Skip to main content

'சிலை அவமதிப்பு விவகாரம்' தமிழக பாஜக எம்எல்ஏவின் ட்வீட்டை சில நிமிடங்களில் ரீ-ட்வீட் செய்த நடிகை குஷ்பு!

Published on 10/01/2022 | Edited on 10/01/2022

 

hkj

 

இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் முக்கிய தலைவர்களின் சிலைகள் தொடர்ந்து சேதப்படுத்தப்பட்டு வருகிறது. பெரியார், அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களின் சிலைக்கு காவி வண்ணம் பூசுவது, காலணி மாலை போடுவது என தொடர் அத்துமீறல் நடைபெற்று வருகிறது. சிலர் தமிழகத்தில் பெரியார் சிலையை திரிபுராவில் லெனின் சிலையை அகற்றியது போல் அகற்றுவோம் என்று கூறிய சம்பவங்களும் அரங்கேறியது. 

 

இந்நிலையில், கோவை மாவட்டம் வெள்ளலூர் பேருந்து நிலையம் அருகில் பெரியார் சிலை ஒன்று நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. திராவிடர் கழகத்தின் சார்பாக இந்தச் சிலை வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் அந்தச் சிலையின் மீது காவிப்பொடியை தூவிச் சென்றுள்ளனர். மேலும் செருப்பு மாலை ஒன்றையும் அணிவித்துள்ளனர். இந்நிலையில் காலையில் அந்த வழியாக சென்றவர்கள் இந்தச் சம்பவத்தைப் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்தச் சம்பவம் பற்றி கேள்விப்பட்ட திராவிடக் கழகத்தினர் அங்கு திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை திராவிடர் கழகத்தினர் கைவிட்டனர். 

 

இந்நிலையில் இந்தியா முழுவதும் சிலை அவமதிப்பு தொடர்பாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "கருத்தியல் ரீதியாக இல்லாமல்,  சிலைகளை அவமதிப்பது, தனிப்பட்ட காழ்ப்புணர்வு தாக்குதல்கள் என இம்முயற்சிகள் பதட்டத்தை உருவாக்குவதைத் தவிர வேறொன்றில்லை. நாட்டின் பிரதமர் அவர்கள் மீது எத்தனை வன்மம், கொடுஞ்சொற்கள்? அவரது படத்தை அவமரியாதை செய்வது என எத்தனை செயல்கள்" என்று தெரிவித்துள்ளார்.

 

இவரின் இந்தக் கருத்தை நடிகை குஷ்பு சுந்தர் ரீ-ட்வீட் செய்துள்ளார். இந்த ட்வீட் எதிலும் பெரியார் பெயர் நேரடியாக பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கையெழுத்து போடுங்கள் என்றால் போடுவேன்” - வெளிப்படையாகப் பேசிய குஷ்பு

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
kushbu sundar about aranmanai 4

2024 ஆம் ஆண்டு நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் தேதி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன. இதனால் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தங்கள் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்த வகையில் வேலூர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான பா.ஜ.க.வை சார்ந்த குஷ்பு, வேலூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இயக்குநர் சி.சுந்தர் இயக்கத்தில் வெளியாகவுள்ள அரண்மனை 4 திரைப்படத்தை பற்றிப் பேசினார். அவர் பேசியதாவது, “நாங்கள் அரண்மனை 4 பார்த்து விட்டோம். படம் பிரமாதமாக வந்துள்ளது. இதுவரையில் வந்த அரண்மனை படங்களை விட இது வித்தியாசமானதாக இருக்கும். நிறைய உணர்வுப்பூர்வமான காட்சிகள் மற்றும் கமர்சியல் வேல்யூ முழுவதும் ஆக உள்ளது. யோகி பாபு உள்ளிட்ட பல நடிகர்கள் இடம் சிறப்பாக நடித்துள்ளனர்” என்றார்.  

அவரிடம், அரண்மனை திரைப்படம் சீரிஸ் இன்னும் தொடர்ச்சியாக சென்று கொண்டிருக்குமா, எப்போதுதான் அது முடியும் என்ற கேள்வி கேட்கப்பட்ட நிலையில், “அதை நான் முடிவு செய்ய முடியாது. இயக்குநர், எழுத்தாளர் தான் முடிவு செய்வார்கள். இது தான் கதை. கையெழுத்து போடுங்கள் என்றால் போடுவேன் அவ்வளவுதான், எல்லாமே இயக்குநர் தான் முடிவு செய்வார் நான் அல்ல” என பதிலளித்தார். 

அவ்னி சினிமேக்ஸ் சார்பில் குஷ்பு மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் அருண்குமார் தயாரிப்பில், சுந்தர் சி நடித்துள்ள படம் அரண்மனை 4. இதில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளனர். அரண்மனை பட வரிசையில் நான்காவது படமாக இப்படம் உருவாகியுள்ளது. விரைவில் இப்படம் திரைக்கு வரவுள்ளது. ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. சமீபத்தில் ட்ரைலர் வெளியாகியிருந்தது. 

Next Story

குஷ்பு மீது போலீசில் புகார்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Police complaint against Khushbu

மகளிர் உரிமை திட்டப் பயனாளிகளை இழிவுபடுத்தி பேசியதாக பாஜக நிர்வாகியும் நடிகையுமான குஷ்பு மீது புகாரும், கண்டனமும் எழுந்துள்ளது. அந்த வகையில் திமுக மகளிர் அணி சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

சென்னை, திருச்சி, நாமக்கல், தஞ்சாவூர் ,சேலம், ஈரோடு, எடப்பாடி என தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் புதுச்சேரியிலும் 'குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும்' என வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. சில இடங்களில் அவரது உருவப்படங்கள் எரிக்கப்பட்டு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மகளிர் உரிமைத்தொகை குறித்து அவதூறாக பேசிய நடிகை குஷ்பு மீது நடவடிக்கை எடுக்குமாறு ஈரோடு பவானி நகராட்சி தலைவர் சிந்தூரி சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.