Skip to main content

“தமிழகம் முழுவதும்  500 கலைஞர் உணவகம் திறக்கப்படும்” - டெல்லியில் அமைச்சர் சக்கரபாணி  

Published on 26/11/2021 | Edited on 26/11/2021

 

"500 Kalaignar restaurants will be opened across Tamil Nadu" - Minister Chakrabani

 

தமிழ்நாட்டில் விரைவில் 500 இடங்களில் கலைஞர் உணவகம் திறக்கப்படும் என்று தமிழ்நாடு உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

 

நாடு முழுவதும் மாதிரி சமுதாய சமையலறை திட்டத்தை செயல்படுத்துவது குறித்து மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் பாதுகாப்பு, உணவு மற்றும் பொது விநியோகத் துறை மற்றும் கைத்தறி துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று (25.11.2021) நடைபெற்றது. இதில், தமிழ்நாடு மாநில உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்துகொண்டார். 

 

அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சக்கரபாணி, “நாட்டில் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டினால் குடிமக்கள் பாதிக்கப்படும் நிலையைப் போக்கும்விதமாக இத்திட்டம் அமைந்தது. தமிழகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை குறிப்பாக சமூகத்தில் எளிதாக பாதிக்கப்படும் மக்களுக்கு உறுதி செய்யும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறது. கடந்த 40 ஆண்டுகளாக இந்தப் பொது விநியோகத் திட்டம் தமிழகத்தில் இருந்துவருகிறது. இதில் மக்கள் அனைவரும் பயனடையும் விதமாக கடந்த 2007ஆம் ஆண்டு ஊட்டச்சத்து மிகுந்த உணவு சிறப்பு வினியோகத் திட்டம் முன்னாள் முதல்வர் கலைஞரால் அறிமுகப்படுத்தப்பட்டது. 

 

அதன் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ஒரு கிலோ துவரம்பருப்பு, ஒரு லிட்டர் எண்ணெய் மானிய விலையில் வழங்கப்படுகிறது. தமிழகத்தின் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் புதிய அரசு அமைந்தவுடன், 2 கோடியே 90 லட்சம் குடும்ப அட்டை தாரர்களுக்கு 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை ரூபாய் 978 கோடி செலவிலும், அதேபோன்று தலா 4,000 ரொக்கத் தொகையும் கரோனா நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வரும் ஜனவரி மாதம் 21 உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பு 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1.161 கோடி செலவில் வழங்கப்பட உள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் 650 சமூக உணவகங்களை அம்மா உணவகம் என்ற பெயரில் உள்ளாட்சி அமைப்புகள் நடத்திவருகின்றன. இதில் மிக குறைந்த விலையில் உணவு வழங்கப்படுகிறது. வெளிமாநில தொழிலாளர்கள் உள்ளிட்டோர் இந்த உணவகத்தில் பயனடைகின்றனர் மற்றும் இதர பேரிடர் காலத்தில் இந்த உணவகங்களில் கட்டணங்கள் இல்லாமல் உணவு வழங்கப்படுகிறது.

 

இது போல், வருங்காலங்களில் 500 சமுதாய உணவகங்கள் கலைஞர் உணவகம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் தொடங்கப்பட உள்ளது. அதற்கான திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு உணவகத்தை நடத்த சராசரியாக மாதம் 3.5 லட்சம் செலவாகிறது. இத்திட்டத்தை வெற்றிகரமாக தொடர்ந்து நடத்தவும் விரிவுபடுத்தவும் ஒன்றிய அரசின் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013இல் 100 விழுக்காடு நிதியுதவி வழங்கப்பட வேண்டும். புதிய உணவகங்கள் திறக்கப்பட்டாலும் தற்போது உள்ள அம்மா உணவகங்கள் வழக்கம்போல் செயல்படும். 

 

நெல் கொள்முதல் தீர்ப்பது குறித்து ஒன்றிய அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதில் 17 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக உயர்த்தி தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஒன்றிய அமைச்சர், 19% ஈர்ப்பதம் கொண்ட நெல்லை கொள்முதல் செய்ய அனுமதி வழங்கியுள்ளனர். அதேபோல் மற்றொரு கோரிக்கையாக, தமிழகத்தில் அரைக்கப்படும் பச்சரிசியில் ஒரு லட்சம் டன்னை அருகில் உள்ள மாநிலங்களுக்கு இந்திய உணவுக் கழகத்தின் மூலம் ஒப்படைத்து, அதற்கு ஈடாக ஒரு லட்சம் டன் புழுங்கலரிசியை வழங்கிட வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். இந்தியாவைப் பட்டினி மற்றும் சத்துக்குறைவு இல்லாத நாடாக மாற்றுவதில் தமிழகமும், முதல்வர் மு.க. ஸ்டாலினும் என்றென்றும் துணை நிற்பார்கள். இந்த ஒன்றிய அரசின் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் இவை அனைத்தும் விரிவாக தெரிவிக்கப்பட்டது” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.