருக்க முடியவில்லை... மாணவி சத்தியா வீட்டிற்கே சென்று உதவிய எஸ்.பி!!

Published on 04/09/2020 | Edited on 04/09/2020

 

After watching the news and video in Nakkeeran,  could not stay in the office ..

 

புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் போரம் ஊராட்சியில் ராமையா என்பவரின் மகள் சத்தியா என்ற சிறுமி மனநலம் குன்றிய தனது தாயாரையும் வைத்துக் கொண்டு விவசாய கூலி வேலைகளுக்குச் சென்று, குடும்ப பாரத்தை சுமந்து வருகிறார் என்ற தகவலை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி கவனத்திற்கு கொண்டு சென்றோம். சத்தியாவிற்கு அனைத்து உதவிகளும் செய்ய நடவடிக்கை எடுக்கிறோம் என்றார் ஆட்சியர். இந்தச் செய்தி மற்றும் வீடியோக்களை நக்கீரன் இணையத்தில் செப்டம்பர் 3 ஆம் தேதி வியாழக்கிழமை மாலை வெளியிட்டிருந்தோம். செய்தியோடு தொடர்பு எண்களையும் வெளியிட்டிருந்தோம். செய்தி வெளியான சில நிமிடங்களில் தொடங்கி ஏராளமான அழைப்புகள் சத்தியாவிற்கு ஆறுதல் சொன்னதோடு உதவியும் செய்ய முன் வந்துள்ளனர். பலர் சத்தியாவின் வங்கிக் கணக்கு எண் கேட்டிருந்தார்கள்.

 

After watching the news and video in Nakkeeran,  could not stay in the office ..

 

இந்த நிலையில் தான் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் திடீரென போரம் கிராமத்திற்குச் சென்று சத்தியாவை சந்தித்து உனக்கு உதவிகள் செய்ய நாங்கள் இருக்கிறோம் என்ற நம்பிக்கையை கொடுத்ததுடன் கையோடு கொண்டு சென்ற புத்தாடைகள், உணவுப் பொருட்கள், காய்கறி, பழங்கள், சிறு பணஉதவி என அனைத்தையும் வழங்கியவர் மன தைரியத்தோடு இத்தனை ஆண்டுகள் உழைத்து மனநலம் பாதிக்கப்பட்ட தாயையும் கவனித்துக் கொண்டு உன் படிப்பையும் தொடர்ந்திருப்பது சிறப்பானது.

உனது கல்லூரி படிப்பு புதுக்கோட்டையிலும் தொடர்ந்து வேலை வாய்ப்பிற்கான பயிற்சி வகுப்புகள் சென்னையிலும் தொடர அனைத்து உதவிகளையும் நான் செய்கிறேன் என்று சொல்ல.. சத்தியாவால் அதைக் கேட்க முடியாமல் கண்கலங்கி நன்றி சொன்னார்.

 

After watching the news and video in Nakkeeran,  could not stay in the office ..


நம்மிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், நக்கீரன் செய்தி மற்றும் வீடியோவைப் பார்த்த பிறகு கண் கலங்கியது. அதன்பிறகு என்னால் அலுவலகத்தில் இருக்க முடியவில்லை. இத்தனை தைரியமான சிறுமி யார் என்பதை நேரில் பார்க்க வேண்டும் என்று உடனே கிளம்பி வந்தேன்.

தான் படித்து ஒரு அரசு வேலைக்குப் போக வேண்டும் என்று அந்த மாணவி சொன்னார். உடனே புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் இடம் கொடுப்பதாக கூறியுள்ளனர். தொடர்ந்து போட்டித் தேர்வுகள் எழுத எனது சென்னை நண்பரிடம் உதவி கேட்டேன். இப்போதே அதற்கான புத்தகங்களை அனுப்புகிறேன் தொடர்ந்து அந்த மாணவிக்கான கல்வி, தேர்வுக் கட்டணங்களையும் செலுத்துகிறேன். பட்டப்படிப்பு முடிந்ததும் சென்னையில் போட்டித் தேர்வுக்கான பயிற்சியை முழுமையாக கொடுத்து அரசு அலுவலராக ஊருக்கு அனுப்புகிறேன் என்று சொன்னார்.

ஏதோ என்னால் முடிந்த, சிறு உதவி செய்த, நிம்மதியோடு அலுவலகம் திரும்புகிறேன் என்றவர் இப்படி ஒரு தைரியமான சிறுமி படுக்கக் கூட வீடு இல்லாமல் இருக்கிறார் என்ற தகவலை எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்த நக்கீரனுக்கு நன்றி என்றார்.
 

Ad

 

சத்தியாவின் படிப்பிற்காகவும், அரசு வேலைக்கான பயிற்சிக்காகவும் உறுதி அளித்து தைரியம் கொடுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் மற்றும் போட்டித் தேர்வுக்கு உதவிகள் செய்ய தயாராக உள்ள எஸ்.பியின் நண்பருக்கும் நக்கீரன் சார்பிலும், சத்தியா சார்பிலும் நன்றி தெரிவித்தோம். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடி மீது காவல் நிலையத்தில் புகார்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Police complaint against Prime Minister Modi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன் தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும். அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார்.

பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

Police complaint against Prime Minister Modi

இந்நிலையில் வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது டெல்லி மந்திர்மார் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர்  பிருந்தா காரத் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “ஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பூட்டும் வகையில் பிரதமர் பதவியில் உள்ள மோடி பேசியுள்ளார். எனவே இந்த வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முறையிடவும் வழக்கறிஞர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும் வெறுப்பு பேச்சுக்களை தடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இன்று (23.04.2024) விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.