Skip to main content

அ.திமு.க. பா.ஜ.க இடையே கூட்டணி கிடையாது தம்பித்துரை பேட்டி!

Published on 12/01/2019 | Edited on 12/01/2019
t

 

அ.தி.மு.க. , பாஜக இடையே எந்தவித தேர்தல் கூட்டணியும் கிடையாது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை தெரிவித்தார். 

 

திண்டுக்கல் அருகே உள்ள டேவசந்தூரில் மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது...  தமிழகத்தின் உரிமைகளை பெறுவதற்காக அ.தி.மு.க. தொடர்ந்து மக்களவை மாநிலங்களவையில் குரல் எழுப்பி வருகிறோம். அதன்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தாமதித்தால் போராடி வாரிய அமைத்தோம். 

 

மத்திய அரசு தமிழக அரசுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை தொடர்ந்து போராடி கேட்டு வருகிறோம். மேகதாது அணை பிரச்சினையில் கர்நாடகத்துக்கு சாதகமாக பா.ஜ.க. செயல்படுவதால் அ.தி.மு.க. எம்.பி.க்கள் தொடர் போராட்டம் நடத்தி எங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறோம். எனவே பா.ஜ.க. அ.தி.மு.க. இடையே தேர்தல் கூட்டணி என்பது கிடையாது. ஆட்சியில் மட்டுமே தொடர்பு உள்ளது. பிரதமர் மோடியின் பல்வேறு திட்டங்களை ஆதரித்தும் எதிர்த்தும் வருகிறோம். மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் நான் அ.தி.மு.க.வில் என்ன பொறுப்பில் இருக்கிறேன் என்றும் கூட்டணி குறித்து கருத்து கூற எனக்கு தகுதி இல்லை என்றும் கூறி வருகிறார். மேலும் திராவிட கட்சிகளை ஊழல் கட்சிகள் என்றும், எடப்படி பழனிச்சாமியை செயல்படாத முதல்வர் என்றும் கூறிக்கொண்டே இருக்கிறார். கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக உள்ள நான் இதையெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாது. இதுவரை கூட்டணி குறித்து அ.தி.மு.க. யாரிடமும் பேசவில்லை. கூட்டணி குறித்து உரிய நேரத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் நல்ல முடிவு எடுப்பார்கள் என்று கூறினார். பேட்டியின்போது கட்சிப்பொறுப்பாளர்கள் பலர் உடன் இருந்தனர்!
 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழ்நாட்டிலே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோற்ற அதிமுக வேட்பாளர் இவர் தான்!

Published on 28/05/2019 | Edited on 28/05/2019

கரூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட சட்டசபை தொகுதிகளில், கடந்த, 2016 ஆம் ஆண்டு  நடந்த சட்டமன்ற தேர்தலில் பெற்ற ஓட்டுகளை விட, குறைந்த ஓட்டுக்களையே பெற்று, தமிழகத்தில் அதிமுக வேட்பாளர்களில் மிக குறைவான  ஓட்டுகளை  வாங்கி தம்பிதுரை சரிவை சந்தித்துள்ளார்.

15- வது மக்களவை  தேர்தலில் 38 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் அதிமுகவின் எம். தம்பிதுரை திமுகவின் கே.சி. பழனிச்சாமியை விட 47,254 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

16- வது மக்களவை  தேர்தலில் திமுகவின் சின்னசாமி 3,45,475 எம். தம்பிதுரை அதிமுக 5,40,722 வாங்கி 1,95,247 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 

17- வது மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியிடம் 4.20,546 வாக்குகள் வித்தியாசத்தில் தம்பிதுரை தோல்வி அடைந்துள்ளார்.

 

SENTHIL BALAJI

 

 

கரூர் மக்களவை தொகுதியானது கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், வேடச்சந்தூர், மணப்பாறை, விராலிமலை ஆகிய சட்டசபை தொகுதிகளை  உள்ளடக்கியது. கடந்த 2016 ஆம் ஆண்டு  நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க இந்த ஆறு சட்டமன்ற தொகுதிகளையும்  கைப்பற்றியது. 

 

அப்போது, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டசபை தொகுதியில், போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு 81 ஆயிரத்து, 936 ஓட்டுகள் கிடைத்தன. தற்போது 48 ஆயிரத்து 616 ஓட்டுகளாக சரிந்தது. 

 

கிருஷ்ணராயபுரம் தொகுதியில் கீதா 83 ஆயிரத்து 977 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இந்த சட்டமன்ற தொகுதியில் தற்போது தம்பிதுரைக்கு 44 ஆயிரத்து 315 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தன.

 

அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில்பாலாஜி 88 ஆயிரத்து 68 ஓட்டுகள் பெற்றார். இந்த சட்டமன்ற தொகுதியில் தற்போது தம்பிதுரைக்கு 37 ஆயிரத்து 518 ஓட்டுக்கள் கிடைத்தன. 

 

வேடச்சந்தூரில் பரமசிவம் 97 ஆயிரத்து 555 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இந்த சட்டமன்ற தொகுதியில் தற்போது தம்பிதுரைக்கு, 55 ஆயிரத்து, 258 ஓட்டுகள் கிடைத்தன. 

 

விராலி மலையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் 84 ஆயிரத்து  701 ஓட்டுகள் பெற்றார். இந்த சட்டமன்ற தொகுதியில் தற்போது தம்பிதுரைக்கு 40 ஆயிரத்து 104 ஓட்டுகள் கிடைத்தன. 

 

JOTHIMANI

 

 

மணப்பாறை தொகுதியில் சந்திரசேகர் 91 ஆயிரத்து 399 ஓட்டுகள் பெற்றார். இந்த சட்டமன்ற தொகுதியில் தம்பிதுரைக்கு  48 ஆயிரத்து 644 ஓட்டுகள் கிடைத்தன. கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற  தேர்தலில் பா.ம.க- தே.மு.தி.க கூட்டணி , பா.ஜக கட்சி தனி அணியாக போட்டியிட்டன. 

 

இந்த கட்சிகள் அனைத்தும் தற்போது கூட்டணியில் இருந்தும், அ.தி.மு.கவிற்கு கூடுதல் ஓட்டுகள் கிடைக்கவில்லை. கரூர் மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் நான்கு எம்.எல்.ஏ.,க்கள் கைவசம் இருந்தும், கடந்த தேர்தலில் பெற்ற ஓட்டுகளைக் கூட பெற முடியாமல் அதிமுக தேர்தலில் தோல்வி அடைந்துள்ளது. தொகுதியில் தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்றும் கடைசியில் இந்த முறை செந்தில்பாலாஜி- ஜோதிமணியின் கூட்டு முயற்சியில் தோல்வியின் கடைசி இடத்திற்கே தம்பிதுரை  சென்று விட்டார். வாழ வந்த ஊரில் இருந்து தம்பிதுரையை பிறந்து ஊருக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள் கரூர் மக்கள். 

 

 

 

Next Story

அமைச்சரின் தந்தை எம்.பியா? கூட்டுறவு வங்கி தலைவரா? 

Published on 23/02/2019 | Edited on 23/02/2019

 

அதிமுகவினர் இதுவரை திமுகவை குடும்ப கட்சி, குடும்ப உறுப்பினர்களே பதவிகளுக்கு வருவதாக மேடைக்கு மேடை விமர்சனம் செய்து வந்த நிலையில் தற்போது எம்பி தேர்தலில் போட்டியிட ஓபிஎஸ் மகன், அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பி , இப்படி  பலரும் விருப்ப மனு கொடுத்து திமுகவுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பதை காட்டிவிட்டனர். 

 

v

 

அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பி கரூர் பாராளுமன்றத் தொகுதிக்கு விருப்ப மனு கொடுத்தவுடனேயே பரபரப்பு தொற்றிக் கொண்டது. கடந்த 4 வருடமாக கரூர் தொகுதியில் உள்ள விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்குள் எம்.பியும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை எட்டிக்கூட பார்க்காத நிலையில் கடந்த சில மாதங்களாக அமைச்சர் விஜயபாஸ்கர் கிராமம் கிராமமாக அழைத்து வந்து மக்கள் சந்திப்பு மனு வாங்குவது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தினார்.

 

இந்த நிலையில் தான் சின்னத்தம்பி விருப்ப மனு கொடுத்திருப்பது கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து பாஜகவை விமர்சனம் செய்து வந்த தம்பிதுரைக்கு செக் வைக்கவே சின்னத்தம்பியை விருப்பமனு கொடுக்க வைத்து தம்பிதுரையை ஆப் பண்ணி இருக்கிறது பா ஜ க தலைமையும் அதிமுக தலைமையும் என்று ர. ர. க்களே கூறுகின்றனர்.   


இந்த நிலையில் தான் வெள்ளிக்கிழமை புதுக்கோட்டை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் புதிய இயக்குநர்கள் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் பெறப்பட்ட நிலையில் மொத்தம் 21 இயக்குநர்களுக்கு 32 வேட்பாளர்கள் வேட்பு மனு கொடுத்துள்ளனர். அதில் ஒருவர் அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பி. மீண்டும் ஒரு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

இது குறித்து புதுக்கோட்டை ர. ர. க்கள் கூறும் போது.. எம் பி சீட் வேண்டும் என்று விருப்ப மனு கொடுத்தார்.  அவர் மனு கொடுத்த பிறகு தம்பிதுரை இப்ப அமைதியாக மத்திய அமைச்சர்களை வரவேற்க தொடங்கிட்டார். இந்த நிலையில தான் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஆக விரும்பிய சின்னத்தம்பி இன்று வேட்பு மனு கொடுத்திருக்கிறார். திங்கள் கிழமை வாபஸ் காலம் முடிகிறது. அன்று 32 பேரில் 11 பேர் தங்கள் மனுக்களை வாபஸ் பெறுவார்கள். மீதமுள்ள 21 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வாகி இயக்குநர் ஆவார்கள். அதன் பிறகு அந்த 21 இயக்குநர்களில் சின்னத்தம்பி தலைவர் பதவிக்கு வேட்பு மனு கொடுப்பார்.

 

 அமைச்சரின் தந்தையல்லவா அதனால வேற யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யமாட்டாங்க.   அப்பறம் போட்டியின்றி மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் ஆகிடுவார். துணைத் தலைவரா அர்களுக்கு ரொம்ப வேண்டியவரை நியமிக்க போறாங்க என்றவர்கள்.. அமைச்சரின் தந்தை எம். பி யா? மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவரா என்ற பட்டிமன்றமே நடக்கிறது . தலைவர் ஆகிடுவார்.
 ஆனா இதில் அமைச்சருக்கு விருப்பம் இல்லயாம். அதாவது ந. செ. பாஸ்கரை மாவட்ட தலைவராக்களாம் என்று இருந்தாராம்.  ஆனால் சின்னத்தம்பி பிடிவாதமா இருக்காராம். அதனால தலைவர் தேர்தலுக்கு முன்னால சின்னத்தம்பி சமாதானம் ஆகிட்டா தலைவர் மாறலாம்.. சமாதானம் ஆகலன்னா சின்னத்தம்பி தான் தலைவர் என்றனர்.