Skip to main content

“வைக்காத பெயருக்காக போராடிய அண்ணாமலைக்கு இந்த பிரச்சனை தெரியாமல் போனது எப்படி?” - அதிமுக எம்.எல்.ஏ கேள்வி 

Published on 16/05/2022 | Edited on 16/05/2022

 

ADMK MLA Questioned Annamalai on NLC Issue

 

கடலூர் மாவட்டம், நெய்வேலி என்.எல்.சி.க்கு நிலம் வீடு கொடுத்தவர்கள் மந்தாரக்குப்பம் பகுதியில் ஐ.ஐ.டி நகர், திருவள்ளுவர் நகர், பெரியார் நகர், சிவாஜி நகர், பட்டு அய்யனார் காலனி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் 700-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கும் மக்களின் வீடுகளுக்கு திடீரென மின்சார இணைப்பை துண்டித்த என்.எல்.சி. நிர்வாகம். 


இதனை கண்டித்து இன்று திங்கட்கிழமை (16.04.2022.) காலை 10 மணிக்கு நெய்வேலி என்.எல்.சி. இரண்டாம் சுரங்கம் நுழைவு வாயிலில் அனைத்து கட்சி போராட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க., த.வா.க., வி.சி.க., தே.மு.தி.க., ம.தி.மு.க., மூ.பு.ப., வர்த்தக சங்கம் உள்ளிட்ட சமூக அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 


அதில் அதிமுக கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளரும் புவனகிரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஆ.அருண்மொழிதேவன் பேசும் போது, ”என்.எல்.சி. நிர்வாகம் நிலம் வீடு கொடுத்தவர்களுக்கு முறையான இழப்பீடு வழங்கவில்லை. குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும். ஆனால் தினக்கூலி அடிப்படையில் 360 ரூபாய் வேலையை கூட தற்போது நிறுத்தி வைத்திருப்பதாக கூறுகிறார்கள். இன்றைக்கு உலக நாடுகளில் தமிழர்கள்தான் கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களில் சி.இ.ஓ.க்களாக தலைமை பதவியில் இருக்கிறார்கள். 


இங்கே என்.எல்.சி.யில் வட இந்தியாவில் பி.இ. படித்து விட்டு இங்கே ஒன்றரை லட்சம் சம்பளத்தில் வேலையில் அமர்கிறார்கள். அடுத்து என்.எல்.சி.யில் தலைமை பதவியில் கூட அமர்ந்து விடுகிறார்கள். ஏன் நிலம் வீடு கொடுத்த எங்கள் வீட்டில் பி.இ. படித்த இளைஞர்கள் இங்கே இஞ்சினியராக பணியாற்ற கூடாதா.?! தினக்கூலிதான் வழங்குவீர்களா.? இதனையெல்லாம் நாங்கள் தட்டி கேட்கிறோம். சட்டமன்றத்தில் இதுகுறித்து நான் பேசும்போது சபாநாயகர் அப்பாவு அவர்கள் கூட எங்கள் மாவட்டத்தில் உள்ள கூடங்குளத்தில் இதே நிலைமைதான் என்கிறார். மக்களை திரட்டி போராட்டம் நடத்தி வேலைவாய்ப்பை பெற்றோம் என்றார்.


அப்போது பதிலளித்து பேசிய அமைச்சர் கணேசன், சட்டமன்றம் முடிந்து செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து பிரச்சனை தீர்க்கப்படும் என்றார். சட்டமன்றம் முடிந்து விட்டது, ஆகையால் உடனடியாக குழுவை அமைத்து மக்களின் பிரச்சனைக்கு தமிழக அரசும் முதல்வரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் என்.எல்.சி. நிர்வாகத்திற்கு மாவட்ட நிர்வாகம் ஒத்துழைப்பு வழங்காவிட்டால் இங்கே என்.எல்.சி. செயல்பட முடியாது.


இப்படியே தொடர்ந்தால் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் தற்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடியாரை அழைத்து வந்து மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்” என்றவர்.


திடீரென தன் பேச்சை பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பக்கம் திசை மாற்றினார். அதாவது இல்லாத பிரச்சினைக்காக அண்ணாமலை போராட்டம் செய்வதாக ஆரம்பித்தவர். திருவாரூரில் தேரோடும் வீதிக்கு வைக்காத பெயருக்காக போராட்டம் நடத்திய பாஜக தலைவர் அண்ணாமலை, இந்த நெய்வேலி என்.எல்.சி. மக்கள் விவசாயிகள் தொழிலாளர்கள் பிரச்சனை தெரியாமல் போனது எப்படி. நாங்கள் சட்டமன்றத்தில் பேசியது அவருக்கு தெரியவில்லையா.? இனியாவது தெரிந்து கொண்டு இப்பகுதியில் உள்ள பிரச்சனைக்காக அண்ணாமலை வந்து போராடி பாரதப் பிரதமரிடம் கூறி என்.எல்.சி.யின் மக்கள் பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டும்” என்று முடித்தார்.  

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும்' -தமிழிசை பேட்டி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

nn


'ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மக்கள் மிகவும் வரவேற்றார்கள்' எனப் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''இந்தத் தேர்தலில் இன்னும் வாக்கு எண்ணிக்கை சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். நேற்றைய தினம் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி சொல்லும்போது ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். சென்னை போன்ற இடங்களில் அப்பொழுதுதான் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். சில பேர் இரண்டு வாக்குகள் வைத்திருக்கிறார்கள். கிராமத்திலும் போய் வாக்களிக்கிறார்கள். அது ஒரே இடத்தில் இருந்தால் சென்னையில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் மக்கள் அதிகமாக வாக்களிக்க வரவேண்டும். வாக்களிக்க வந்தவர்களுக்கு மிக்க நன்றி. ஏனென்றால் அதிகாலையில் வயதானவர்கள், முடியாதவர்கள் கூட வந்து வாக்களித்தார்கள். அவர்களை நான் தலை வணங்குகிறேன். எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும். பாரதிய ஜனதா கட்சிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. வடசென்னை பகுதியாக இருக்கட்டும், தென் சென்னை, மத்திய சென்னை, தமிழகம் முழுவதும் குறிப்பாக தென் சென்னையில் நான் போட்டியிட்ட இடத்தில் மக்கள் மிகுந்த அன்பையும் ஆதரவையும் அளித்தார்கள், என்னை உணர்ச்சி வயப்படும் அளவிற்கு, நெகிழ்ச்சி அடைய வைக்கும் அளவிற்கு எல்லோரும் என்னிடம் அன்பு பாராட்டினார்கள். ஒரு ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மிகவும் வரவேற்றார்கள்''என்றார்.

Next Story

மோடியின் சர்ச்சை பேச்சு; பரப்படும் மன்மோகன் சிங்கின் விடியோ - தகிக்கும் தேர்தல் களம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Congress accuses BJP of misrepresenting Manmohan Singh's video and spreading it

ராஜஸ்தானில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் தேசத்தின் செல்வத்தை இந்துக்களிடமிருந்து முஸ்லீம்களுக்கு கொடுத்துவிடுவார்கள் எனக் கூறி வெறுப்பு பிரச்சாரம் செய்தார். அதற்கு நாடு முழுவதம் கடும் கண்டனம் எழுந்து வருகிறது. சர்வாதிகாரியின் உண்மை முகம் வெளிவந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பகுதியில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, '‘காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது,​ ​தேசத்தின் செல்வத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்கு கொடுக்கப் போகிறீர்களா?’ என்றார். இதில், இஸ்லாமியர்களைப் பிரதமர் மோடி ஊடுருவல்காரர்கள் என்றும், அதிக குழந்தைகளைப் பெற்றவர்கள் எனவும் சித்தரித்து பேசியிருந்தார்.

தொடர்ந்து பேசிய மோடி, ''பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தை கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, இஸ்லாமியர்களுக்கே செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள், சகோதரிகளின் தாலியைக்கூட விட்டுவைக்காது. எனக் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தார். இந்திய அரசியல் வரலாற்றில் எந்தவொரு பிரதமரும், இவ்வளவு தரம் தாழ்ந்து பேசியது கிடையாது என்றும், முதல் பிரதமாராக மோடி வெறுப்பு பிரச்சாரம் செய்து வரலாற்றில் இடம் பிடித்துள்ளார் எனக் கடும் கண்டனங்கள் எழுந்து வந்தது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நேரத்தில் நாட்டின் பிரதமர் வெறுப்பு பிரச்சாரம் செய்து இருப்பதால் மோடியைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. இதனிடையே, காங்கிரஸ் சார்பில் பிரதமர் மோடி வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், தன்னாட்சியாக செயல்படும் இந்திய தேர்தல் ஆணையம் பிரதமர் வெறுப்பு பேச்சு தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது. இதற்கு முன்பு உத்தரப் பிரதேசத்தின் சஹரன்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக் என்று முத்திரை குத்தி வெறுப்பு பிரச்சாரம் செய்தார். ஆனால், இந்திய தேர்தல் ஆணையம் அதற்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன் நீட்சியாக பிரதமர் மோடி தொடர்ந்து இஸ்லாமியர்களை குறிவைத்து வெறுப்பு பிரச்சாரம் செய்து வரும் நிலையல், தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமரின் அப்பட்டமான வெறுப்புப் பேச்சுக்கு காது கேளாத வகையில், இந்திய தேர்தல் ஆணையம் வெட்கமின்றி நடுநிலைமையைக் கூட கைவிட்டுள்ளதாக குற்றம் சாற்றியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, சர்வாதிகாரியின் உண்மை முகம் மீண்டும் நாட்டின் முன் வெளிவந்துள்ளதாக சாடியுள்ளார். 

ஆனால், பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சை நியாப்படுத்தும் பாஜகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், பிரதமர் மன்மோகன் சிங் பேசும் பழைய வீடியோவை கட் செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். இதனால், மன்மோகன் சிங் உண்மையில் பேசியது குறித்து காங்கிரஸ் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. அதில்,  கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசும் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், தேசத்தின் பல்வேறு வளர்ச்சிகள் சார்ந்த முன்னுரிமைகளை விளக்குகிறார். “பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பினர், ஓபிசி பிரிவினர், சிறுபான்மையினர், பெண்கள், குழந்தைகள், குறிப்பாக, முஸ்லிம் சிறுபான்மையினர் வளர்ச்சியின் பலன்களில் சமமாகப் பங்குபெறும் வகையில், புதுமையான திட்டங்களை வகுக்க வேண்டும். வளங்கள் மீதான முதல் உரிமையை அவர்கள் பெற்றிருக்க வேண்டும். நாட்டின் வளங்களில் மத்திய அரசுக்கு எண்ணற்ற பிற பொறுப்புகள் உள்ளன. அது நாட்டு மக்கள் அனைவருக்கும் சென்று சேரவேண்டும். என மன்மோகன் சிங் பேசியுள்ளார்.

அப்போதே அவரது பேச்சு பொதுவெளியில் வேறாக புரிந்துகொள்ளப்பட்டதால் பிரதமர் அலுவலகத்தில் இருந்து விளக்கமும் கொடுத்ததாக சொல்லப்படுப்படுகிறது. ஆனால், பாஜகவினர், 'குறிப்பாக முஸ்லிம் மக்கள்' என  மன்மோகன் சிங் பேசுவதை மட்டும் கட் செய்து சமூக வலைத்தளங்களில் வெறுப்பு பிரச்சாரம் செய்து வருவதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றச்சாட்டுகின்றனர். நாட்டில் 10 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் பாஜக ஆட்சிகால சாதனைகளைக் கூற முடியாமல் 18 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவத்தை திரித்து வெறுப்பு பிரச்சாரம் செய்வதாக கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடி உண்மைக்கு மாறான தகவலைத் தந்துள்ளார் எனவும், காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் மோடி பேசியது எதையும் கூறவில்லை என்றும் அக்கட்சித் தலைவர்கள் விளக்கம் அளித்துவருகின்றனர். ஆனால், இதனிடையே உத்திரபிரதேசத்திற்கு தேர்தல் பரப்புரைக்கு சென்ற மோடி இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார். முன்னதாக நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இடத்திற்கு இடம் பிரதமர் மோடி மாற்றி பேசி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது